Mittwoch, Januar 25, 2006

வாழ்க்கை ஒரு களம்.

வாழ்க்கை ஒரு களம்.

கருத்தக்களையும்,அது மேவிக்கொள்கிற பல் துறைகளையும்.ஒருகிணைப்பதற்கானவொரு திட்டமே செயல் வடிவமாகிறது.செயலைச் செய்வதால்தான் மனிதனின் ஆளுமை வெளிப்பட்டது.

புவியின் தோற்றத்தை,அது வழங்கிய இயற்கையை மனிதன் மாற்றியமைத்தான்.-அதனால் மகத்துவம் அடைந்தான்.சேர்த்த செல்வத்தைப் பெருக்க முனைந்தான்.-இதனால் வறுமையுற்றான்.

வறுமை மனிதர்களைக் கொல்கிறது!

செல்வம் மௌனித்துக்கொள்கிறது.

அதன் வீச்சு மனிதரின் வேலையைக் கோருகிறது.ஒரு பிடி சோற்றுக்காய்... ஒரு நாட் பொழுதாக உழைப்பவளுக்கு ஒரு டொலர்ரும் கிடைப்பதற்கரிய பணமாய் சுழல்கிறது. கடல் ஓரேத்தே அவள் குழந்தையை வெள்ளைக்காரன் புணருகிறான்.

ஓராயிரம் துயரம் கடற்கரையில் மேய்கிறது.

உலகத்தின் உச்சியில் குருதிக்குடம்,
உப்புக்கு உணர்வு மரத்த மனித உயிர்கள், உடலைத் தரப்போகும் அந்தக் கணம் தேச மானத்தின் வீழ்சிக்குரிய கணம்.

தேசம் இதைக் கண்ணால் காணாது.

அன்னியச் செலாவணி தேய்ந்து போனால் ஆயுதம் தலைவர்களின் மாளிகைகளை காவல்காக்க வராது.

Keine Kommentare: