Sonntag, Februar 25, 2007

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும்...

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:(2)





"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."



(தொடர்:2)



இன்றிருக்கும் நமது வாழ் நிலையானது மிகவும் கீழ்த்தரமான கருத்தியல் ஆதிக்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட வாழ்வாகும்.இதில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு பொருட்டல்ல நமக்கு.ஏனெனில் சமூகத்தின் எந்தத் தரப்பை நோக்கினும் அது ஆதிக்கக் கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் நிலையில் பற்பலர் மிகவும் கிழ்த்தரமாக மக்களையொடுக்கும் கருத்துக்களோடு இன்னும் ஐக்கியமாகக் கிடக்கிறார்கள்.அவர்கள் தம்மை அறியாமலே நம்மை அடக்கும்-ஒடுக்கும் கருத்தியலோடு ஒன்றிப் போயுள்ளார்கள்.இத்தகைய நபர்களை வலைப் பதிவில் மிக இலகுவாக இனம் காண முடியும்.இவர்கள் நீலகண்டன்களை விட ஆபத்தானவர்கள்.நீலகண்டனோ தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று பிரகடனப்படுத்தி எழுதி வருபவர்.அவர் ஒரு பெரிய அமைப்பு.போதிய நிதியும் உழைப்பும் அவருக்கு உண்டு,அகவே அவர் ஒரு நிறுவனம்.எனவே இத்தகைய அமைப்பு-நிறுவனம் உழைக்கும் மக்களுக்கு எதிரானதென்பதும் அது ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிரானதென்பதையும் நேரடியாகப் பிகடனப்படுத்திக் கொண்டு இயல்பாகச் சமுதாயத்தை கருத்தியல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் அடக்கி,அழித்து வருகிறது.இது புற நிலையாகத் தன்னை உழைக்கும் மக்களின் எதிரியென்றே இனம் காட்டுகிறது.ஆனால் வலைப் பதிவில் சைவத்தையும் தமிழையும் காப்பதென்ற போர்வையில் எழுதும் உணர்வும்,கி.வா.என்ற பார்ப்பானை தூக்கிவைத்தழும் பாரிஸ் யோகன் என்ற பதிவரும் இந்தப் பார்ப்பனியத்தால் தடுதாட்கொள்ளப்பட்ட நூறுகோடித் தென்னாசிய மனிதர்களுள் இருவர்.இவர்களைப் போன்ற இன்னும் பல மனிதர்கள் இந்த வலைப் பதிவில் இந்து என்றும் கத்தோலிக்கர்கள் என்றும் மற்றும் அல்லாவின் குஞ்சுகள்"நாம் இஸ்லாமியர்கள்-முஸ்லீம்"என்றும் தம்மைப் பிரகடனப்படுத்தியபடி தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்கள்.




இந்த உலகம் தனது சிக்கலான உருவாக்தின்படி உயிரினங்களை மிகவும் வருத்தி வருகிறது.ஒரு புறும் மனிதர்களே மனிதர்களுக்கு எதிராக இருக்கும்போது இயற்கையும் மனிதர்களை மிகவும் கீழாக ஒடுக்கும் இந்தப் புவிப் பரப்பின் நிலையில், மனிதர்கள் எப்போதும் தம்மைப் பற்றிய மிகப் பாதுகாப்பான உணர்வால் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இத்தகைய மனித மனமானது என்றும் தன்னைப் பாதுகாப்பதில் தன்னைவிட முன்னேறிய இயற்கையின் முன் எதுவுமற்ற வெறும் துரும்பாக நிற்கிறார்கள்.இவர்களிடம் எந்தப் பிற்போக்குக் கருத்தும் எடுபட்டு விடும்.இத்தகையவர்களை உதாரணம் காட்ட எங்கள் பாமரப் பெற்றோர்களை இனம் காட்ட முடியாது .அவர்கள் பாமரர்களாகவே இருந்திருக்கிறார்கள்.ஆனால் தம்மை அறிவாளிகளாகக் காட்டும் இந்த உணர்வு,யோகன் பாரிஸ் போன்றவர்கள் உண்மையில் வெறும் நாணல்கள் போன்றவர்கள்.இவர்களிடம் அறிவின் பகுப்பாய்வு-சுயசிந்தனை-கேள்வி கிடையவே கிடையாது.இத்தகைய கோமாளிகள் வலை பதியும் இந்தச் சூழ் நிலையில் நாம் கருத்தாடுவது மிக மிக அவசியமாகும்.எனினும் நம்மிடம் போதிய உழைப்பில்லை.நாம் தனித்துக்கிடக்கிறோம்.உயிர் வாழ உழைக்கும் வேலையானது நம்மை உயிரோடு புதைத்தபடி, நமது கால நேரத்தை உருவி விடுவதால் இத்தகைய ஆதிக்கக் கருத்தாளர்களை உடனுக்குடன் எதிர் கொள்ள முடிவதில்லை.




இருந்தும் பார்ப்பனியத்தின் கருத்தியல் வலுவானது இத்தகைய மனிதர்களைவிட நமது அன்றாடத் தொடர்பு ஊடகம் அனைத்திலும் மிகவும் ஆளுமையைச் செலுத்தி அது கல்வி,செய்தி ஊடகம் மற்றும் அனைத்துப் பாண்பாட்டுத் தளத்திலும் தனது வேரை ஆழமாகப் பதியம் போட்டு வைப்பதால் அது நாம் பேசும் மொழியிலும் நுகரும் கலை இலக்கியத்திலும் மிகவும் வலுவாக வேரைப் பதித்து நம் அன்றாட மூச்சோடு அது அன்னியோன்னியமாகிச் சகலதிலும் சங்கமித்துவிட்டது!இந்த ஒரு வாழ்வு மெய்ப்பாட்டோடு நாம் கருத்தாடுவது மிகவும் சோம்பேறித்தனமான மனதை எமக்குத் தருகிறது.சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் பார்ப்பனியத்தினதும் மற்றும் மதவாதக் கருத்தியல் ஒடுக்கு முறைகளாலும் மக்கள் உளவியல் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் அல்லேலோயாவின் ரீ.வி.நிகழ்ச்சியைப் பாருங்கள்! எத்தனை இலட்சம் அப்பாவிகளை இவர்கள் ஏமாற்றித் தமது பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கி வைத்தபடி அந்த ஏழை மக்களை உளவியல் ரீதியாக ஒடுக்கி வருகிறார்கள்!




இதையெல்லாம் பார்க்கின்றபோது நாம் அமைப்பாகச் செயற்பட்டு இதை அம்பலப்படுத்தியாக வேண்டும்.திரு.ஆபிரகாம் கோவூர் போன்று நாம் தனிமனிதர்களாகச் செயற்பட்டால் இதனால் எதுவும் நிகழப் போவதில்லை.ஆதலால் அமைப்பாகச் செயற்பாடுகளை வகுக்க வேண்டும்.இங்கே தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அத்தகைய நடவடிக்கையில் இறங்கிச் செயலாற்றி வருகிறது.இது காலத்தால் அவசியமாக நம்மிடம் அறை கூவிக் கையளித்த வேலைத் திட்டம்.இதை நமது பண்பாட்டு அரங்கில் மிகச் செழுமையாக முன்னெடுத்தாக வேண்டும்.இந்த நோக்கோடு மேலும் நகர்வோம்.



பருப் பொருள் வேண்டிய பாரிய அடி:



இந்தப் பருப் பொருளானது உலகத்தின் மிகவும் சூக்குமமான கருத்து என்பதும் அது உலகத்தின் அனைத்துப் புரிதல்களுக்கும்,உண்மையைத் தேடிய அனைத்து தோற்று வாய்க்களுக்கும் முதன்மையானவொரு விஞ்ஞான எடுகோளாக இருந்தது.புலப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக விளக்கப் படுத்தப் பொருள் முதல் வாதிகளிடமிருந்த இந்த ஆயுதம் மிகவும் சரியானதென்று அன்றைய நம் பொருள் முதல் வாதிகள் நம்பினார்கள்.அவர்கள் இதை நம்பிக் காரியத்தில் இறங்கியபோது எல்லோரும் இதைச் சாதகமானதாக் எடுத்துக் கொண்டு தமது பகுப்பாய்வை முன் வைக்கத் தொடங்கிளார்கள் .அவர்களில் முதன்மையானவர் ஜேர்மனியப் பொருள் முதல் வாதியான லூட்விக் பொய்யர்பக் என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.இவரது வருகைக்குபின் பொருள் முதல் வாதிகளிடம் ஒரு துடிப்பு ஏற்பட்டது.




உலகத்தின் எல்லையில்லாப் பொருட்களின்,மூலகங்களின் வேறுபட்ட குணாம்சங்களுடைய மாறும் பொருள்களின் அல்லது புலப்பாடுகளின் முழுநிறைக் குணாம்சங்களை இந்தப் பருப் பொருள் எடுத்தியம்புவதாக லூவிட்க் பொய்யர்பக் கருதியபோதும் அவரால் இதற்கானவொரு மிகவும் கறாரான விஞ்ஞான விளக்கத்தைத் தர முடியாதபோது,அதற்காக அவர் மண்டையைப் போட்டு உடைக்கவில்லை!இங்கேதான் வந்தது ஒரு எதிர்பாராத கிளைமோர்த் தாக்குதல்.




பிரஞ்சுக்காரப் பொருள்முதல் வாதகளும்,ஜேர்மனியப் பொருள் முதல் வாதிகளும் ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளோடும் இந்தப் பருப் பொருளைப் போட்டுக் குழப்பத் தொடங்கினர்.பரப்பொருளின் கட்டமைப்பை இயற்கை விஞ்ஞானத் தரவுகளோடு போட்டுக் குழப்பியெடுத்துச் சாரத்தை மிகவும் பலவீனமாக்கினர்.இருபதாம் நூற்றாண்டின் அதிவேகமான முதலாளிய வளர்ச்சியானது இத்தகைய நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.ஒரு புறும் ஜந்திரங்களின் வளர்ச்சி மறுபுறும் யுத்தம்.ஆதிக்கத்துக்கான ஆயுதப் பலத்தில் மூழ்கிய விஞ்ஞானம் மேன்மேலும் குழப்பத்தில் வீழ்தியது பருப் பொருளின் சாரத்தை.



ஏலவே நான் கூறியபோது பருப்பொருள் என்பதை அவர்கள் உணரும் காலத்தில் அதைப் பிரிக்க முடியாதென்றும் மாற்ற முடியாதென்றும் கருதிய காலத்தில் என்றே சொன்னேன்.அடைப்புக் குறிக்குள் இப்போது பிரிக்கக் கூடியதென்றும் எழுதியதை வாசகர்கள் இப்போது கவனத்துள் எடுக்கவும்.




மின்னணுக் கண்டு பிடிப்பானது இந்தப் பருப்பொருளைத் தலை கீழாகப் புரட்டிப்போட்டது.மிக மிக நுணுக்கமான துகள்களைக் கொண்டது அணுவென்றும் அல்லது மின் அணுவென்று இக் கண்டுபிடிப்புச் சொன்னது.அயன் ஸ்ரைன் போன்ற விஞ்ஞானிகள் "அணுவைப் பிளந்து அதனால் பயன் பெற முடியுமென்று" சொன்ன போது அதன் அழிவுப் பக்கத்தையும் ஒரே தடவையில் புரிந்து இப்படிச் சொன்னார்கள்."Das Problem dieser Welt ist nicht die Atombombe,sondern das Herz des Menschen."("உலகத்தின் பிரச்சனை அணுக் குண்டல்ல மாறாக மனிதர்களின் இதயமே."அய்யா அயன் ஸ்ரையின் மனித இதயமல்ல அய்யா!முதலாளிகளின் உற்பத்தி ஊக்கமே பிரச்சனையாக அன்றும் இன்றும் இருக்கிறது.)எனினும் ஓட்டோ கான் அணுவின் பல கட்டங்களைச் சொன்னதன் கையோடு ஒவ்வொரு கட்டத்தையும் சாத்தியப்படுத்தி அணுக்குண்டை அமெரிக்க முதலாளிகளுக்கு அளித்த ஓப்பன் கைமர் உலகத்தில் கீரோசீமா மற்றும் நாகசாகியின் சாம்பலின் சொந்தக் காரனானான். "நாசமாப் போவான்-அவன் குடும்பமே,சந்ததியே அழிந்து போ!".இப்படி அணுக் குண்டைக் கண்டு பிடித்தவனைத் திட்டுகிறோமென்றால்,அணுக் குண்டையேவிட அதிக ஆபத்தானா பார்ப்பனியத்தையும் அதைத் தூக்கி நிறுத்தும் பார்ப்பனர்களையும் இவர்களது பொருளாதார முன்னெடுப்பையும் எப்படித் திட்டவா அல்லது வரலாற்றில் இருந்து அழித்துப் புதியதைப் படைப்பதா முக்கியம்? இது கேள்வி.நாம் மேலே போவோம்.




அணுத் துகள்கள் பிரிக்க முடியாது,அது நிலையானதென்பது பொய்த்துப் போனபோது பருப் பொருளின் வாழ்நிலைதான் இந்தக் கோதாரி பிடித்த பிரபஞ்சத்துக்கு
அடிப்படை(இதுகூட ஒரு வகையில் கருத்தியல்தான்.அதனால் அது "பொதுகிட்டுபோச்சு நைனா" என்பது உண்மைதான்)என்ற கூற்றைப் பல இயற்பிலாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்களே,அப்பப்பா நம்மட கருத்துமுதல் வாதக் கொழுந்துகள் துள்ளிக் கூத்தாடி "பாட்டாளிகளின் சித்தாந்தம் தவறானது.அது பொய்.உலகைப்படைத்தவனே நம்மைப் பணக் காரர்களாகவும்,வேலைக் கார மிருகங்களை பஞ்சப் பரதேசிகளாகவும் படைத்தார்கள்.அது அவர்கள் முற்பிறப்பில் செய்த பழி"என்று பாடத் தொடங்கினார்கள்.



அணுத் துகள்கள் எலக்ரோன்களாக உடைவதும்,அவற்றினது பொருண்மையானது இயக்கத்தினது வேகத்தைச் சார்ந்திருக்கிறது.இதனது அர்த்தம் பருப்பொருளென்பது மாற்றப்படுகிறது என்பதே இயற்பியலாளர்களின் வாதமாகியது.இந்தச் சங்கதி இதுவோடு நிற்கவில்லை.மேலும் அணுவின் எல்லாச் சூத்திரங்களையும் தோண்டிக் கொண்டே விரிவடைந்து பருப் பொருளை ஒரு வழி பண்ணியது.இத்தகைய கண்டுபிடிப்பில் எலக்ரோன்கள்,பொசிட்ரோன்கள் போன்றவன்றின் ஒளி வீச்சு மாற்றம் குறித்த கண்டுபிடிப்பைத் தாண்டி இயற்கை விஞ்ஞானத்தின் நெருக்கடியை இன்னும் ஆழமாக்கியது.




ஒரு நிலையில் எதிர் மறைச் செயலுடன் கூடிய பருப் பொருளின் இரண்டு பாகங்கள் ஒளியாக மாறுவது உண்மையாகிறது.இந்தவுண்மையானது பருப் பொருள் மறைந்து உலககே மாயமாகிறதாகி விடுகிறது.அடாடா அத் வைதம் இங்கே எவ்வளவு உண்மையாக மலர்கிறது பாருங்க எண்டார்கள் நம்ம அரவிந்தன்கள்.
என்ன சொல்கிறது அத்வைதம் உககே மாயம்.ஏழாம் நூற்றாண்டளவில் இது உலகத்தை மாயை என்றது.அதை இங்கே பொருத்திய பார்ப்பனப் பண்டாரங்கள் இது குறித்துப் பல பக்கக் கட்டுரைகளை எழுதித் தள்ளியது அன்று.இன்றும் அரவிந்தன் எழுதுவதற்கு இத்தகைய அடிப்படைகளே காரணமானது.எனினும் அன்றைக்குத் தமது வாழ்வையே கருத்துமுதல்வாதிகளுக்கு எதிராகத் தியாகம் செய்த பரம்பரை விடுமா?அறிவுதானே நமது மூலதனம்!இந்தா பார். உங்கட இந்தக் குறுகிய மகிழ்ச்சியை உடைத்து நாம் சொல்வதின் உண்மைதான் உண்மையின் இருப்பு என்று நிறுவிக் காட்டுவதாகப் பொருள்முதல்வாதிகள் வெளி கிட்டுத் தமது மூளைகளைக் கசக்கப் பிழிந்தார்கள்.



இயற்பியலாளரின் கண்டுபிடிப்புகளின் விஞ்ஞானத்துக்கு புறம்பான கருத்துக்களை தமக்குச் சாதகமாக்கிய உலகத்தின் ஒடுக்குமுறை நிறவனங்களான மதம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மார்க்சியத்தின் இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைப் புதை குழிக்குள் அனுப்பும் தொனியில்"மார்க்சியம் என்பது இன்னும் சில காலம் விடலைகளின் மனதிலும் அதற்குப் பின் பொருட்காட்சியகத்திலும் இருக்கும்"என்றார்கள்.இப்போது அரவிந்தன் நீல கண்டனைக் கொஞ்சம் மனதில் இருத்துங்கள் அவர் என்ன சொல்கிறார்?"மார்க்சிய அரைகுறைகள்... பெரியாரென்ற பயங்கரவாதி"என்ற தொனியில் எழுதுகிறாரா அதற்குக் காரணம் இந்த வகைக் காரணங்களின் மேற் புல் மேய்ச்சல்தான் காணமாகிறது.



அப்பர்களே!அருமை அம்மணிகளே!!இன்றைக்குச் சுமார் ஆறு மாதத்துக்கு முன்பே ஒரு பெரிய விஞ்ஞானி-கொரிய உயிரியலாளர் திரு.உவோங்(Hwang) உலகத்துக்குப் பொய் யொன்றை அவிழ்த்துவிட்டு,இறுதியில் தனது அனைத்துப் பதவியையும் இழந்தது ஞாபகமிருக்கா?



"König der Klone"(குலோன் இராஜா)என்றும்; Fälschungsskandal um Klonforscher Hwang macht «Science» sprachlos(தவறான தரவுகள.; குலோன் ஆய்வாளரின் ஊழல்.மெளனித்திருக்கிறார் உவோங்) என்றும் நாம் அறிந்தோம்.அய்யன் உவோங்கின் கருத்துக்களும் அவரது தரவுகளும் குலோன் ஆய்வில் பொய்பித்தபோது அங்கே வெற்றி கொள்ளப்பட்டது உண்மை!அது வெற்றிடமொன்றை விட்டுத் தள்ளவில்லை.மீளவும் ஆய்வில் அவரைத் தள்ளி உண்மைக்கு முடிசூட்ட அவர் மீளவும்,மீளவும் முயற்சித்தபடி.ஏனென்றால் உண்மையென்பதை உழைப்பால் மட்டுமே நிறுவ முடியும்.அவரதை நிறுவுவதற்குக் காலமெடுக்கலாம்.இதுதான் இந்த நிலையிலும் திடமுடன் போராடும் அனைத்துத் தரப்புக்கும் காரணமானது.இந்த உவோங்கின் உறுதியோடு அன்றே இறங்கியவர்கள் பொருள்முதல் வாதிகள்தான்.



இந்தப் பருப்பொருளின் கருத்துநிலை வேண்டிய பாரிய அடியானது சோஷலிச இலட்சியத்தையே பொய்யானதெனக் கருதும் அளவுக்குக் கருத்துமுதல் வாதிகளைப் பிரச்சாரத்துக்குள் தள்ளி பாட்டாளிய வர்க்கத்தை அதன் போராட்டச் சித்தாந்த்தைப் பொய்யாக்க முனைந்தது.இத்தகைய நிலையில்தாம் பார்ப்பனியமும் தன்பாட்டுக்குக் கருத்துமுதல் வாதத்தால் தென் கிழக்காசியத் தத்துவப் பரப்பை ஆக்கிரமித்தது.அது கொண்டாடிய பரந்தாமன் பாற்கடலைக் கடைந்து உறிஞ்சிய நஞ்சு பாட்டாளிய அதாவது ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரானதாக இருந்தது.பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச இலட்சியத்தை மிகவும் வெறுப்புடன் விமர்சிக்கும் அரவிந்தன் நீல கண்டனிடம் கருக்கொண்டு மையங்கொண்ட மேற்காட்டிய பருப்பொருளின் தோல்வி மேலும் அவரைப் போன்றவர்களைக் கருத்துமுதல் வாதிகளிடம் சரணாகதியடைய வைக்கிறது.இங்கேதான் கருத்துமுதல் வாதத்தின் மிகக் கெடுதியான உளவியல் ஒடுக்கு முறை தன்னை அம்பலப்படுத்தி தான் உடமை வர்கத்தின் பக்கதிலேயே படுத்துக் கிடந்து பாட்டாளியளைப் பாடையில் அனுப்பும் மதமே என்று நிரூபித்தது-நிரூபித்து வருகிறது.



பொருள் முதல் வாதிகளின் அன்றைய இயக்க மறுப்பியில் பருப்பொருளை தோல்வியின் வெளிம்பில் தள்ளியபோதும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே பெளத்தம் சொன்ன"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரமென்ற"உண்மையை உள்வாங்குவதில் இருந்த தயக்கம் இயக்க மறுப்பைச் செய்தது.எனினும் கேகேல்;(Hegel)போன்ற விஞ்ஞானிகள் இயக்கவியலுக்கு ஓரளவு முக்கியம் கொடுக்கத் துவங்கியபோது அத்தகைய நிலையில் வரலாற்று ஆசான் லெனின் மிகப் பெரிய சாதனையை நிறுவிக்காட்டினார்.அவரே இந்தப் பொருள் முதல் வாதிகளின் கண்ணுக்குப் புலப்படாது இயக்க மறுப்பியலைச் சுட்டிப் பருப் பொருளின் அடிப்படையை இயக்கவியல் பொருள் முதல் வாத்தத்துகுச் செல்லும்படி உயர்த்திப் பாரிய நெருக்கடியைத் தொடைத்தெறிந்து இந்தப் பாழாய்ப்போன கருத்து முதல் வாதக் கண்றாவிகளை நாக்கிளிப் பூச்சிகளாக்கினார்.



பருப்பொருள் என்பது என்றைக்குமே எந்தவிதமான ஸ்த்தூலமான நிலையான,மாற்றமுடியாத வெளிப்பாடுகளாகச் சுருங்கக் கூடியதல்ல.அது இயங்குவது.இயகத்தில் இருப்பது.



"மனிதர்களுக்கு அவர்களுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுகின்ற புற நிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற தத்துவஞான வகையினமே பருப்பொருள் எனப்படும்.புற நிலையான யதார்த்தம் அவற்றிலிருந்து சுதந்திரமாக இருந்து புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்பட்டு,படம்பிடிக்கப்பட்டு,பரிபலிக்கப்படுகிறது."என்று நம்ம ஏங்கல்ஸ் இயக்கவியல் பொருள் முதல் வாத்தில் நிறுவிக்காட்டினார்.



உணர்விலிருந்து புற நிலையாகவும்,சுயேற்சையாவும் நிலவும் இந்தப் பிரபஞ்சத்தையும் அதன் பல்வேறு வகைப்பட்ட புலப் பாடுகளையும் குறிப்பதற்கான தத்துவஞானக் கருத்தமைவாகவே நம் மார்க்சிச முன்னோடிகள் பருப்பொருளை சுட்டலானார்கள்.இதனால் அது இயக்க மறுப்பிலிருந்து மிகவும் முன்னேறி இன்றைய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இனி வரும் கண்டு பிடிப்புகளுக்கு ஆதாரமான தத்துவஞானச் சுட்டலாக கொலுப் பெற்றது.எனவே பருப் பொருள் என்பது ஒரு புற நிலை யதார்த்தம் என்பதை எவராலும் மறுக்க முடியாதாகிறது.விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அதாவது நம்ம உவோங் போன்றோரின் னுநளழஒலச¨டிழரெமடந¨ளெயூரசநஇ னு§யுஇ னு§ளு போன்ற வற்றுள் நிகழ்தப்பட்ட இயற்கைச் செற்களின் திட்டவட்டமான தரவுகள் இந்த உண்மையை அதாவது புற நிலையான யதார்த்தம் என்றதால் அகவயக் குறைபாடான கருத்தியல் தகவமைப்பான இறையுட் கோட்பாட்டையும் அதைக் காவி வரும் "காவி,அங்கி,குல்லா"க் காரரின் கேனைத் தனமான கருத்தியல் பிரச்சாரத்தையும் உடைத்தெறிந்து மக்களின் உண்மையான இயக்கவியல் பொருள் முதல்வாதப் பருப்பொருள் உண்மையை உறுதிப் படுத்தி நிலைப்படுத்தியது.



பார்பனியமானது தன்னளவில் தத்துவ விளக்கமாகவும்,கருதுகோளாகவும் நிலவுகின்ற ஒரு நிலையில் அது புற நிலையாகப் பிரதியெடுக்கப்படும் தத்துவக் கண்ணோட்டம் உப நிஷதமாகவும்,வேதங்களாகவும் விரிவுறுகிறது.இது கற்பிக்கும் தத்துவார்த்தப் புரட்டல்களே மென்மேலும் அதை அகிம்சா வாதக்கண்ணோட்டமாக மாற்ற முனைகிறது.ஆனால் அக நிலையாக அது வடித்து வைத்திருக்கும் மனித சாரம் மனிதர்களைக் கூறுபடுத்தி அடிமைத்தளையில் தொடர்த்து இருத்தி ஆளும் வர்க்கத்துக்கு அதாவது இன்றைய இந்தியப் பொருளாதாரத்தைதைத் தமது கையுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய மற்றும் பனியாச் சாதிகளைக் காத்து வருகிறது.இது அக நிலையாகவும் புற நிலையாகவும் தன்னை ஒரு நிறுவனமாக நிலைப்படுத்த உதவிய பொருளாதார அடித்தளம் முற்று முழுதிலும் பார்ப்பனியத்தை முழு இந்தியச் சட்டவாக்கமாக மாற்றியதன் கொடும் நிகழ்வே இதைத் தொடர்ந்து நிலைப் படுத்திக் காத்து வருகிறது.இதற்கு உடந்தையாக நமக்குள் நிலவும் சைவம் முதல் இந்து மதத்தின் அனைத்துப் பிரிவுகளும் பண்பாட்டுத் தளத்தைப் பார்ப்பனியத்துக்கு ஏற்ப்படுத்திக் கொடுத்துள்ளது.



எனவே மதம் என்பது இங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் வாழ்வியல் மதிப்பீட்டை உருவாக்கும் நிலையில் அது மக்களின் மனதைக் கருவியாக்கி ஒவ்வொரு உடலையும் பார்ப்பன உடல்களாக்கியுள்ளது.அந்தவுடலை மீளவும் பண்பாட்டு நுகர்வில் சாதியக் கட்டுக் கோப்பால் தாழ்மைப் படுத்தியும் உயர்த்தியும் கூறுபோட்டு மிகவும் கொடூரமான நிறுவனமாகத் தொடர்கிறது.ஆதலால் பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதார உறவில் மேல்மட்ட அமைப்பாகவும் அதேயிடத்தில் மேல்மட்டத்தைத்தாண்டிய கீழ்மட்டத்தை நிர்ணயிக்கும் பரப்பொருளாகவும் நிலவுகிறது.இது உணர்வுகளுக்கு அப்பால் நிலவுகின்ற இந்தப் பிரபஞ்சத்துக்கு நிகராகத் தன்னை முதன்மைப்படுத்தி மக்களின் அனைத்து நுகர்வுக்குள்ளும் வந்து தொலையும் பாரிய உணர்வு நிலையாக மூளையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது.இது இந்திய வம்சாவழி அனைவரையும்-அனைத்து சாதிகளையும் ஒருங்கே வென்றவொரு கருத்தியல் நிறுவனமாக இருப்பதால் அதை பண்பாட்டுப் புரட்சியூடாகத் தோற்கடிப்பதற்கான முன்னெடுப்போடுதான் வெல்ல முடியுமென்பதாகிறது.இதுவன்றிப் பொருளாதார உறுவுகளின் மாற்றத்தால் மட்டும் இதை உடைத்திட முடியாதாகிறது.இங்ஙனமே பார்ப்பனியத்தை வரையறுப்பது நமக்கு அவசியமாகும்.


இந்த நிலையில் மனிதரின்மீதான மதங்களின் ஆதிக்கம் பற்றிப் புரிந்து மேற்கொண்டு இவர்களை அம்பலப் படுத்துவோம்.


தொடரும்...

25.02.2007

Sonntag, Februar 18, 2007

நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1

"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."


(தொடர்)

முதலில் நாம் பார்ப்பனியத்தை எதிர் கொள்வதென்பது வெறும் கருத்தியல் தளத்தில் இரண்டு நபர்களுக்குள் இடம்பெறும் விவாதமாக எடுக்கப்படாது.இதை முதலில் புரிந்து கொள்ளும்போது உண்மையென்ற ஒரு நிலை நம் முன் வந்து தொலையும்.அந்த உண்மை என்பது என்ன?பார்ப்பனியம் ஒரு குறிப்பிட்ட உயர்த்திக் கொண்ட சாதியையோ அன்றிப் பின்பற்றப்படுகின்றவொரு மதத்தையோ குறிப்பிடப்படுவதில்லை இங்கே.

இந்தச் சங்கதியானது இந்தியத் துணைக்கண்டத்தில் மிகவும் பலாத்தகாரவடிவத்தில் மக்களையொடுக்கும் ஒரு அதிகெடுதியான ஒடுக்குமுறைக் கருத்தியல் நிறுவனமாகச் செயற்படுகிறது.அது மனித ஆழ்மனத்தில் புதிய வகைமாதியானவொரு ஆதிக்க மனிதனை உருவாக்கி வைத்துள்ளது.தனக்குள் வாழும் சக மனிதனை தன்னிலும் கீழான நிலைக்குள் தள்ளி அவனை-அவளை ஒடுக்கும் பாரிய ஒடுக்குமுறை மனோபாவத்தைத் தகவமைக்கும் உளவியலை இந்தப் பார்ப்பனியம் சாதிகள்,மதம்,பண்பாடு கடந்து,அனைத்துத் தரப்பினரிடமும்(அது பிரமணரென்ன பிள்ளைவாளென்ன தலித்தென்ன எல்லாத் தரப்பிடமும் தனது வேரை அகலப் பதித்துள்ளது)ஒடுக்குமுறைக் கருத்தியலாக உள்வாங்கப்பட்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் ஒடுக்கு முறை நிறுவனமாகச் செயற்படுகிறது.இதுதான் மிகப் பெரிய உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாம் முன் வைக்கும் நமது வாழ்வியல் மெய்ப்பாடாகும்.


உண்மை-யதார்த்தம்,மெய்ப்பாடு இத்தகைய வார்த்தைகளின் பின்னே நிலவுகின்ற வாழ்வியல் முரண்பாடுகள் வலிய பொருளாதாரக்கட்டமைப்பால் முன் தள்ளப்படுபவை.இந்திய சமுதாய அமைப்பில் நிலவுகின்ற அனைத்து முரண்பாடுகளுக்குள் முதன்மை முரண்பாடானது பார்ப்பனியத்துக்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடாகும்.இந்தப் பார்ப்பனியத்தை எதிர் கொள்ளும்போது,அது குறித்தொரு வரையறை அவசியமாகிறது.அதாவது பார்ப்பனியமென்றால் என்ன?அதன் வியாபித்த சமூகத் தன்மை என்ன?இந்தப் பார்ப்பனியம் எங்ஙனம் மனிதர்களை ஒடுக்குவதற்கான வன்முறைக் கருத்தியல் வடிவமாகவும்-வன் முறை சாராக் கருத்தியல் நிறுவனமாகவும் இருப்பதென்பதை நாம் முதல் அறிவது.மிக அவசியமாகும்.

பார்ப்பனியம் என்ற சமூக உளவியலுக்கு இந்திய மேலாண்மை வர்க்கத்தின் அதீத குவிப்புறுதி ஊக்கத்தின் நிரந்தரச் சுரண்டலை நிறுவிக்கொள்ளும் பொறி முறையுள் முக்கிய இடம் இருக்கிறது.அந்த இடம் பார்ப்பனிய நிறுவனமாகச் செயற்படுகிறது.இதை நாம் வரலாற்றுப் புரிதல்களுடாகப் பார்ப்போம்.

இந்தியச் சமுதாயத்தை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளாதவரை விடிவுக்கான போராட்டம் கருத்தியல் நிலையிலேயே தோற்கடிக்கப்பட்டுவிடுகிறது என்றே நாம் கருதுகிறோம்.இந்தச் சிக்கலைப் புரிவதற்கு நாம் தத்துவார்த்த முறைக்குள்ளாலேயே விளக்கப்படுத்த முடியும்.இந்த அடிப்படை தவிர்ந்த வேறுவகையில் கருத்தியல் பார்வைகளை இலகுவில் விளக்கப்படுத்த முடியாது.இதற்காக நாம் எத்தனை மாதத்தையும் செலவு செய்து இந்தத் தளத்தில் இதை எழுதுவதாகவே முடிவெடுத்துள்ளோம்.அனைத்துப் பிரச்சனைகளையும்-அதாவது நம்மட புலிப் புலம்பல்,ஈழம் ...எல்லாம் இப்போதைக்குக் கிடப்பில் போட்டு,அர்விந்துக்களைச் சந்திப்பதே நம்மட தலையாயக்கடமை.இனி மேலே போவம்.

பருப்பொருள்சார்ந்த வாழ்நிலை வடிவங்கள்.


தத்துவார்த்தத் துறையின் அடிப்படையான கேள்விகளுக்கு அழமான-அறிவார்ந்த மற்றும் மெய்பிக்கபட்ட விஞ்ஞானரீதியாகப் பதிலளிக்க வேண்டுமென்றால் நாம் பருப்பொருள் மற்றும் உணர்வின் குணவியல்பு பற்றிய அறிவை முன்னதாகக் கொள்வதுதான் சாத்தியம்.இன்றைய உலகத்தில் கருத்தியலானது முற்றும் கருத்துக்களால் ஆனாது.அதற்கு உதாரணமாக நாம் அனைத்து மதம் சார்ந்த மொழிவுகளையும்,அது கற்பிக்கும் ஒழுக்கங்களையும் மனதில் இருத்தும்போது மிக இலகுவாகப் பலவற்றைக் குறித்தொரு முடிவுக்கு வர முடியும்.ஆனால் பொருள்முதல் வாதமென்பது பருப்பொருள் பற்றிய கருத்தமைவோடு பாரிய மனிதப் புரிதலைச் சாத்தியமாக்கிறது.அது முன் மொழிவுகளைக்கடந்து இந்தவுலகத்தின் அனைத்து விடயங்களிலும் பாரிய விஞ்ஞான பூர்வமான தெளிவைச் சொல்கிறது.இதுதான் இந்தவுலகத்தின் பாரிய ஒடுக்குமுறை நிறுவனங்களை இனம்கண்டு தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுகிறது.இங்கே பருப்பொருள் குறித்தும் அதன் வாழ் நிலையின் வடிவங்களையும் நாம் முதலில்ப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.இதுவன்றிப் பார்ப்பனியத்தின் காட்டுமிராண்டித்தனமான கருத்தியல் பாசிசத்தை இனம் காண்பது கடினம்.இந்தக் கருத்தியல் பாசிசத்தை திருவாளர் உம்பேர்ட்டோ எக்கோவின் குறிப்புகளிலிருந்து இறுதியில் மிகத் தெளிவாகப் பார்ப்போம்.


பருப்பொருள்,இது என்ன சாமான்?:


மனிதர்கள் கணக்கிலடங்காத வகைவகையான பொருட்கள் மற்றும் புலப்பாடுகளால் சூழப்பட்டு கிடக்கிறார்கள்.இவையெல்லாம் விழிகளுக்குப் புலப்படாத அணுத் துகள்களிலிருந்து மாபெரும் நட்சத்திர மண்டலங்கள் கடந்து கிளெக்சி வரையும்(எட்வின் கூப்பிளின் பெரு வெடித் தத்துவத்தை நாம் ஏற்பவர்களில்லை)சாதரணக் கிருமிகளிலிருந்து உயர் மட்ட மிருகங்கள் வரை,அசேதன உலகின் எளிமையான இயங்கியல் நிகழ்வுப் போக்கிலிருந்து யதார்த்தத்தை மாற்றுவதைக் குறிக் கோளாகக்கொண்ட மனித மூளையின் உணர்வு பூர்வமான மனித நடவடிக்கை வரை பரவிப்படர்ந்துள்ளன.

புராதன காலம் தொட்டு இந்தவுலகத்தின் வேறுபட்ட தன்மைகளினது மூலத்தைக் கண்டுபிடிக்க,அதன் வாழ் நிலைக்கான அடிப்படையைக் காண மனிதர்கள் முயன்று வருகிறார்கள்.(இங்கே பார்ப்பனாகளில் பலர்... அரவிந்தன் போன்றோர் விதிவிலக்கு.ஏனென்றால் இவர்கள் உபநிஷதம் பற்றிய கொள்கையுள் முடங்கி மூலப் பொருள் பிரம்மம் என்றார்கள்.நம்மட ஆட்கள் சொன்னாங்க லோகாயுதம் பற்றி.லோகாயுதக்காரருக்கு எப்போதும் பிரத்தியட்சப் பிரமாணங்கள் அவசியமாக இருப்பதால் அவங்க சொன்னாங்கள்:"நிலம்,நீர்,காற்று,தீ"இந்த நான்குமே மூலப் பொருளாக.பாருங்க இவங்க நம்மட ஆளுக கொஞ்சம் முன்னோக்கித் திங் பண்ண பார்பபனப் பண்டாரங்கள் பிரம்மம் என்று கற்பனை செய்து"தத்துமஸி,அஹாம் பிரஹ்மாஸ்மி"என்று கூறிக் கொண்டு,உலகத்துக்கு எதுங்க ஆதரம் என்றால் "பிரும்மம்"என்றார்கள்.மேலும் கேள்வி தொடர்ந்தால் உடனே "இனிக் கேள்வி கேட்டாய் கம்முனாட்டி ஒண்ட தலை வெடிசிப்போடும் ஆமா!" என்று அப்பவே காதில பூச் சொரிகினார்கள்.)இயற்கைக்கு மேலான ஒரு சக்தி,ஒரு தனி முதலான கருத்து அல்லது உணர்வுதான் உலகத்துக்கான முதற்காரணம் என்று நம்ம அரவிந்துக்கள்-கருத்து முதல்வாதிகள் கருதினார்கள்.நம்மைப்போன்ற(மண்டையில் கொஞ்சம் மயிர் கூச் செறியச் சிரியுங்கோ) பொருள் முதல்வாதிகள் வாதிகள் இயற்கையை அதன் யதார்த்தத் தன்மையிலேயே உணர்ந்தனர்-பார்த்தனர்-கண்டனர்-புரிந்தனர்.

நம்மட ஆட்க்கள் பொருள் முதல் வாதத்தை முன் நிறுத்தியபோது"புத்தஞ் சரணம் கச்சாமே"கோஷ்டிகள் உலகில்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்" என்று ஒரு உண்மையைப் போட்டுடைத்தார்கள்.இந்தத் தரணத்தைக் கடந்து வந்தவர்களான பொருள் முதல்வாதிகள் உலகத்தின் அடிப்படையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக பருப்பொருள் பற்றிய கருத்தமைவைப் பயன்படுத்தினார்கள்.ஆனால் பாருங்க இங்கே பருப் பொருள் என்றால் என்ன?இந்தப் பெரிய பிரமாண்டமான பிரபஞ்சத்துக்கு மூலம் என்ன-ஆதாரமாக இருப்பதென்ன?

இன்று உலகத்தைப்பற்றிய மெய்யான அறிவை மனித குலம்(பார்பனர்கள் அல்ல)பெற்று விட்டதால் மேற் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பற்பல விடைகள் முன் வைக்கப்பட்டு,விடைகள் மாறிய வண்ணமுள்ளன.

நம்மட பண்டையக் காலத் தத்துவக் கிழங்கள் நீர்,காற்று,நெருப்பு,பூமி போன்ற பல்வேறு பரவிப்படர்ந்த பொருட்கள் அல்லது புலப்பாடுகளைக் கொண்டு பருப்பொருளின் பாத்திரத்தை நன்றாகத் துலங்க வைக்க-வர்ணிக்க முனைந்தனர்.பின்னர் அணுத் துகள்கள்(இதைச் சொன்னவுடன் நம்மட அர்விந்துக்கள் என்னே பெரிய அணு?வைசேஷிகம் சொல்லாத அணுவா? என்பார்கள். நாம அதையும் கடப்போம்.ஏனென்றால் பொருளும் உண்டு,மனமும் உண்டு என்பவர்கள் வைசேஷிகர்கள்.இவர்கள் கருத்து முதல் வாதிகளின் கடைக் கோடிகள்)என்று அழைக்கப்படுகின்ற பிரிக்க முடியாதென்ற(இப்போது பிரித்து உபயோகத்துக்குள் வந்த),மாற்ற முடியாதென்ற(இப்போது மாற்றித் தகவமைக்கப்பட்ட),கணிக்கிட முடியாதென்ற(இப்போது கணக்கிடுவதற்கு முடியுமென்றாகிய)மூலக் கூறுகளைக் கொண்டது பருப் பொருள் என்று அன்றைக்குக் கருதப்பட்டது.

தொடரும்...

Samstag, Februar 17, 2007

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும்...

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்.


"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."



இந்தவுலகத்தில் ஒடுக்குமுறையாளர்கள் எப்படி-எப்போது உருவானார்கள் என்பது முக்கியமல்ல.ஆனால் இப்போதும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும்,அதை இறைவன் பெயரால் உண்மையானது,நிலையானது என்பதற்கும் பின்னாலுள்ள சதியை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இந்தியாவில் மட்டுமல்ல அதன் தொங்கு சதை நாடுகளான தென் கிழக்காசிய அனைத்து நாடுகளிலும் இந்தப் பாசிசப் பார்ப்பனியமானது நாசியக் கருத்துக்களைவிட மிக மோசமான நிலையெடுத்து வருகிறது.நாசிசத்துக்கு வக்காலத்து வாங்கும் இந்தியப் பார்ப்பனிய அமைப்புகைளை நியாயப்படுத்தும் கட்டுரைகளை எவ்வளவுதான் சிரத்தையோடு எழுதினாலும் இந்தப் பார்பனியத்தை நாம் நாசியக் கருத்தமைவுகளைவிடப் பன் மடங்கு விபரீதமான ஒடுக்குமுறைக் கருத்தியல் என்கிறோம்.கூடவே வன்முறைக் கட்டமைவாகவுமே பார்க்கிறோம்.

இது குறித்துப் பார்பான் நீலகண்டன் அரவிந்தன் சொல்வதைவிட நாம் இவர்களின் வரலாற்றுப் பூர்வமான மோசடிகளை அம்பலப்படுத்துவோம்.


நண்பனின் பதிவில் நாம் விவாதித்தபோது"கழிசடை"-கேனைத் தனம்"போன்ற வார்த்தைகளைத் தனது தளத்தில் எழுத வேண்டாமென்றும்,தனி நபர் தாக்குதலைச் செய்வது தனக்குப் பிரியமில்லையுமென்றார்.

அவரது நியாயத்தின்படி அது சரியாக இருக்கலாம்.

ஆனால் நமது உணர்வின்படி-அறிவின்படி நாம் இத்தகைய வார்த்தைகளைவிட இன்னும் மேலே போய் மலம் அள்ளிப் பார்ப்பனியத்தின்மீது வீசியடிக்கவே முனைவோம்.இது எமது நியாயம்.

எமது கடுமையான கோபத்துக்கு ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பார்பனிய ஒடுக்குமுறை நமக்கு ஏற்படுத்திய கொடும் நிகழ்வுகள் காரணமாகின்றன.தன்னைப் போன்ற சக மனிதர்களையே சாதி சொல்லிக் கேவலப்படுத்தும் பார்ப்பனியம் ஒருகட்டத்தில் எங்களுக்கு மலத்தையே உண்ணக் கொடுக்கிறது-கொலை செய்கிறது.இதையெல்லாம் அனுமதித்தபடி"ஐயங்கார்களுக்கு,அய்யர்களுக்கு,செட்டியார்களுக்கு,பிள்ளைவாள்களுக்கு,வெள்ளாளர்களுக்கு"சலாம் போட்டெழுதுவது நமக்கு நன்றாக இருப்பதற்கில்லை.தனது பெயருக்குப் பின்னால் சாதியைப் போடும் தரங்கெட்ட தற்குறிகளை மனிதர்களாகவா இன்னும் மதிக்கவேண்டும்.இவர்களுக்கு நாம் ஒரு தூ...காறித்துப்புகிறோம் என்று புரிக!
நாம் யார்?

நம்மைச் சாதி ரீதியாகவும்,மொழிரீதியாகவும் அடக்கியொடுக்கி,நமது வரலாற்று முன்னேற்றத்தைத் தடை செய்து,நமது வளர்ச்சியை முடக்கிய பார்ப்பனியமென்பது என்ன?

இதன் தாக்கத்தால் வலுவிழந்து மிக மோசமானவொரு சமுதாயமாகிய இந்திய நிலப்பரப்பை அன்னியர்கள் மிக இலகுவாகச் சூறையாடிய காலனித்துவக் கொடும் நிகழ்வுகளுக்கும்,பார்ப்பனிய ஒடுக்கு முறைக்கும் என்ன அடிப்படை உந்து சக்தியாக இருக்கிறது?

இன்றுவரை தொடரும் கருத்தியல் மற்றும் வன் முறைத் தாக்குதல்களைப் பார்ப்பனிய அரசியல் சட்டமும் அதன் தொங்குசதைப் பாராளுமன்ற ஜனநாயகமும் அனுமதிப்பதன் உட்சூத்திரமென்ன?

இவையனைத்தையும் குறித்து நாம் விரிவாகப் பார்ப்போம்.இவற்றைத் தொடராகவே எழுதுகிறோம்.எமக்குக் கிடைக்கும் ஒரு சில மணி நேர அவகாசத்துள் இவைகளைத் தொடராகவே எழுத முடியும்.

நால் வர்ணம் சொன்ன பார்ப்பனியம்:

இன்று வரையும் நால் வர்ண அடிப்படையில் ஆட்சியமைப்புகளை நிறுவி ,எம்மை நாயிலும் கேவலமாகக் கழித்தொதுக்கி வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்டாரங்களை நாம் கழி சடை-கேனைத் தனமானவர்களென்றுதானே சொல்கிறோம்.ஆனால் அவாள் சொல்றேள்:"நீ சூத்திரின்.தள்ளி நில்,தீட்டு-தமிழ் நீசபாஷா."என்றே எம்மை உயிரோடு கொல்லும் மனித விரோதிகள் நாசிகளைவிடப் பன்மடங்கு கொடியவர்கள்.இவர்கள் நாசிகளை வாழ்தினாலென்ன இல்லை அவர்களை எதிர்தாலென்ன!சாரம்சத்தில் பார்ப்பனியத்தின் கருத்தியலே நாசிகளை விட மிக மோசமான மனிதவொடுக்குமுறைக் கருத்தமைவுகள் தானே?இதிலென்ன பூசி மெழுகல்?

இந்தியாவில் 160 மில்லியன் மக்களைத் தீண்டத் தகதவர்களாக்கி வைத்துள்ளார்கள்.இவர்களைப் பார்ப்பனியக் கருத்தமைவுகளைக் கண்ணாக மதிக்கும் பார்ப்பான் முதல் பனியா வரை உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் ஒடுக்குகிறார்கள்.பார்பனக் கருத்தியலையும் அந்தக் கருத்தியலைத் தொடர்ந்துருவாக்கும் பார்பனியப் பொருளாதார மற்றும் அதன் அரசியலையும் ஆதரிப்பது அல்லது சமரசம் செய்வதென்பது அணுக்குண்டைவிட ஆபத்தானதென்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.எவரெருவர் பார்பனியத்தோடு வருகிறாரோ அவரது முகத்துக்காகச் சமரசஞ் செய்வோமானால் அது இறுதியில் அழிவுப்பாதைக்கே நம்மையிட்டுச் செல்லும்.இன்றைய இந்தியாவின் அகண்ட பாரதக் கனவு இத்தகைய கறையான்களால்தான் வலுப்பட்டு வருவதென்பதையும் மிகத் தெளிவாகச் சொல்கிறோம்.

வரலாறு பூராகவும் உழைக்கும் மக்களைச் சாதிரீதியாகப் பிரித்து அவர்களை ஒடுக்கி வரும் பார்ப்னியம் என்பது ஏதோ பச்சைப் பிள்ளை போன்றதும்,பால்குடி போன்றதுமாகப் பார்பனர்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகளை நாம் தத்துவார்த்த முறைகளில் கட்டுடைக்கிறோம்.

யாருக்கு எழுதுகிறோம்?:


நாம் எழுதுவது நாகரீக(?)வாதிகளுக்கல்ல.
கருத்துகள்மீதான விமர்சனம் எப்படி அக்கருத்தை உருவாக்கியவரை விட்டு தனித்தியங்குகிறதென்பதையும்,அது இயங்குவதற்கான வெளியை எந்தத் திசையமைவு சாத்தியமாக்கிறதென்பதையும் நாம் வலுவாகச் சொல்வோம்.இதனால் அனைத்து அதிகார மையங்களையும் தகர்ப்பதில் எமது கவனம் பதியும்.இதைவிட்டு,அனைத்து மனிதவிரோத அதிகார மையங்களோடும் சமரிசித்துக் கொண்டு"சார் அது உங்களையல்ல...நீங்கள் சொல்வது றையிட் சார்...வட் நான்..."இந்தப் போக்கிரித் தனக் கருத்தாடல் நமக்குச் சரிப்பட்டு வராது.இங்கே எந்த அதிகாரத்துக்கும் நாம் ஒத்துப் போகத் தயாரில்லை!
எனவே "சார் கொஞ்சம் அடக்கிக் கண்ணியமாக எழுதுங்கள்"என்ற ஜல்லியடிக் குரல்கள் நமது காதுகளுக்கு விழவே விழாது.இந்த அதிகாரங்களுக்கும் அதை முன்னிலைப்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும்-சமரசங்களுக்கும் எதிராகவும்,தீண்டத்தகதவர்களுக்கும் தெருவில் விட்டெறியப்பட்டவர்களுக்காகவே நாம் எழுதுகிறோம்.ஏனெனில் நாம் உதிரிகள்-பொறுக்கிகள்,அகதிகள்.

இனி விடையத்துக்குப் போவோம்.

தொடரும்...

Samstag, Februar 03, 2007

வேலுப்பிள்ளை பிரபாகரன்.



வேலுப்பிள்ளை பிரபாகரன்:"தன்னை"த் தேடியலைதல்.









தாக்குதல் வியூகம் அமைக்கிறார்:புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது".-கீர்கேகார்ட்(டென்மார்க்கின் தத்துவவாதி)


நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.
இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.

அதீத வேட்கை பொருள் குவிப்பின் உறுதியோடு பிணைவுற்ற பொருளாதார வாழ்வில் நமது காலத்தில் மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே.உயிர்த்திருப்பதற்கே இவ்வளவு கஷ்டமென்றால் உலகத்தின் எந்தக் காரியத்தையும் எத்தனை வளமிக்க அறிவும் செம்மையாகச் செய்ய முடியாது.வாழ்வோடு வந்து சேர்கிற மனித அவலம்"அதுவா அல்லது இதுவா"என்ற தேர்வையே நம் முன் கொணர்ந்து தடுமாற வைக்கிறது.இந்தத் தேர்வைத் தனி மனிதர் சார்ந்து தேர்ந்தெடுப்பதா அல்லது சமூகத்தின் பரம்பலில் தான் வாழும் குழுமத்துக்குள் தன்னை இனம் காணும் ஒரு எல்லையில் கூனிக் குறுகி நின்று பொதுப் புத்திக்கான பெரு விருப்போடு "நானே நீ"என்று தேர்ந்து கொள்வதா?எதைப் பற்றிய அசம்பாவிதமும் தற் செயலாக விரிவதென்றும்,உலகத்தின் எந்த இயக்கமும் ஒரு தொடர்ச்சியின் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கலாகவே இருப்பதாகவும் நான் உணர்கிறபோது இந்த நான் எவ்வளவு காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டேன் என்பதும் என் சிந்தையில் உருப்போட முடியாத உண்மையற்ற உறைவிடமாக-இருட்டு வெளியாக இருக்கிறது.

இங்கே வாழ்வோடு விருத்தியாகவேண்டிய மனித படைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட பின் எந்த உன்னதங்களும் மனிதனுக்குச் சொந்தமில்லாது போய் அதுவது அதன் போலித் தன்மையோடு பொருமிக்கொண்டே இந்தப் புவிப் பரப்பைவிட்டு எங்கோ நெடுந் தொலைவில் பறந்தடிக்கிறது.

இங்கே தற் செயல் என்பது தற் செயலல்ல என்பது உண்மை.

இது உண்மை என்பதன் ஒரு தொடர் இயக்கம்.

அந்தப் புள்ளியைத் தேர்வினடிப்படையில் தேர்வு செய்வதைத் தவிர வேறு வினை இருப்பதற்காகவொரு சாத்தியத்தை இந்த உண்மை மறைத்தே வைத்திருக்கிறது.இது என்ன என்பதே கேள்வியாக விரியும்போது அந்தக் கேள்வியே வாழ்வின் தேர்வாக மாறுகிறது.

மதவாதம் மலிகிறது.

தன்னைத் தவிர்த்த இயகத்தின் மூலமொன்று சிந்தனையை வெருட்டிக்கொண்டே இருக்கிறது.

அது நெடுந்தொலைவிலிருந்து நம்மைச் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறேன்.நானே ஒரு நிலையில் அவனுக்கான தூதுவராக என்னைப் பிரகடனஞ் செய்கிறேன்.

வளங்கள் அனைத்தையும் என்னைச் சுற்றி வைத்தபடி நான் அவனைத் தரிசிக்கும்படி கட்டளையிடுகிறேன்.

எனக்கும் இந்த இருப்புக்கும் இடையில் என் உணர்வுத் தொடர்ச்சி ஊசலாடுகிறது.அது படைப்பின் இன்னொரு விளிம்பில் என் ஆசையாக விரிகிறது.எனக்கும் ஆசைக்கும் இடையில் ஆக்கமற்ற அழிவு நிலைப்பதாக நான் உணர்கிறேன்.

ஆசையே அனைத்துக்கும் காரணமாகிறதென்று உணர்வேன்.

அப்போது ஆசையை நீக்கு என்கிறேன்.

அங்கேயும் ஆசையே நீக்கத்தைக் கோரும்போது நீக்கம் வெளியில் நிலைப்பதற்கான குறுகிய வட்டம் எனக்குள்ளதான் இருட்டாக மலிவுறுகிறது.வெளியின் தொடர்ச்சி வெளியே இல்லையென்பதும் என்னையழிக்கும் காலத்தில் நிலைப்பதால் மனிதப் படைப்பின் அந்நியத்தில் சுழல்கிறது.இங்கேதான் இந்த அந்நியமாதலை சொல்வதும் ஏதோவொரு அந்நியத்தின் அவசரக் குடுக்கைத் தனத்தின் பதிவாக அறிவது கட்டுத் தன்மையாகவே இருக்கிறது.அனைத்தும் புனைவுக்குள் கிடந்து மீளமுடியாதவொரு சோகத்தைத் தகவமைக்கும்போது சோகமென்பதும் புனைவுதான் என்று உணர்கிற உணர்வே புனைவாகச் சுழலும் தரணமெல்லாம் உலகத்துள் ஒன்றுமில்லை என்பதாகிறது.

உலகே மாயம்!

இங்கே நான் வசமாத் தப்பிக்கிறேன்.என்னைப் பின் தொடரும் ஆபத்தைத் தணிக்கிறேன்.அது என்னைக் கொல்லாதவரை-எனது இருப்பை அசைக்காதவரை எனக்குள் புனைவைத் திணிக்கிறேன்.

திணிப்தால் எனது நம்பிக்கைகளைத் தகவமைக்கிறேன்.

இந்த நம்பிக்கைகள் எனது பலவீனத்தின் இன்னொரு வடிவத்துள் நிலைபெறும்போது நான் போரிட வேண்டிய பொழுதுகளைக் காலம் எனக்குத் தந்து விடுகிறது.நான் எனக்காகவே போரிட முனைவதால் நானே இன்னொரு தொடர்ச்சிக்கு மூலத்தைப் பிரேரிக்கிறேன்.பிரமத்தின் பகுதி நானாக விரிவதாகச் சொல்லியே என்னைத் தொலைக்கிறேன்.

பிரமம் அநாதியாகிறது.

அநாதி அழிவின்றி இருந்து அடக்குமுறையாக விரிவதில் ஆக்கம் நிலைபெற முடியுமா?.