Mittwoch, Januar 25, 2006

பண்பு.

பண்பு.

தமிழ் மக்களினது உள்ளார்ந்த பண்பு என்ன?

நட்பு!

"யாதும் ஊரே யாவரும் கேளீர்!"

சரி,
இது போதுமா?

இல்லை!

உலகத்துக்கு தமிழினம் எதைக் கொடுத்தார்கள்??

திருக்குறள்!

போதுமா?

விஞ்ஞானத்தை வழங்கிக் கொண்டிருக்கும் ஐரோப்பியர்கள், எமக்கு இப்போது அனைத்தையும் தர முனைகிறார்கள்.
மதம்,மருந்து,கணிப்பொறி,தத்துவம்...

இப்படி.இது ஒருபகுதியில் வளம் பெறும்போது நம்மிடம் உலர்ந்து போகிறது!!!

நாமோ, இன்னும் காதல் செய்து முடிக்கவில்லை.தியாகராஜர் காலத்திலிருந்து இன்றை விஜேய் காலம் வரைக் காதலில் கண்டுண்டு கிடக்கிறோம்!இது எதனால்?

எம் சோம்பேறித்தனமா,மெத்தனப் போக்கா,அல்லது சமூக அக்கiறியின்மையா?

இல்லை!


அப்போ எதுதான் இந்தத் துர்பாக்கிய நிலைக்குக் காரணம்?
பணம்!-அடுத்து?

அரசு? ஒருபகுதி உண்மைதான்!

மறு பகுதி?

உலகத்தின் வல்லரசுகள்,
நமது இயலாமைமிக்க பொருள் வலு,
மற்றும் எமது நடுத்தரத் தொழிலகங்கள்.


உலகப் போட்டியோடு நமது விஞ்ஞானிகளால் போட்டியிட முடியவில்லை.
எமது அறிவாளிகள் தமிழ்ச் சமுதாயத்துக்குப் பயன்பட முடியாது உலக வல்லரசுகளின் பெரும் வலுவுக்கு இன்னும் வலுச் சேர்ப்பது முக்கியமான காரணமாகிறது,எமது தேய்வுக்கு.

தமிழ் மொழிக்கான நிலத் தோற்றமும்,பொருள் வலுவுமிருந்தும் நாம் அந்தத் தேட்டத்தைப் பறி கொடுத்து வருகிறோம்.

இவை குறித்துக் கருத்தாடுவதும்.வளம் பெறுவதும்,அதைப்பற்றிப் பிடித்தபடி பக்குவமாய் எதிர்க்கருத்தாடி நாம் உயர்வதும் எமது தமிழ் மொழிக்கும் அதைப் பேசும் ஆறுகோடி மக்களுக்கும் அவசியமாகிறது.

இதனால் கருத்துக்களுக்கூடாகக் கைகோர்ப்போம்!

அந்தக் கைகளை இன்னும் பலப்படுத்துவோம்,குறைந்த பட்சமாவது அறிவுடைய மக்களாக நாம் மாறுவதற்கு.

Keine Kommentare: