Donnerstag, September 20, 2007

"நீங்கள் பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?"

பார்ப்பான் என்று நீ சொல்வாய் டோண்டு?

எரி பிண்டம் நாறும்
ஒரு பொழுதின் உதிர்வில்
ஓயாத வதையாய் எவரும் கருதார்
காறி உமிழும் கடையனொருவன்
கவிழ்தலில் கடுகும் அசையா


கற்கையொடிந்த நடப்படியில்
நாறிய மனதைக் கொட்டிய பார்ப்பனத்தீட்டு
பக்கத்துள் படுத்துக்கொள்ளும்
பாடைகட்டார் பழகிய பொழுதும்


பாவிக்கு எந்தத் திசையுள் கொள்ளியிட்டாலென்ன
கொளுத்திச் சாம்பலதை ஆழப் புதைப்பதும்
அடுத்தவரைக் காக்கவே
அந்தவொரு நாளில் நஞ்சறுந்த விடியல்
கூவிய கோழியோடு கும்மாளமிடும்


மந்தைக்குத்
"தலைவலியும் திருகு வலியு"மென்ன
தீ எரியும் திசைக்கு
எண்ணையூற்றிய எருமை நீ!
உனக்கெந்த இடிவிழுந்தால் எமக்கென்ன
இழி பிறப்பே?


இரவுக்குள்
அச்சத்தையிட்டு
இருப்பவரை ஏய்த்துப்
பிடுங்கிய எச்சில் சோற்றில்
உயிர்த்திருக்கும் பார்ப்பனத் தெருவும்
பச்சை இலையெடுத்துப்
பாடிய தந்திரத்துள்
பகலும் படையலெல்லாம்
பார்ப்பான் வயிற்றுக்கே


இருந்தும்,
"சூத்திரன்" வயிற்றில்
சுண்ணாம்பு தடவும்
சோழியன் குடுமிச் சோவும்,
சோற்றுப்பட்டாள இராமும்,
மந்தை மாலனும் சேர
ஜாதித் திமிரை சொல்பவன் நீ!!

சோணகிரி,
சொல்லு நீ
உனக்கெந்தச் "செருப்பு"உவப்பென்று!

பார்பனத் திமிருக்குப் பெருமிதம் என்ன?
காமக்கேடிப் "பெரியவர்" தடவிக்
கொட்டிக் கிழித்த
கோவணம் காஞ்சிப் படியில்
ஆத்தையின் பெயரை வலித்து

அம்மணமாக்கிய "அருவருப்பு"
அடங்கும் முன்னே அள்ளியவுடலை
அருள் சொல்லிப் புதைக்கக் காஞ்சி மடமும்
கக்கூசு இருக்கக் கைலைத் தெருவும்
பார்பனக் கூட்டின் அண்மைய கதையாய்...

முகத்தை மூடி
நாய்க் கதை அவிழ்க்கும்
நாதாரி சிலவும்
நரித்தன நாகம் நீலகண்ட வானரங்களும்
நெருங்கிய தெருவில் நிமிர்ந்து நீ
குரைக்கும் பொழுதினில் இவற்றையும்(சாதிகளற்ற மனிதன் ஒரு குருடன்.அதனல பார்ப்பானென்று நான் சொல்வது உண்மை...)
புலம்பித் திரிவாய் .

19.09.07


ரயாகரன் அவர்களே!நல்ல கேள்விகள்.ஆனால் கம்யூனிசம் ஒரு மாபியத் தன்மையானது.இதனாலதான் மகாத்மா காந்திகூட எதிர்த்தார்.நேருஜீயும் வேண்டாமென்றார்.மனிதர்களின் பிளவுகளை ஆண்டவனே செய்தான்.சாதிகளற்ற மனிதன் ஒரு குருடன்.அதனல பார்ப்பானென்று நான் சொல்வது உண்மை.

"பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?


பார்ப்பனத்தன்மையை மறைத்துக் கொள்ள முயற்சித்ததும் இப்போதையப் பார்ப்பனரின் நிலைமைக்கு ஒரு காரணம். ஆனால் இவ்வாறு செய்ததில் மற்றவர் வலையில் விழுந்ததுதான் பலன். ஊரார் வாய்க்குப் பயந்து பயந்து இன்னும் இழிவுப் படுத்தப்பட்டதுதான் மிச்சம். என்னதான் செய்தாலும் போதாது இன்னும் செய்ய வேண்டும் என்றுதான் கூறுவார்கள். அடப் போய்யா நான் பார்ப்பனன்தான் அதற்கு என்ன இப்போது என்று எதிர்த்துக் கொண்டால் என்ன ஆகி விடும்?

இவ்வாறு நினைத்துத்தான் நான் சமீபத்தில் 1963-ல் பொறியியல் கல்லூரி நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வுக் குழுவின் தலைவர் திரு. முத்தையன் அவர்கள். அப்போது அவர் தொழில் நுட்பக் கல்வி ஆணையத் தலைவர். அவர் மற்றக் கேள்விகளைக் கேட்டு விட்டுக் கடைசியாக என்னைக் கேட்டார், "நீங்கள் பார்ப்பனரா?" என்று."ஆம் ஐயா" என்றேன். பார்ப்பனராக இருப்பதில் பெருமைப் படுகிறீரா?" என்று அடுத்தக் கேள்வி. அவர் கண்களைப் பார்த்துக் கொண்டு பதிலளித்தேன் "நிச்சயமாக ஐயா" என்றேன். இன்டர்வியூ முடிந்தது என்றார். என்னுடன் கூட வந்தவர்கள் எனக்கு கண்டிப்பாக தேர்வு கிடையாது என்றார்கள்.
"அடப் போடா மயிரே போச்சு" என்றேன். என்ன ஆச்சரியம்! தேர்வு கிடைத்தது. ஏற்கனவே என் தந்தை சிபாரிசுக்குச் செல்ல மாட்டேன் என்றுக் கூறியிருந்தார்.

Posted by Picasa

இப்போதுக் கூறுகிறேன். நான் வடகலை ஐயங்கார். பார்ப்பன ஜாதியில் பிறந்ததற்குப் பெருமிதம் அடைகிறேன். நான் பார்ப்பனன் என்பதை எப்போதும் தெளிவுபடக் காட்டிக் கொண்டவன். இனிமேலும் அவ்வாறுதான் செய்யப் போகிறவன்.வழக்கம்போல இந்த பின்னூட்டம் எனது பதிவிலும் சேமிக்கப்படும்.

அன்புடன்,டோண்டு ராகவன்(எலிக்குட்டியைப் ப்ளாக்கர் ஐ.டி.யின் மேல் வைத்து கீழே அதே எண் தெரிகிறதா என்று பார்க்கவும்)



Sonntag, September 09, 2007

தாம்பாத்யம்


தாம்பாத்யம்


நேற்று நாம் இருந்தோம்
குழந்தைகள் பெற்றெடுத்து
மனையாளும் மகிழ்வும் ஓங்க
இன்று நானிருக்கிறேன்
எல்லாம் கனவாகிய ஒரு நிலையுள்

மப்புக்கட்டும் உணர்வுக்கு
நிசம் சாயம் விலக்கிய கதையாய்
முள்ளாய்க் குற்றும் உண்மை
முதுகில் பாரமாய்

எட்டாதெரிந்து விழும் சூரியனின் இருப்பில்
உயிர்த்திருக்கும் தரணங்களைக்
கனவு பொட்டலமாக்கிய கண்ணீர்த் துளிகள்
காரணந் தெரியாத திசையில் சில மதிற் சுவர்கள்

என் வீட்டின் சுவர்களில்
எனக்கெதிராகவே எதையோ எழுதிக்கொண்டேன்
மனையாளும் குழந்தைகளும்
எப்போதும் மௌனித்து விட

எனினும்,
சாவு வந்து காவு கொள்ளும்வரை
வாழ்வு நரகத்துள் நீந்தித்தான் ஆகணும்


முட்டாள்த்தனத்துக்கெல்லாம் மகாப் பெரிய முட்டாள்தனம்
உணர்ந்துகொள்ள இயலா மனங்கள்
விவாகமென இணைந்து கழுத்தறுப்பது



இன்னும் சொல்லப் போனால்
மரண வாயிலை அடைவதற்குள்
மனிதம் பறந்து-பின்பு
கொடிய மிருகத்தின் படிமத்துடன்
பாடைகட்டி வழியனுப்பிக் கொள்வோம்

இஃது இலக்கணமாய் வாழ்வையரிக்கும்
காமந் தலையைக் குடைய
தலை கால் தெரியாது
முட்களை மார்பில் தாங்க
மோனமிட்ட உடல்களின் தெரிவில்
தவிப்பதுதான் தாம்பாத்யம்.


உடைப்பு.
09.09.2007

Mittwoch, März 28, 2007

அரவிந்தன் நீலகண்டன்கள்...

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள். (3)



வாசகர்களே,வணக்கம்! இப்போதெல்லாம் மிகவும் வேகமாகக்
கட்டுரைகளை எழுத நேரமில்லை.கூடவே உடல் நலம் குறைந்துகொண்டே போகிறது.இந்த
நிலைமைகளில் பல தளங்களில் தனியொரு நபர் எழுதுவது மிகக் கடினமானது.என்றபோதும்
அரவிந்தன் நீலகண்டன்கள்(இந்துப் பார்ப்பனியப் பாசிஸ்டுக்கள்)விஞ்ஞானத்தையே
கருத்தியலாக்கி "அகவயக் குறைபாடுடைய அறிவை"வெளிப்படுத்தும்போது நமக்கு அது குறித்து
விவாதிப்பதன் அவசியம் உணரத்தக்கபடி இருக்கிறது.இது(எதிர்த்துக் கருத்தாடுவது)
வரலாற்றுக் கடமையாகவும் இருக்கிறது.எனவே நேரம் கிடைக்கும்போதும்-உடல்
ஒத்துழைக்கும்போதும் இத்தகைய விவாதத்தைச் செய்யலாமென நினைக்கிறேன்.இருந்தும்
ஆடிக்கொருக்காய் ஆவணிக்கொருக்காய் எழுதும் நிலையே எனக்கு வாய்க்கப்
பெற்றிருக்கிறது.இன்றைய நிலையில் தனி நபர்களின் செயற்பாட்டுக்கு மிகவும் குறுகிய
எல்லையே உண்டு.இந்த எல்லை ஒரு கட்டத்துக்கு மேல் நகர முடியாது.தோழர் இரயாகரன்
போன்றவர்கள் மட்டுமே தொடர்ந்து பணியாற்ற முடியும்.அவர்களே ஒரு புரட்சிகர
அமைப்பாhகும் உலகு தழுவிய தொடர்புடையவர்கள்.என்னால் ஒருகட்டுத்துக்குமேல் நகர
முடியதென்பதன் எல்லையை(எழுத்து-செயற்பாடுகள் என்று புரிக.)நான் புரிந்தே
வைத்திருக்கிறேன்.எனினும் இந்தக் கருத்தியல் வாதிகளை நான் அம்பலப்படுத்துவதை மனதார
விரும்புகிறேன்.இந்த விருப்பு ஓரளவு செயற்படத் தூண்டுகிறது.அப்பப்ப நீலகண்டனின்
பாட்டன,; கொப்பாட்டன்களை நாம் அம்பலப்படுத்துவோம்.கடந்த இரு பகுதியில் ஓரளவு
இவர்களை அம்பலப்படுத்தி இவர்களின் அறிவு மோசடியை
அம்பலப்படுத்தியிருக்கிறோம்.தொடர்ந்து அதை நோக்கி...



(தொடர்:3)

மதம்:


இந்த வார்த்தையைப் பல முறைகள் படித்துப் பார்த்தேன்.மதம் என்பது மனிதர்களின் அதீத அச்சவுணர்வால் அவர்களின் அகவுலகத்துக் கண்டுபிடிப்பாகவே இருக்கிறது.எனினும் இந்த அகவுலகத்தின் கருத்தியலைப் பொருள் சார்ந்த"புறநிலையின் தன்மையே சிந்தனையாக்கி"அத்தகைய கருத்தியலை(பிரமம்:இறைவன்) உருவாக்கி தன்னைக் காப்பதற்கானவொரு ஆயுதமாக்கினார்கள்.இதனால் மனிதர்கள் இத்தகைய அக மன விருப்புக்கு இரையாகினார்கள்.இதைக் கடந்தவொரு பொருளாதார மனிதர்கள் உருவாகும் உழைப்பின் திரட்சியில் மதம்-கடவுள் கொள்கைகள் மிகப் பெரும் நிறுவனமாக சமுதாய அரங்கில் செயற்படும் அவசியம் இந்தப் பொருளாதார உறவில் அவசியமாகியுள்ளது.இதைக் குறித்து நாம் விரிவாகப் பார்ப்போம்.அப்போதுதான் இந்தத் தேவாங்கு அரவிந்தன் நீலகண்டன் வெறும் திரிவு வாதியென்பதும்,அறிவுக்கும் அவருக்கும் எட்டாம் பொருத்தம் என்பதும் புரியும்.கடந்த காலத்தில் அவர்கள்(அரவிந்தனின் கொப்பாட்டர்ன்கள்) தமிழ்நாட்டில் செய்த "அனல் வாதம்-புனல் வாதங்கள்"நம் மக்களையே வரலாறு தெரியாதளவுக்குப் படு குழியில் தள்ளியதை அவிழ்த்துப் பார்த்து அரவிந்தன்களின் கபட அரசியலை அம்பலப்படுத்த முடியும்.இதில் தோழர்கள் இரயாகரன்,அசுரன்,இராஜவனாஜ்,மிதக்கும் வெளி,நண்பன் போன்றோர் மிகவும் சிரத்தையோடு எழுதுவது தெம்பாகிறது.

இனிமேலே போவோம்.இந்த உலகம் என்னதான் பல்வேறு வேறுபாடுகளை உடையதாயினும் அது ஒருமை உடையதாகவே இயங்குகிறது.இந்த உலகத்தின் மாற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் இடையில் சதா இயக்கம் இருக்கிறது.இந்த இயக்கம் இன்றி அநாதியாக எதுவும் இருக்க முடியாது.அப்படி அநாதியாக "ஆதியும் அந்தமும்"இன்றி எந்தப் புண்ணாக்கும் உலகில் இருப்பதாகச் சரித்திரமில்லை.எங்கள் அறிவினது எல்லை ஏதோவொரு வகையில் பல கற்பிதங்களைச் செய்கிறது.

இறைவன் என்பவன்-என்பவள் ஒரு கற்பிதமான கருத்துத்தான்.இது நிலவுவதற்கான எந்த இயற்கை அவசியமும் இந்த இயற்கையின் இயக்கத்துக்குக் கிடையாது.அப்படியொரு பொருள் அல்லது உயிர்-இயக்கம் இந்தப் பொருளாயுதவுலகத்தின் எந்த வரலாற்று வெளியிலும் நிலவ முடியாதென்பதற்கான தர்க்க நியாயம் அவ்வளவு எளிமையாக விளக்கப்படுத்த முடியாது.எனினும் அதைப் பற்றிய ஒரு புரிதலுக்கான குறிப்பு அவசியமே.கருத்து முதல் வாதத்துக்கும் பொருள்முதல் வாதத்துக்கும் நடக்கும் போராட்டத்தில் எதையெது வெற்றி கொள்ளும் என்பதை காலம் தீர்மானித்து இன்று பொருள்முதல்வாதம் வெற்றியோடு மரபணு மாற்றத்தின் மூலமாக உங்களுக்கு விரும்பிய குழந்தைகளின் நிறம்,முடியின் நிறம்-விழிகளின் நிறம்-உடல் உயரம் என்று எல்லவற்றையும் உங்கள் கனவுக்கேற்ப படைப்பையே மாற்ற முடிகிறது.இது பிரமாவின் படைப்புத் தொழிலைப் பறித்து அவரை"வேலையில்லாத வெட்டிப் பயலாக்கியுள்ளது".இதுதான் பொருள் முதல் வாத அறிவு செய்த மிகப் பெரும் புரட்சி.ஆனால் இத்தகைய அறிவுக்குள் வளர்துள்ள முதலாளியம் இனவாதமாகச் சீரழிந்து உலகைச் சிதைப்பதும் உண்மை.எல்லாம் குவிப்புறுதியின் விளை பயன்.

உலகத்தின் அன்றைய தத்துவ ஞானிகள் "கருத்துக்கும் பொருளுக்கும்" நடுவில் சதா போராடியுள்ளார்கள்.அவர்கள் இரு பெரும் அமைப்பாகச் சிதறி,ஒரு பெரும் பகுதி கருத்துமுதல் வாதக் கும்பலாகவும் மற்றைய பிரிவு பொருள் முதல்வாதப் புரட்சிக்காரர்களாகவும் செயற்பட்டார்கள்.அவர்களில் நம்மட இந்தியாவில் பிரகஸ்பதி(பிரகஸ்பதி சூத்திரம்)சர்வாகர்(பிரபுத சந்திரோதயம்-நாடகப்பிரதி) முக்கியமானவர்கள்.

நமது இந்தியாவில் உலகாயுதம் என்ற தத்துவ ஞானக் கண்ணோட்டம் இதற்கு மிகச் சான்றானது.கடவுள் பற்றிய மனித அச்சம் தோன்றியபோதிலிருந்தே அத்தகைய கடவுள் இல்லையென்ற அறிவு நாணயமும்-தர்க்கமும் உருப்பெற்றே இருக்கிறது.இதுதான் அறிவின் வேலை."பாற்கடல் ஈர்ந்த பிரான்" எல்லாருக்கும் படியளப்பார்ரென்று எப்போது நமது இந்திய தேசத்தில் கருத்துகள் முளைக்கத் தொடங்கியதோ அன்றே இந்த நம் மக்களின் அழிவுக்காலமும் தொடங்குகிறது.அந்நியர்கள் தொடர்ந்து போரிட்டு இன்றைய இந்தியத் துணைக்கண்டத்தை அடிமைப்படுத்தினார்கள்-மேற்குலகத்தவர்கள் நாடோடிகளாக இருந்த காலம் மறைந்து, கண்டு பிடிப்புகளினதும் ஜந்திரக் கட்டமைப்பினதும் பிதா மக்களாகவும் உலகை ஆளத் தகுந்தவர்களாகவும் மாறிக் கொள்ளச் சந்தர்ப்பங்கள் உருவாகின.இதை மனதில் இருத்திக் கொண்டு இந்த மனித உயிரியின் இன்றைய இறையுட் கோட்பாட்டையும் கருத்து முதல் வாதத்தையும் பார்ப்பதே சாலச் சிறந்தது.

மெய்,வாய்,கண்,மூக்கு,செவி ஆகிய ஐம் புலன்களுக்கு எது அனுபவமாகிறதோ அது பொருள் சார்ந்த இயக்கத்திலிருக்கும்.இதுதான் பொருள்முதல்வாதிகள் முன் வைக்கும் ஒரு விஞ்ஞான உண்மை.அணுக்குறித்தான அனைத்து இன்றைய மதிப்பீடுகளும் இந்த ஐம்புலன் அனுபவத்தின் பிரதிபலிப்பாகவே நமக்குப் புரிந்து கொள்ளும்படி விரிந்து கற்கையாக இன்றிருக்கிறது.

இந்தவுலகத்தின் வௌ;வேறு பொருட்களாக இருக்கும்-இயங்கும் இந்தப் பிரபஞ்சத்தில் அனைத்தையும் ஒன்றாகக் கண்டு அதனை எது இயக்கத்தில் வைத்திருக்கிறது என்பதில் ஏற்பட்ட தர்க்க அறிவே இன்றைய விஞ்ஞானத்துக்கு அடைப்படையாக இருந்தது.

பண்டுதொட்டு மனிதர்கள் தம்மை மனிதர்கள் என்று அழைக்கத் தெரியாத காலத்தில் இயற்கையின் பருமனைக் கண்டே அஞ்சி தம்மை அதன் முன் வெறும் கையாலாகாதவர்களாக முன் நிறுத்தியபோது தமக்கு முன் விரிந்து கிடக்கும் இயற்கையின் பாரிய தோற்றப்பாட்டைக் கண்டு அதைத் தம்மிலும் உயர்வான-வலுவான சக்தியாக அகத்தில் கருதும் உணர்வுக்குள் வீழ்ந்தார்கள்.இந்த வரலாற்று அச்சவுணர்வானது காலத்துள் கடவுள் எனம் கருத்தாக நிலை பெற்றது.இதுதான் இந்த மனிதனின் முதல் ஆயுதமாக இருக்கிறது.அதன் பின்பே கல்லிலும் செம்பிலும் ஆயதங்கள்-கருவிகள் தோற்றம் பெற்றன உழைப்புப் பிறந்தது.கடவள் உயிருடையவராக உயர்ந்து இன்று இறந்துபோய் கருங்கல்லாக மாற்றம் காண்கிறார்.

மதத்துக்கு முன்பே கருத்து முதல்வாதச் சிந்தனை தோற்றம் பெற்றது.கருத்து முதல்வாதம் என்பது அறிவின் தொடர்ச்சியில் வெறும் கருத்துக்களால் ஆனது.அது இன்றுவரையும் மக்களை குழப்புவது உடமை வர்க்கத்தின் பாதுகாப்பு அவசியமாக இருப்பதால் என்பதை பிற்பகுதில் தெளிவாகப் புரிய முனைவோம்.

கருத்து முதல்வாதச் சிந்தனையாளர்கள்(நீலகண்டன் போன்ற உரித்த வெங்காயங்கள்)உலகத்தின் ஒருமையை தாம் உணர்ந்த அகவயக் குறைபாடுடைய எண்ணங்களால்-கருத்துக்களால்(ஆன்மீகம் என்று புதுவகையாக அதை இப்போது அழைப்பது வழமை)கருத்து நிலையை அடிப்படையாக்கி ஒருமைப்படுத்த முனைந்தார்கள்.இதை இப்படிச் சொல்வோம்.அதாவது ஆன்மீக அடிப்படையாக்கி,ஒருமைப்படுத்தி(கடவுள்) உணர முற்பட்டார்கள்.இந்த அகவயக் குறைபாடு அல்லது அறிவின் இயலாமை அவர்களின் தத்துவங்களில் "பிரமம்,மோட்சம்,மறுபிறப்பு,ஊழ்வினை"மற்றும் தெய்வ சக்தி-ஆன்மா என்று தனிமுதல் கருத்து,புலனுணர்ச்சிகளின் தொகுதி மற்றும் இன்னபிற வடிவங்களுக்குள் முகிழ்த்தன.


இத்தகைய கருத்தியல் வாதத்தைக் கண்ட இன்னொரு அறிவுவாதக் கூட்டம் இதை நேரடியாக மறுத்தொதுக்கி பொருள்சார்ந்த சிந்தனையோடு சிந்தனையுருவாவதை உணர்ந்த போது"புற நிலைகளின் தன்மையே சிந்தனைக்கு அடிப்படையானதுதென"அறிந்து பொருள் முதல்வாதத்தைச் சார்ந்து தமது மதிப்பீடுகளை வகுத்தார்கள்.உலகத்தின் உண்மையான ஒருமைப்பாடு பொருளாயதத் தன்மையில்,உணர்விலிருந்து மிகவும் தனித்து சுயேட்சையாகவுள்ள புற நிலை மெய்பாட்டில் இருப்பதாகக் கருதினார்கள்.

தொடரும்.

28.03.2007

Sonntag, Februar 25, 2007

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும்...

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:(2)





"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."



(தொடர்:2)



இன்றிருக்கும் நமது வாழ் நிலையானது மிகவும் கீழ்த்தரமான கருத்தியல் ஆதிக்கத்தால் வார்த்தெடுக்கப்பட்ட வாழ்வாகும்.இதில் அரவிந்தன் நீலகண்டன் ஒரு பொருட்டல்ல நமக்கு.ஏனெனில் சமூகத்தின் எந்தத் தரப்பை நோக்கினும் அது ஆதிக்கக் கருத்துக்களுக்கு அடிமைப்பட்டுக்கிடக்கும் நிலையில் பற்பலர் மிகவும் கிழ்த்தரமாக மக்களையொடுக்கும் கருத்துக்களோடு இன்னும் ஐக்கியமாகக் கிடக்கிறார்கள்.அவர்கள் தம்மை அறியாமலே நம்மை அடக்கும்-ஒடுக்கும் கருத்தியலோடு ஒன்றிப் போயுள்ளார்கள்.இத்தகைய நபர்களை வலைப் பதிவில் மிக இலகுவாக இனம் காண முடியும்.இவர்கள் நீலகண்டன்களை விட ஆபத்தானவர்கள்.நீலகண்டனோ தன்னை ஆர்.எஸ்.எஸ்.காரன் என்று பிரகடனப்படுத்தி எழுதி வருபவர்.அவர் ஒரு பெரிய அமைப்பு.போதிய நிதியும் உழைப்பும் அவருக்கு உண்டு,அகவே அவர் ஒரு நிறுவனம்.எனவே இத்தகைய அமைப்பு-நிறுவனம் உழைக்கும் மக்களுக்கு எதிரானதென்பதும் அது ஒடுக்கப்படுபவர்களுக்கு எதிரானதென்பதையும் நேரடியாகப் பிகடனப்படுத்திக் கொண்டு இயல்பாகச் சமுதாயத்தை கருத்தியல் ரீதியாகவும்,உளவியல் ரீதியாகவும் அடக்கி,அழித்து வருகிறது.இது புற நிலையாகத் தன்னை உழைக்கும் மக்களின் எதிரியென்றே இனம் காட்டுகிறது.ஆனால் வலைப் பதிவில் சைவத்தையும் தமிழையும் காப்பதென்ற போர்வையில் எழுதும் உணர்வும்,கி.வா.என்ற பார்ப்பானை தூக்கிவைத்தழும் பாரிஸ் யோகன் என்ற பதிவரும் இந்தப் பார்ப்பனியத்தால் தடுதாட்கொள்ளப்பட்ட நூறுகோடித் தென்னாசிய மனிதர்களுள் இருவர்.இவர்களைப் போன்ற இன்னும் பல மனிதர்கள் இந்த வலைப் பதிவில் இந்து என்றும் கத்தோலிக்கர்கள் என்றும் மற்றும் அல்லாவின் குஞ்சுகள்"நாம் இஸ்லாமியர்கள்-முஸ்லீம்"என்றும் தம்மைப் பிரகடனப்படுத்தியபடி தமது இயலாமையை வெளிப்படுத்துகிறார்கள்.




இந்த உலகம் தனது சிக்கலான உருவாக்தின்படி உயிரினங்களை மிகவும் வருத்தி வருகிறது.ஒரு புறும் மனிதர்களே மனிதர்களுக்கு எதிராக இருக்கும்போது இயற்கையும் மனிதர்களை மிகவும் கீழாக ஒடுக்கும் இந்தப் புவிப் பரப்பின் நிலையில், மனிதர்கள் எப்போதும் தம்மைப் பற்றிய மிகப் பாதுகாப்பான உணர்வால் கட்டுண்டு கிடக்கிறார்கள்.இத்தகைய மனித மனமானது என்றும் தன்னைப் பாதுகாப்பதில் தன்னைவிட முன்னேறிய இயற்கையின் முன் எதுவுமற்ற வெறும் துரும்பாக நிற்கிறார்கள்.இவர்களிடம் எந்தப் பிற்போக்குக் கருத்தும் எடுபட்டு விடும்.இத்தகையவர்களை உதாரணம் காட்ட எங்கள் பாமரப் பெற்றோர்களை இனம் காட்ட முடியாது .அவர்கள் பாமரர்களாகவே இருந்திருக்கிறார்கள்.ஆனால் தம்மை அறிவாளிகளாகக் காட்டும் இந்த உணர்வு,யோகன் பாரிஸ் போன்றவர்கள் உண்மையில் வெறும் நாணல்கள் போன்றவர்கள்.இவர்களிடம் அறிவின் பகுப்பாய்வு-சுயசிந்தனை-கேள்வி கிடையவே கிடையாது.இத்தகைய கோமாளிகள் வலை பதியும் இந்தச் சூழ் நிலையில் நாம் கருத்தாடுவது மிக மிக அவசியமாகும்.எனினும் நம்மிடம் போதிய உழைப்பில்லை.நாம் தனித்துக்கிடக்கிறோம்.உயிர் வாழ உழைக்கும் வேலையானது நம்மை உயிரோடு புதைத்தபடி, நமது கால நேரத்தை உருவி விடுவதால் இத்தகைய ஆதிக்கக் கருத்தாளர்களை உடனுக்குடன் எதிர் கொள்ள முடிவதில்லை.




இருந்தும் பார்ப்பனியத்தின் கருத்தியல் வலுவானது இத்தகைய மனிதர்களைவிட நமது அன்றாடத் தொடர்பு ஊடகம் அனைத்திலும் மிகவும் ஆளுமையைச் செலுத்தி அது கல்வி,செய்தி ஊடகம் மற்றும் அனைத்துப் பாண்பாட்டுத் தளத்திலும் தனது வேரை ஆழமாகப் பதியம் போட்டு வைப்பதால் அது நாம் பேசும் மொழியிலும் நுகரும் கலை இலக்கியத்திலும் மிகவும் வலுவாக வேரைப் பதித்து நம் அன்றாட மூச்சோடு அது அன்னியோன்னியமாகிச் சகலதிலும் சங்கமித்துவிட்டது!இந்த ஒரு வாழ்வு மெய்ப்பாட்டோடு நாம் கருத்தாடுவது மிகவும் சோம்பேறித்தனமான மனதை எமக்குத் தருகிறது.சமுதாயத்தின் அனைத்துத் தளத்திலும் பார்ப்பனியத்தினதும் மற்றும் மதவாதக் கருத்தியல் ஒடுக்கு முறைகளாலும் மக்கள் உளவியல் நெருக்கடியைச் சந்திக்கிறார்கள்.இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் அல்லேலோயாவின் ரீ.வி.நிகழ்ச்சியைப் பாருங்கள்! எத்தனை இலட்சம் அப்பாவிகளை இவர்கள் ஏமாற்றித் தமது பொருளாதார வாழ்வைச் சிறப்பாக்கி வைத்தபடி அந்த ஏழை மக்களை உளவியல் ரீதியாக ஒடுக்கி வருகிறார்கள்!




இதையெல்லாம் பார்க்கின்றபோது நாம் அமைப்பாகச் செயற்பட்டு இதை அம்பலப்படுத்தியாக வேண்டும்.திரு.ஆபிரகாம் கோவூர் போன்று நாம் தனிமனிதர்களாகச் செயற்பட்டால் இதனால் எதுவும் நிகழப் போவதில்லை.ஆதலால் அமைப்பாகச் செயற்பாடுகளை வகுக்க வேண்டும்.இங்கே தமிழ் நாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகம் அத்தகைய நடவடிக்கையில் இறங்கிச் செயலாற்றி வருகிறது.இது காலத்தால் அவசியமாக நம்மிடம் அறை கூவிக் கையளித்த வேலைத் திட்டம்.இதை நமது பண்பாட்டு அரங்கில் மிகச் செழுமையாக முன்னெடுத்தாக வேண்டும்.இந்த நோக்கோடு மேலும் நகர்வோம்.



பருப் பொருள் வேண்டிய பாரிய அடி:



இந்தப் பருப் பொருளானது உலகத்தின் மிகவும் சூக்குமமான கருத்து என்பதும் அது உலகத்தின் அனைத்துப் புரிதல்களுக்கும்,உண்மையைத் தேடிய அனைத்து தோற்று வாய்க்களுக்கும் முதன்மையானவொரு விஞ்ஞான எடுகோளாக இருந்தது.புலப்பாடுகளை விஞ்ஞான ரீதியாக விளக்கப் படுத்தப் பொருள் முதல் வாதிகளிடமிருந்த இந்த ஆயுதம் மிகவும் சரியானதென்று அன்றைய நம் பொருள் முதல் வாதிகள் நம்பினார்கள்.அவர்கள் இதை நம்பிக் காரியத்தில் இறங்கியபோது எல்லோரும் இதைச் சாதகமானதாக் எடுத்துக் கொண்டு தமது பகுப்பாய்வை முன் வைக்கத் தொடங்கிளார்கள் .அவர்களில் முதன்மையானவர் ஜேர்மனியப் பொருள் முதல் வாதியான லூட்விக் பொய்யர்பக் என்பதை நான் அறுதியிட்டுக் கூறுவேன்.இவரது வருகைக்குபின் பொருள் முதல் வாதிகளிடம் ஒரு துடிப்பு ஏற்பட்டது.




உலகத்தின் எல்லையில்லாப் பொருட்களின்,மூலகங்களின் வேறுபட்ட குணாம்சங்களுடைய மாறும் பொருள்களின் அல்லது புலப்பாடுகளின் முழுநிறைக் குணாம்சங்களை இந்தப் பருப் பொருள் எடுத்தியம்புவதாக லூவிட்க் பொய்யர்பக் கருதியபோதும் அவரால் இதற்கானவொரு மிகவும் கறாரான விஞ்ஞான விளக்கத்தைத் தர முடியாதபோது,அதற்காக அவர் மண்டையைப் போட்டு உடைக்கவில்லை!இங்கேதான் வந்தது ஒரு எதிர்பாராத கிளைமோர்த் தாக்குதல்.




பிரஞ்சுக்காரப் பொருள்முதல் வாதகளும்,ஜேர்மனியப் பொருள் முதல் வாதிகளும் ஒவ்வொரு விஞ்ஞானக் கண்டு பிடிப்புகளோடும் இந்தப் பருப் பொருளைப் போட்டுக் குழப்பத் தொடங்கினர்.பரப்பொருளின் கட்டமைப்பை இயற்கை விஞ்ஞானத் தரவுகளோடு போட்டுக் குழப்பியெடுத்துச் சாரத்தை மிகவும் பலவீனமாக்கினர்.இருபதாம் நூற்றாண்டின் அதிவேகமான முதலாளிய வளர்ச்சியானது இத்தகைய நிலைமைகளை மேலும் சிக்கலாக்கியது.ஒரு புறும் ஜந்திரங்களின் வளர்ச்சி மறுபுறும் யுத்தம்.ஆதிக்கத்துக்கான ஆயுதப் பலத்தில் மூழ்கிய விஞ்ஞானம் மேன்மேலும் குழப்பத்தில் வீழ்தியது பருப் பொருளின் சாரத்தை.



ஏலவே நான் கூறியபோது பருப்பொருள் என்பதை அவர்கள் உணரும் காலத்தில் அதைப் பிரிக்க முடியாதென்றும் மாற்ற முடியாதென்றும் கருதிய காலத்தில் என்றே சொன்னேன்.அடைப்புக் குறிக்குள் இப்போது பிரிக்கக் கூடியதென்றும் எழுதியதை வாசகர்கள் இப்போது கவனத்துள் எடுக்கவும்.




மின்னணுக் கண்டு பிடிப்பானது இந்தப் பருப்பொருளைத் தலை கீழாகப் புரட்டிப்போட்டது.மிக மிக நுணுக்கமான துகள்களைக் கொண்டது அணுவென்றும் அல்லது மின் அணுவென்று இக் கண்டுபிடிப்புச் சொன்னது.அயன் ஸ்ரைன் போன்ற விஞ்ஞானிகள் "அணுவைப் பிளந்து அதனால் பயன் பெற முடியுமென்று" சொன்ன போது அதன் அழிவுப் பக்கத்தையும் ஒரே தடவையில் புரிந்து இப்படிச் சொன்னார்கள்."Das Problem dieser Welt ist nicht die Atombombe,sondern das Herz des Menschen."("உலகத்தின் பிரச்சனை அணுக் குண்டல்ல மாறாக மனிதர்களின் இதயமே."அய்யா அயன் ஸ்ரையின் மனித இதயமல்ல அய்யா!முதலாளிகளின் உற்பத்தி ஊக்கமே பிரச்சனையாக அன்றும் இன்றும் இருக்கிறது.)எனினும் ஓட்டோ கான் அணுவின் பல கட்டங்களைச் சொன்னதன் கையோடு ஒவ்வொரு கட்டத்தையும் சாத்தியப்படுத்தி அணுக்குண்டை அமெரிக்க முதலாளிகளுக்கு அளித்த ஓப்பன் கைமர் உலகத்தில் கீரோசீமா மற்றும் நாகசாகியின் சாம்பலின் சொந்தக் காரனானான். "நாசமாப் போவான்-அவன் குடும்பமே,சந்ததியே அழிந்து போ!".இப்படி அணுக் குண்டைக் கண்டு பிடித்தவனைத் திட்டுகிறோமென்றால்,அணுக் குண்டையேவிட அதிக ஆபத்தானா பார்ப்பனியத்தையும் அதைத் தூக்கி நிறுத்தும் பார்ப்பனர்களையும் இவர்களது பொருளாதார முன்னெடுப்பையும் எப்படித் திட்டவா அல்லது வரலாற்றில் இருந்து அழித்துப் புதியதைப் படைப்பதா முக்கியம்? இது கேள்வி.நாம் மேலே போவோம்.




அணுத் துகள்கள் பிரிக்க முடியாது,அது நிலையானதென்பது பொய்த்துப் போனபோது பருப் பொருளின் வாழ்நிலைதான் இந்தக் கோதாரி பிடித்த பிரபஞ்சத்துக்கு
அடிப்படை(இதுகூட ஒரு வகையில் கருத்தியல்தான்.அதனால் அது "பொதுகிட்டுபோச்சு நைனா" என்பது உண்மைதான்)என்ற கூற்றைப் பல இயற்பிலாளர்கள் சந்தேகிக்கத் தொடங்கினார்களே,அப்பப்பா நம்மட கருத்துமுதல் வாதக் கொழுந்துகள் துள்ளிக் கூத்தாடி "பாட்டாளிகளின் சித்தாந்தம் தவறானது.அது பொய்.உலகைப்படைத்தவனே நம்மைப் பணக் காரர்களாகவும்,வேலைக் கார மிருகங்களை பஞ்சப் பரதேசிகளாகவும் படைத்தார்கள்.அது அவர்கள் முற்பிறப்பில் செய்த பழி"என்று பாடத் தொடங்கினார்கள்.



அணுத் துகள்கள் எலக்ரோன்களாக உடைவதும்,அவற்றினது பொருண்மையானது இயக்கத்தினது வேகத்தைச் சார்ந்திருக்கிறது.இதனது அர்த்தம் பருப்பொருளென்பது மாற்றப்படுகிறது என்பதே இயற்பியலாளர்களின் வாதமாகியது.இந்தச் சங்கதி இதுவோடு நிற்கவில்லை.மேலும் அணுவின் எல்லாச் சூத்திரங்களையும் தோண்டிக் கொண்டே விரிவடைந்து பருப் பொருளை ஒரு வழி பண்ணியது.இத்தகைய கண்டுபிடிப்பில் எலக்ரோன்கள்,பொசிட்ரோன்கள் போன்றவன்றின் ஒளி வீச்சு மாற்றம் குறித்த கண்டுபிடிப்பைத் தாண்டி இயற்கை விஞ்ஞானத்தின் நெருக்கடியை இன்னும் ஆழமாக்கியது.




ஒரு நிலையில் எதிர் மறைச் செயலுடன் கூடிய பருப் பொருளின் இரண்டு பாகங்கள் ஒளியாக மாறுவது உண்மையாகிறது.இந்தவுண்மையானது பருப் பொருள் மறைந்து உலககே மாயமாகிறதாகி விடுகிறது.அடாடா அத் வைதம் இங்கே எவ்வளவு உண்மையாக மலர்கிறது பாருங்க எண்டார்கள் நம்ம அரவிந்தன்கள்.
என்ன சொல்கிறது அத்வைதம் உககே மாயம்.ஏழாம் நூற்றாண்டளவில் இது உலகத்தை மாயை என்றது.அதை இங்கே பொருத்திய பார்ப்பனப் பண்டாரங்கள் இது குறித்துப் பல பக்கக் கட்டுரைகளை எழுதித் தள்ளியது அன்று.இன்றும் அரவிந்தன் எழுதுவதற்கு இத்தகைய அடிப்படைகளே காரணமானது.எனினும் அன்றைக்குத் தமது வாழ்வையே கருத்துமுதல்வாதிகளுக்கு எதிராகத் தியாகம் செய்த பரம்பரை விடுமா?அறிவுதானே நமது மூலதனம்!இந்தா பார். உங்கட இந்தக் குறுகிய மகிழ்ச்சியை உடைத்து நாம் சொல்வதின் உண்மைதான் உண்மையின் இருப்பு என்று நிறுவிக் காட்டுவதாகப் பொருள்முதல்வாதிகள் வெளி கிட்டுத் தமது மூளைகளைக் கசக்கப் பிழிந்தார்கள்.



இயற்பியலாளரின் கண்டுபிடிப்புகளின் விஞ்ஞானத்துக்கு புறம்பான கருத்துக்களை தமக்குச் சாதகமாக்கிய உலகத்தின் ஒடுக்குமுறை நிறவனங்களான மதம் மற்றும் கல்வி நிறுவனங்கள் மார்க்சியத்தின் இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல் வாதத்தைப் புதை குழிக்குள் அனுப்பும் தொனியில்"மார்க்சியம் என்பது இன்னும் சில காலம் விடலைகளின் மனதிலும் அதற்குப் பின் பொருட்காட்சியகத்திலும் இருக்கும்"என்றார்கள்.இப்போது அரவிந்தன் நீல கண்டனைக் கொஞ்சம் மனதில் இருத்துங்கள் அவர் என்ன சொல்கிறார்?"மார்க்சிய அரைகுறைகள்... பெரியாரென்ற பயங்கரவாதி"என்ற தொனியில் எழுதுகிறாரா அதற்குக் காரணம் இந்த வகைக் காரணங்களின் மேற் புல் மேய்ச்சல்தான் காணமாகிறது.



அப்பர்களே!அருமை அம்மணிகளே!!இன்றைக்குச் சுமார் ஆறு மாதத்துக்கு முன்பே ஒரு பெரிய விஞ்ஞானி-கொரிய உயிரியலாளர் திரு.உவோங்(Hwang) உலகத்துக்குப் பொய் யொன்றை அவிழ்த்துவிட்டு,இறுதியில் தனது அனைத்துப் பதவியையும் இழந்தது ஞாபகமிருக்கா?



"König der Klone"(குலோன் இராஜா)என்றும்; Fälschungsskandal um Klonforscher Hwang macht «Science» sprachlos(தவறான தரவுகள.; குலோன் ஆய்வாளரின் ஊழல்.மெளனித்திருக்கிறார் உவோங்) என்றும் நாம் அறிந்தோம்.அய்யன் உவோங்கின் கருத்துக்களும் அவரது தரவுகளும் குலோன் ஆய்வில் பொய்பித்தபோது அங்கே வெற்றி கொள்ளப்பட்டது உண்மை!அது வெற்றிடமொன்றை விட்டுத் தள்ளவில்லை.மீளவும் ஆய்வில் அவரைத் தள்ளி உண்மைக்கு முடிசூட்ட அவர் மீளவும்,மீளவும் முயற்சித்தபடி.ஏனென்றால் உண்மையென்பதை உழைப்பால் மட்டுமே நிறுவ முடியும்.அவரதை நிறுவுவதற்குக் காலமெடுக்கலாம்.இதுதான் இந்த நிலையிலும் திடமுடன் போராடும் அனைத்துத் தரப்புக்கும் காரணமானது.இந்த உவோங்கின் உறுதியோடு அன்றே இறங்கியவர்கள் பொருள்முதல் வாதிகள்தான்.



இந்தப் பருப்பொருளின் கருத்துநிலை வேண்டிய பாரிய அடியானது சோஷலிச இலட்சியத்தையே பொய்யானதெனக் கருதும் அளவுக்குக் கருத்துமுதல் வாதிகளைப் பிரச்சாரத்துக்குள் தள்ளி பாட்டாளிய வர்க்கத்தை அதன் போராட்டச் சித்தாந்த்தைப் பொய்யாக்க முனைந்தது.இத்தகைய நிலையில்தாம் பார்ப்பனியமும் தன்பாட்டுக்குக் கருத்துமுதல் வாதத்தால் தென் கிழக்காசியத் தத்துவப் பரப்பை ஆக்கிரமித்தது.அது கொண்டாடிய பரந்தாமன் பாற்கடலைக் கடைந்து உறிஞ்சிய நஞ்சு பாட்டாளிய அதாவது ஒடுக்கப்படும் வர்க்கத்துக்கு எதிரானதாக இருந்தது.பொருள் முதல் வாதத்தை அடிப்படையாகக் கொண்ட சோசலிச இலட்சியத்தை மிகவும் வெறுப்புடன் விமர்சிக்கும் அரவிந்தன் நீல கண்டனிடம் கருக்கொண்டு மையங்கொண்ட மேற்காட்டிய பருப்பொருளின் தோல்வி மேலும் அவரைப் போன்றவர்களைக் கருத்துமுதல் வாதிகளிடம் சரணாகதியடைய வைக்கிறது.இங்கேதான் கருத்துமுதல் வாதத்தின் மிகக் கெடுதியான உளவியல் ஒடுக்கு முறை தன்னை அம்பலப்படுத்தி தான் உடமை வர்கத்தின் பக்கதிலேயே படுத்துக் கிடந்து பாட்டாளியளைப் பாடையில் அனுப்பும் மதமே என்று நிரூபித்தது-நிரூபித்து வருகிறது.



பொருள் முதல் வாதிகளின் அன்றைய இயக்க மறுப்பியில் பருப்பொருளை தோல்வியின் வெளிம்பில் தள்ளியபோதும் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பே பெளத்தம் சொன்ன"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரமென்ற"உண்மையை உள்வாங்குவதில் இருந்த தயக்கம் இயக்க மறுப்பைச் செய்தது.எனினும் கேகேல்;(Hegel)போன்ற விஞ்ஞானிகள் இயக்கவியலுக்கு ஓரளவு முக்கியம் கொடுக்கத் துவங்கியபோது அத்தகைய நிலையில் வரலாற்று ஆசான் லெனின் மிகப் பெரிய சாதனையை நிறுவிக்காட்டினார்.அவரே இந்தப் பொருள் முதல் வாதிகளின் கண்ணுக்குப் புலப்படாது இயக்க மறுப்பியலைச் சுட்டிப் பருப் பொருளின் அடிப்படையை இயக்கவியல் பொருள் முதல் வாத்தத்துகுச் செல்லும்படி உயர்த்திப் பாரிய நெருக்கடியைத் தொடைத்தெறிந்து இந்தப் பாழாய்ப்போன கருத்து முதல் வாதக் கண்றாவிகளை நாக்கிளிப் பூச்சிகளாக்கினார்.



பருப்பொருள் என்பது என்றைக்குமே எந்தவிதமான ஸ்த்தூலமான நிலையான,மாற்றமுடியாத வெளிப்பாடுகளாகச் சுருங்கக் கூடியதல்ல.அது இயங்குவது.இயகத்தில் இருப்பது.



"மனிதர்களுக்கு அவர்களுடைய புலனுணர்ச்சிகளால் தரப்படுகின்ற புற நிலையான யதார்த்தத்தைக் குறிக்கின்ற தத்துவஞான வகையினமே பருப்பொருள் எனப்படும்.புற நிலையான யதார்த்தம் அவற்றிலிருந்து சுதந்திரமாக இருந்து புலனுணர்ச்சிகளால் பிரதியெடுக்கப்பட்டு,படம்பிடிக்கப்பட்டு,பரிபலிக்கப்படுகிறது."என்று நம்ம ஏங்கல்ஸ் இயக்கவியல் பொருள் முதல் வாத்தில் நிறுவிக்காட்டினார்.



உணர்விலிருந்து புற நிலையாகவும்,சுயேற்சையாவும் நிலவும் இந்தப் பிரபஞ்சத்தையும் அதன் பல்வேறு வகைப்பட்ட புலப் பாடுகளையும் குறிப்பதற்கான தத்துவஞானக் கருத்தமைவாகவே நம் மார்க்சிச முன்னோடிகள் பருப்பொருளை சுட்டலானார்கள்.இதனால் அது இயக்க மறுப்பிலிருந்து மிகவும் முன்னேறி இன்றைய புதிய கண்டுபிடிப்புகளுக்கும் இனி வரும் கண்டு பிடிப்புகளுக்கு ஆதாரமான தத்துவஞானச் சுட்டலாக கொலுப் பெற்றது.எனவே பருப் பொருள் என்பது ஒரு புற நிலை யதார்த்தம் என்பதை எவராலும் மறுக்க முடியாதாகிறது.விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகள் அதாவது நம்ம உவோங் போன்றோரின் னுநளழஒலச¨டிழரெமடந¨ளெயூரசநஇ னு§யுஇ னு§ளு போன்ற வற்றுள் நிகழ்தப்பட்ட இயற்கைச் செற்களின் திட்டவட்டமான தரவுகள் இந்த உண்மையை அதாவது புற நிலையான யதார்த்தம் என்றதால் அகவயக் குறைபாடான கருத்தியல் தகவமைப்பான இறையுட் கோட்பாட்டையும் அதைக் காவி வரும் "காவி,அங்கி,குல்லா"க் காரரின் கேனைத் தனமான கருத்தியல் பிரச்சாரத்தையும் உடைத்தெறிந்து மக்களின் உண்மையான இயக்கவியல் பொருள் முதல்வாதப் பருப்பொருள் உண்மையை உறுதிப் படுத்தி நிலைப்படுத்தியது.



பார்பனியமானது தன்னளவில் தத்துவ விளக்கமாகவும்,கருதுகோளாகவும் நிலவுகின்ற ஒரு நிலையில் அது புற நிலையாகப் பிரதியெடுக்கப்படும் தத்துவக் கண்ணோட்டம் உப நிஷதமாகவும்,வேதங்களாகவும் விரிவுறுகிறது.இது கற்பிக்கும் தத்துவார்த்தப் புரட்டல்களே மென்மேலும் அதை அகிம்சா வாதக்கண்ணோட்டமாக மாற்ற முனைகிறது.ஆனால் அக நிலையாக அது வடித்து வைத்திருக்கும் மனித சாரம் மனிதர்களைக் கூறுபடுத்தி அடிமைத்தளையில் தொடர்த்து இருத்தி ஆளும் வர்க்கத்துக்கு அதாவது இன்றைய இந்தியப் பொருளாதாரத்தைதைத் தமது கையுக்குள் வைத்திருக்கும் பார்ப்பனிய மற்றும் பனியாச் சாதிகளைக் காத்து வருகிறது.இது அக நிலையாகவும் புற நிலையாகவும் தன்னை ஒரு நிறுவனமாக நிலைப்படுத்த உதவிய பொருளாதார அடித்தளம் முற்று முழுதிலும் பார்ப்பனியத்தை முழு இந்தியச் சட்டவாக்கமாக மாற்றியதன் கொடும் நிகழ்வே இதைத் தொடர்ந்து நிலைப் படுத்திக் காத்து வருகிறது.இதற்கு உடந்தையாக நமக்குள் நிலவும் சைவம் முதல் இந்து மதத்தின் அனைத்துப் பிரிவுகளும் பண்பாட்டுத் தளத்தைப் பார்ப்பனியத்துக்கு ஏற்ப்படுத்திக் கொடுத்துள்ளது.



எனவே மதம் என்பது இங்கே இந்தியத் துணைக் கண்டத்தின் வாழ்வியல் மதிப்பீட்டை உருவாக்கும் நிலையில் அது மக்களின் மனதைக் கருவியாக்கி ஒவ்வொரு உடலையும் பார்ப்பன உடல்களாக்கியுள்ளது.அந்தவுடலை மீளவும் பண்பாட்டு நுகர்வில் சாதியக் கட்டுக் கோப்பால் தாழ்மைப் படுத்தியும் உயர்த்தியும் கூறுபோட்டு மிகவும் கொடூரமான நிறுவனமாகத் தொடர்கிறது.ஆதலால் பார்ப்பனியமென்பது இந்தியப் பொருளாதார உறவில் மேல்மட்ட அமைப்பாகவும் அதேயிடத்தில் மேல்மட்டத்தைத்தாண்டிய கீழ்மட்டத்தை நிர்ணயிக்கும் பரப்பொருளாகவும் நிலவுகிறது.இது உணர்வுகளுக்கு அப்பால் நிலவுகின்ற இந்தப் பிரபஞ்சத்துக்கு நிகராகத் தன்னை முதன்மைப்படுத்தி மக்களின் அனைத்து நுகர்வுக்குள்ளும் வந்து தொலையும் பாரிய உணர்வு நிலையாக மூளையில் இருத்தி வைக்கப்பட்டுள்ளது.இது இந்திய வம்சாவழி அனைவரையும்-அனைத்து சாதிகளையும் ஒருங்கே வென்றவொரு கருத்தியல் நிறுவனமாக இருப்பதால் அதை பண்பாட்டுப் புரட்சியூடாகத் தோற்கடிப்பதற்கான முன்னெடுப்போடுதான் வெல்ல முடியுமென்பதாகிறது.இதுவன்றிப் பொருளாதார உறுவுகளின் மாற்றத்தால் மட்டும் இதை உடைத்திட முடியாதாகிறது.இங்ஙனமே பார்ப்பனியத்தை வரையறுப்பது நமக்கு அவசியமாகும்.


இந்த நிலையில் மனிதரின்மீதான மதங்களின் ஆதிக்கம் பற்றிப் புரிந்து மேற்கொண்டு இவர்களை அம்பலப் படுத்துவோம்.


தொடரும்...

25.02.2007

Sonntag, Februar 18, 2007

நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்:1

"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."


(தொடர்)

முதலில் நாம் பார்ப்பனியத்தை எதிர் கொள்வதென்பது வெறும் கருத்தியல் தளத்தில் இரண்டு நபர்களுக்குள் இடம்பெறும் விவாதமாக எடுக்கப்படாது.இதை முதலில் புரிந்து கொள்ளும்போது உண்மையென்ற ஒரு நிலை நம் முன் வந்து தொலையும்.அந்த உண்மை என்பது என்ன?பார்ப்பனியம் ஒரு குறிப்பிட்ட உயர்த்திக் கொண்ட சாதியையோ அன்றிப் பின்பற்றப்படுகின்றவொரு மதத்தையோ குறிப்பிடப்படுவதில்லை இங்கே.

இந்தச் சங்கதியானது இந்தியத் துணைக்கண்டத்தில் மிகவும் பலாத்தகாரவடிவத்தில் மக்களையொடுக்கும் ஒரு அதிகெடுதியான ஒடுக்குமுறைக் கருத்தியல் நிறுவனமாகச் செயற்படுகிறது.அது மனித ஆழ்மனத்தில் புதிய வகைமாதியானவொரு ஆதிக்க மனிதனை உருவாக்கி வைத்துள்ளது.தனக்குள் வாழும் சக மனிதனை தன்னிலும் கீழான நிலைக்குள் தள்ளி அவனை-அவளை ஒடுக்கும் பாரிய ஒடுக்குமுறை மனோபாவத்தைத் தகவமைக்கும் உளவியலை இந்தப் பார்ப்பனியம் சாதிகள்,மதம்,பண்பாடு கடந்து,அனைத்துத் தரப்பினரிடமும்(அது பிரமணரென்ன பிள்ளைவாளென்ன தலித்தென்ன எல்லாத் தரப்பிடமும் தனது வேரை அகலப் பதித்துள்ளது)ஒடுக்குமுறைக் கருத்தியலாக உள்வாங்கப்பட்டு, இந்தியத் துணைக்கண்டத்தில் ஒடுக்கு முறை நிறுவனமாகச் செயற்படுகிறது.இதுதான் மிகப் பெரிய உண்மையாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் நாம் முன் வைக்கும் நமது வாழ்வியல் மெய்ப்பாடாகும்.


உண்மை-யதார்த்தம்,மெய்ப்பாடு இத்தகைய வார்த்தைகளின் பின்னே நிலவுகின்ற வாழ்வியல் முரண்பாடுகள் வலிய பொருளாதாரக்கட்டமைப்பால் முன் தள்ளப்படுபவை.இந்திய சமுதாய அமைப்பில் நிலவுகின்ற அனைத்து முரண்பாடுகளுக்குள் முதன்மை முரண்பாடானது பார்ப்பனியத்துக்கும் உழைக்கும் மக்களுக்குமான முரண்பாடாகும்.இந்தப் பார்ப்பனியத்தை எதிர் கொள்ளும்போது,அது குறித்தொரு வரையறை அவசியமாகிறது.அதாவது பார்ப்பனியமென்றால் என்ன?அதன் வியாபித்த சமூகத் தன்மை என்ன?இந்தப் பார்ப்பனியம் எங்ஙனம் மனிதர்களை ஒடுக்குவதற்கான வன்முறைக் கருத்தியல் வடிவமாகவும்-வன் முறை சாராக் கருத்தியல் நிறுவனமாகவும் இருப்பதென்பதை நாம் முதல் அறிவது.மிக அவசியமாகும்.

பார்ப்பனியம் என்ற சமூக உளவியலுக்கு இந்திய மேலாண்மை வர்க்கத்தின் அதீத குவிப்புறுதி ஊக்கத்தின் நிரந்தரச் சுரண்டலை நிறுவிக்கொள்ளும் பொறி முறையுள் முக்கிய இடம் இருக்கிறது.அந்த இடம் பார்ப்பனிய நிறுவனமாகச் செயற்படுகிறது.இதை நாம் வரலாற்றுப் புரிதல்களுடாகப் பார்ப்போம்.

இந்தியச் சமுதாயத்தை விஞ்ஞான பூர்வமாக விளங்கிக்கொள்ளாதவரை விடிவுக்கான போராட்டம் கருத்தியல் நிலையிலேயே தோற்கடிக்கப்பட்டுவிடுகிறது என்றே நாம் கருதுகிறோம்.இந்தச் சிக்கலைப் புரிவதற்கு நாம் தத்துவார்த்த முறைக்குள்ளாலேயே விளக்கப்படுத்த முடியும்.இந்த அடிப்படை தவிர்ந்த வேறுவகையில் கருத்தியல் பார்வைகளை இலகுவில் விளக்கப்படுத்த முடியாது.இதற்காக நாம் எத்தனை மாதத்தையும் செலவு செய்து இந்தத் தளத்தில் இதை எழுதுவதாகவே முடிவெடுத்துள்ளோம்.அனைத்துப் பிரச்சனைகளையும்-அதாவது நம்மட புலிப் புலம்பல்,ஈழம் ...எல்லாம் இப்போதைக்குக் கிடப்பில் போட்டு,அர்விந்துக்களைச் சந்திப்பதே நம்மட தலையாயக்கடமை.இனி மேலே போவம்.

பருப்பொருள்சார்ந்த வாழ்நிலை வடிவங்கள்.


தத்துவார்த்தத் துறையின் அடிப்படையான கேள்விகளுக்கு அழமான-அறிவார்ந்த மற்றும் மெய்பிக்கபட்ட விஞ்ஞானரீதியாகப் பதிலளிக்க வேண்டுமென்றால் நாம் பருப்பொருள் மற்றும் உணர்வின் குணவியல்பு பற்றிய அறிவை முன்னதாகக் கொள்வதுதான் சாத்தியம்.இன்றைய உலகத்தில் கருத்தியலானது முற்றும் கருத்துக்களால் ஆனாது.அதற்கு உதாரணமாக நாம் அனைத்து மதம் சார்ந்த மொழிவுகளையும்,அது கற்பிக்கும் ஒழுக்கங்களையும் மனதில் இருத்தும்போது மிக இலகுவாகப் பலவற்றைக் குறித்தொரு முடிவுக்கு வர முடியும்.ஆனால் பொருள்முதல் வாதமென்பது பருப்பொருள் பற்றிய கருத்தமைவோடு பாரிய மனிதப் புரிதலைச் சாத்தியமாக்கிறது.அது முன் மொழிவுகளைக்கடந்து இந்தவுலகத்தின் அனைத்து விடயங்களிலும் பாரிய விஞ்ஞான பூர்வமான தெளிவைச் சொல்கிறது.இதுதான் இந்தவுலகத்தின் பாரிய ஒடுக்குமுறை நிறுவனங்களை இனம்கண்டு தொழிலாள வர்க்கத்துக்கு எச்சரிக்கை விடுகிறது.இங்கே பருப்பொருள் குறித்தும் அதன் வாழ் நிலையின் வடிவங்களையும் நாம் முதலில்ப் புரிந்து கொள்வது அவசியமாகிறது.இதுவன்றிப் பார்ப்பனியத்தின் காட்டுமிராண்டித்தனமான கருத்தியல் பாசிசத்தை இனம் காண்பது கடினம்.இந்தக் கருத்தியல் பாசிசத்தை திருவாளர் உம்பேர்ட்டோ எக்கோவின் குறிப்புகளிலிருந்து இறுதியில் மிகத் தெளிவாகப் பார்ப்போம்.


பருப்பொருள்,இது என்ன சாமான்?:


மனிதர்கள் கணக்கிலடங்காத வகைவகையான பொருட்கள் மற்றும் புலப்பாடுகளால் சூழப்பட்டு கிடக்கிறார்கள்.இவையெல்லாம் விழிகளுக்குப் புலப்படாத அணுத் துகள்களிலிருந்து மாபெரும் நட்சத்திர மண்டலங்கள் கடந்து கிளெக்சி வரையும்(எட்வின் கூப்பிளின் பெரு வெடித் தத்துவத்தை நாம் ஏற்பவர்களில்லை)சாதரணக் கிருமிகளிலிருந்து உயர் மட்ட மிருகங்கள் வரை,அசேதன உலகின் எளிமையான இயங்கியல் நிகழ்வுப் போக்கிலிருந்து யதார்த்தத்தை மாற்றுவதைக் குறிக் கோளாகக்கொண்ட மனித மூளையின் உணர்வு பூர்வமான மனித நடவடிக்கை வரை பரவிப்படர்ந்துள்ளன.

புராதன காலம் தொட்டு இந்தவுலகத்தின் வேறுபட்ட தன்மைகளினது மூலத்தைக் கண்டுபிடிக்க,அதன் வாழ் நிலைக்கான அடிப்படையைக் காண மனிதர்கள் முயன்று வருகிறார்கள்.(இங்கே பார்ப்பனாகளில் பலர்... அரவிந்தன் போன்றோர் விதிவிலக்கு.ஏனென்றால் இவர்கள் உபநிஷதம் பற்றிய கொள்கையுள் முடங்கி மூலப் பொருள் பிரம்மம் என்றார்கள்.நம்மட ஆட்கள் சொன்னாங்க லோகாயுதம் பற்றி.லோகாயுதக்காரருக்கு எப்போதும் பிரத்தியட்சப் பிரமாணங்கள் அவசியமாக இருப்பதால் அவங்க சொன்னாங்கள்:"நிலம்,நீர்,காற்று,தீ"இந்த நான்குமே மூலப் பொருளாக.பாருங்க இவங்க நம்மட ஆளுக கொஞ்சம் முன்னோக்கித் திங் பண்ண பார்பபனப் பண்டாரங்கள் பிரம்மம் என்று கற்பனை செய்து"தத்துமஸி,அஹாம் பிரஹ்மாஸ்மி"என்று கூறிக் கொண்டு,உலகத்துக்கு எதுங்க ஆதரம் என்றால் "பிரும்மம்"என்றார்கள்.மேலும் கேள்வி தொடர்ந்தால் உடனே "இனிக் கேள்வி கேட்டாய் கம்முனாட்டி ஒண்ட தலை வெடிசிப்போடும் ஆமா!" என்று அப்பவே காதில பூச் சொரிகினார்கள்.)இயற்கைக்கு மேலான ஒரு சக்தி,ஒரு தனி முதலான கருத்து அல்லது உணர்வுதான் உலகத்துக்கான முதற்காரணம் என்று நம்ம அரவிந்துக்கள்-கருத்து முதல்வாதிகள் கருதினார்கள்.நம்மைப்போன்ற(மண்டையில் கொஞ்சம் மயிர் கூச் செறியச் சிரியுங்கோ) பொருள் முதல்வாதிகள் வாதிகள் இயற்கையை அதன் யதார்த்தத் தன்மையிலேயே உணர்ந்தனர்-பார்த்தனர்-கண்டனர்-புரிந்தனர்.

நம்மட ஆட்க்கள் பொருள் முதல் வாதத்தை முன் நிறுத்தியபோது"புத்தஞ் சரணம் கச்சாமே"கோஷ்டிகள் உலகில்"மாறும் பொருளின்றி மாற்றமே நிரந்தரம்" என்று ஒரு உண்மையைப் போட்டுடைத்தார்கள்.இந்தத் தரணத்தைக் கடந்து வந்தவர்களான பொருள் முதல்வாதிகள் உலகத்தின் அடிப்படையை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக பருப்பொருள் பற்றிய கருத்தமைவைப் பயன்படுத்தினார்கள்.ஆனால் பாருங்க இங்கே பருப் பொருள் என்றால் என்ன?இந்தப் பெரிய பிரமாண்டமான பிரபஞ்சத்துக்கு மூலம் என்ன-ஆதாரமாக இருப்பதென்ன?

இன்று உலகத்தைப்பற்றிய மெய்யான அறிவை மனித குலம்(பார்பனர்கள் அல்ல)பெற்று விட்டதால் மேற் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பற்பல விடைகள் முன் வைக்கப்பட்டு,விடைகள் மாறிய வண்ணமுள்ளன.

நம்மட பண்டையக் காலத் தத்துவக் கிழங்கள் நீர்,காற்று,நெருப்பு,பூமி போன்ற பல்வேறு பரவிப்படர்ந்த பொருட்கள் அல்லது புலப்பாடுகளைக் கொண்டு பருப்பொருளின் பாத்திரத்தை நன்றாகத் துலங்க வைக்க-வர்ணிக்க முனைந்தனர்.பின்னர் அணுத் துகள்கள்(இதைச் சொன்னவுடன் நம்மட அர்விந்துக்கள் என்னே பெரிய அணு?வைசேஷிகம் சொல்லாத அணுவா? என்பார்கள். நாம அதையும் கடப்போம்.ஏனென்றால் பொருளும் உண்டு,மனமும் உண்டு என்பவர்கள் வைசேஷிகர்கள்.இவர்கள் கருத்து முதல் வாதிகளின் கடைக் கோடிகள்)என்று அழைக்கப்படுகின்ற பிரிக்க முடியாதென்ற(இப்போது பிரித்து உபயோகத்துக்குள் வந்த),மாற்ற முடியாதென்ற(இப்போது மாற்றித் தகவமைக்கப்பட்ட),கணிக்கிட முடியாதென்ற(இப்போது கணக்கிடுவதற்கு முடியுமென்றாகிய)மூலக் கூறுகளைக் கொண்டது பருப் பொருள் என்று அன்றைக்குக் கருதப்பட்டது.

தொடரும்...

Samstag, Februar 17, 2007

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும்...

அரவிந்தன் நீலகண்டன்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகள்.


"பார்ப்பனியத்தின் நாசிய விசுவாசம்-இஸ்ரேலிய உருவாக்கம் மற்றும் ஹோலோகவ்ஸ்ற் பற்றிய புரிதல்கள்."



இந்தவுலகத்தில் ஒடுக்குமுறையாளர்கள் எப்படி-எப்போது உருவானார்கள் என்பது முக்கியமல்ல.ஆனால் இப்போதும் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவதற்கும்,அதை இறைவன் பெயரால் உண்மையானது,நிலையானது என்பதற்கும் பின்னாலுள்ள சதியை நாம் புரிந்து கொள்வது மிக அவசியமாகும்.

இந்தியாவில் மட்டுமல்ல அதன் தொங்கு சதை நாடுகளான தென் கிழக்காசிய அனைத்து நாடுகளிலும் இந்தப் பாசிசப் பார்ப்பனியமானது நாசியக் கருத்துக்களைவிட மிக மோசமான நிலையெடுத்து வருகிறது.நாசிசத்துக்கு வக்காலத்து வாங்கும் இந்தியப் பார்ப்பனிய அமைப்புகைளை நியாயப்படுத்தும் கட்டுரைகளை எவ்வளவுதான் சிரத்தையோடு எழுதினாலும் இந்தப் பார்பனியத்தை நாம் நாசியக் கருத்தமைவுகளைவிடப் பன் மடங்கு விபரீதமான ஒடுக்குமுறைக் கருத்தியல் என்கிறோம்.கூடவே வன்முறைக் கட்டமைவாகவுமே பார்க்கிறோம்.

இது குறித்துப் பார்பான் நீலகண்டன் அரவிந்தன் சொல்வதைவிட நாம் இவர்களின் வரலாற்றுப் பூர்வமான மோசடிகளை அம்பலப்படுத்துவோம்.


நண்பனின் பதிவில் நாம் விவாதித்தபோது"கழிசடை"-கேனைத் தனம்"போன்ற வார்த்தைகளைத் தனது தளத்தில் எழுத வேண்டாமென்றும்,தனி நபர் தாக்குதலைச் செய்வது தனக்குப் பிரியமில்லையுமென்றார்.

அவரது நியாயத்தின்படி அது சரியாக இருக்கலாம்.

ஆனால் நமது உணர்வின்படி-அறிவின்படி நாம் இத்தகைய வார்த்தைகளைவிட இன்னும் மேலே போய் மலம் அள்ளிப் பார்ப்பனியத்தின்மீது வீசியடிக்கவே முனைவோம்.இது எமது நியாயம்.

எமது கடுமையான கோபத்துக்கு ஈராயிரம் ஆண்டுகளாகத் தொடரும் பார்பனிய ஒடுக்குமுறை நமக்கு ஏற்படுத்திய கொடும் நிகழ்வுகள் காரணமாகின்றன.தன்னைப் போன்ற சக மனிதர்களையே சாதி சொல்லிக் கேவலப்படுத்தும் பார்ப்பனியம் ஒருகட்டத்தில் எங்களுக்கு மலத்தையே உண்ணக் கொடுக்கிறது-கொலை செய்கிறது.இதையெல்லாம் அனுமதித்தபடி"ஐயங்கார்களுக்கு,அய்யர்களுக்கு,செட்டியார்களுக்கு,பிள்ளைவாள்களுக்கு,வெள்ளாளர்களுக்கு"சலாம் போட்டெழுதுவது நமக்கு நன்றாக இருப்பதற்கில்லை.தனது பெயருக்குப் பின்னால் சாதியைப் போடும் தரங்கெட்ட தற்குறிகளை மனிதர்களாகவா இன்னும் மதிக்கவேண்டும்.இவர்களுக்கு நாம் ஒரு தூ...காறித்துப்புகிறோம் என்று புரிக!
நாம் யார்?

நம்மைச் சாதி ரீதியாகவும்,மொழிரீதியாகவும் அடக்கியொடுக்கி,நமது வரலாற்று முன்னேற்றத்தைத் தடை செய்து,நமது வளர்ச்சியை முடக்கிய பார்ப்பனியமென்பது என்ன?

இதன் தாக்கத்தால் வலுவிழந்து மிக மோசமானவொரு சமுதாயமாகிய இந்திய நிலப்பரப்பை அன்னியர்கள் மிக இலகுவாகச் சூறையாடிய காலனித்துவக் கொடும் நிகழ்வுகளுக்கும்,பார்ப்பனிய ஒடுக்கு முறைக்கும் என்ன அடிப்படை உந்து சக்தியாக இருக்கிறது?

இன்றுவரை தொடரும் கருத்தியல் மற்றும் வன் முறைத் தாக்குதல்களைப் பார்ப்பனிய அரசியல் சட்டமும் அதன் தொங்குசதைப் பாராளுமன்ற ஜனநாயகமும் அனுமதிப்பதன் உட்சூத்திரமென்ன?

இவையனைத்தையும் குறித்து நாம் விரிவாகப் பார்ப்போம்.இவற்றைத் தொடராகவே எழுதுகிறோம்.எமக்குக் கிடைக்கும் ஒரு சில மணி நேர அவகாசத்துள் இவைகளைத் தொடராகவே எழுத முடியும்.

நால் வர்ணம் சொன்ன பார்ப்பனியம்:

இன்று வரையும் நால் வர்ண அடிப்படையில் ஆட்சியமைப்புகளை நிறுவி ,எம்மை நாயிலும் கேவலமாகக் கழித்தொதுக்கி வைத்திருக்கும் பார்ப்பனியப் பண்டாரங்களை நாம் கழி சடை-கேனைத் தனமானவர்களென்றுதானே சொல்கிறோம்.ஆனால் அவாள் சொல்றேள்:"நீ சூத்திரின்.தள்ளி நில்,தீட்டு-தமிழ் நீசபாஷா."என்றே எம்மை உயிரோடு கொல்லும் மனித விரோதிகள் நாசிகளைவிடப் பன்மடங்கு கொடியவர்கள்.இவர்கள் நாசிகளை வாழ்தினாலென்ன இல்லை அவர்களை எதிர்தாலென்ன!சாரம்சத்தில் பார்ப்பனியத்தின் கருத்தியலே நாசிகளை விட மிக மோசமான மனிதவொடுக்குமுறைக் கருத்தமைவுகள் தானே?இதிலென்ன பூசி மெழுகல்?

இந்தியாவில் 160 மில்லியன் மக்களைத் தீண்டத் தகதவர்களாக்கி வைத்துள்ளார்கள்.இவர்களைப் பார்ப்பனியக் கருத்தமைவுகளைக் கண்ணாக மதிக்கும் பார்ப்பான் முதல் பனியா வரை உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் ஒடுக்குகிறார்கள்.பார்பனக் கருத்தியலையும் அந்தக் கருத்தியலைத் தொடர்ந்துருவாக்கும் பார்பனியப் பொருளாதார மற்றும் அதன் அரசியலையும் ஆதரிப்பது அல்லது சமரசம் செய்வதென்பது அணுக்குண்டைவிட ஆபத்தானதென்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.எவரெருவர் பார்பனியத்தோடு வருகிறாரோ அவரது முகத்துக்காகச் சமரசஞ் செய்வோமானால் அது இறுதியில் அழிவுப்பாதைக்கே நம்மையிட்டுச் செல்லும்.இன்றைய இந்தியாவின் அகண்ட பாரதக் கனவு இத்தகைய கறையான்களால்தான் வலுப்பட்டு வருவதென்பதையும் மிகத் தெளிவாகச் சொல்கிறோம்.

வரலாறு பூராகவும் உழைக்கும் மக்களைச் சாதிரீதியாகப் பிரித்து அவர்களை ஒடுக்கி வரும் பார்ப்னியம் என்பது ஏதோ பச்சைப் பிள்ளை போன்றதும்,பால்குடி போன்றதுமாகப் பார்பனர்கள் அவிழ்க்கும் அழுக்கு மூட்டைகளை நாம் தத்துவார்த்த முறைகளில் கட்டுடைக்கிறோம்.

யாருக்கு எழுதுகிறோம்?:


நாம் எழுதுவது நாகரீக(?)வாதிகளுக்கல்ல.
கருத்துகள்மீதான விமர்சனம் எப்படி அக்கருத்தை உருவாக்கியவரை விட்டு தனித்தியங்குகிறதென்பதையும்,அது இயங்குவதற்கான வெளியை எந்தத் திசையமைவு சாத்தியமாக்கிறதென்பதையும் நாம் வலுவாகச் சொல்வோம்.இதனால் அனைத்து அதிகார மையங்களையும் தகர்ப்பதில் எமது கவனம் பதியும்.இதைவிட்டு,அனைத்து மனிதவிரோத அதிகார மையங்களோடும் சமரிசித்துக் கொண்டு"சார் அது உங்களையல்ல...நீங்கள் சொல்வது றையிட் சார்...வட் நான்..."இந்தப் போக்கிரித் தனக் கருத்தாடல் நமக்குச் சரிப்பட்டு வராது.இங்கே எந்த அதிகாரத்துக்கும் நாம் ஒத்துப் போகத் தயாரில்லை!
எனவே "சார் கொஞ்சம் அடக்கிக் கண்ணியமாக எழுதுங்கள்"என்ற ஜல்லியடிக் குரல்கள் நமது காதுகளுக்கு விழவே விழாது.இந்த அதிகாரங்களுக்கும் அதை முன்னிலைப்படுத்தும் அனைத்து நிறுவனங்களுக்கும்-சமரசங்களுக்கும் எதிராகவும்,தீண்டத்தகதவர்களுக்கும் தெருவில் விட்டெறியப்பட்டவர்களுக்காகவே நாம் எழுதுகிறோம்.ஏனெனில் நாம் உதிரிகள்-பொறுக்கிகள்,அகதிகள்.

இனி விடையத்துக்குப் போவோம்.

தொடரும்...

Samstag, Februar 03, 2007

வேலுப்பிள்ளை பிரபாகரன்.



வேலுப்பிள்ளை பிரபாகரன்:"தன்னை"த் தேடியலைதல்.









தாக்குதல் வியூகம் அமைக்கிறார்:புலிகள் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
"தனி நபரால் எதிர்காலம் அழிவுக்குள்ளாகுமென்று கூற முடியுதே தவிர அதைப்போக்குவதற்கு உதவவோ அன்றியதைக் காத்துக் கொள்வதற்கோ முடியாது".-கீர்கேகார்ட்(டென்மார்க்கின் தத்துவவாதி)


நாம் தனி நபர்களாகவே இருக்கிறோம்.நம்மிடம் எந்தக் காரியம் குறித்தும் கருத்துக்களைத் தவிர காரியம் இருப்பதில்லை.நாம் ஒன்று கூடிக்கொள்வதற்கான எந்தவொரு வழியும் சிறப்பாகவில்லை.மக்களின் அனைத்துப் பிரச்சனைகளும் பிரச்சனைகளாகவே தொடர்ந்திருத்தி வைக்கப்படுகிறது.அதைப் போக்குவதற்கான நோக்கு இந்த உலகத்திடமில்லை.புவிப் பரப்பின்மீதான இடைச் செயல்கள் மனித வாழ்வைப் பூண்டோடு அழிக்கும் நிலைக்குச் சென்றபடியேதான் இருக்கிறது.
இந்த நிலையை மனிதர்களே எட்டி விட்டதாக அறிஞர்கள் சொல்வதும்,அதைப் போக்குவதற்கான எந்த நெறியுமின்றி அவர்களே வெறுங் கையோடு இருக்கையில் அமர்ந்து வெற்றுப் புன்னகை செய்வதும் நம் காலத்தின் உற்பத்திப் பொறி முறையின் தலைவிதியாகப் போகிறது.

அதீத வேட்கை பொருள் குவிப்பின் உறுதியோடு பிணைவுற்ற பொருளாதார வாழ்வில் நமது காலத்தில் மிகக் கடினமான பணி தொடர்ந்து உயிர்த்திருப்பதே.உயிர்த்திருப்பதற்கே இவ்வளவு கஷ்டமென்றால் உலகத்தின் எந்தக் காரியத்தையும் எத்தனை வளமிக்க அறிவும் செம்மையாகச் செய்ய முடியாது.வாழ்வோடு வந்து சேர்கிற மனித அவலம்"அதுவா அல்லது இதுவா"என்ற தேர்வையே நம் முன் கொணர்ந்து தடுமாற வைக்கிறது.இந்தத் தேர்வைத் தனி மனிதர் சார்ந்து தேர்ந்தெடுப்பதா அல்லது சமூகத்தின் பரம்பலில் தான் வாழும் குழுமத்துக்குள் தன்னை இனம் காணும் ஒரு எல்லையில் கூனிக் குறுகி நின்று பொதுப் புத்திக்கான பெரு விருப்போடு "நானே நீ"என்று தேர்ந்து கொள்வதா?எதைப் பற்றிய அசம்பாவிதமும் தற் செயலாக விரிவதென்றும்,உலகத்தின் எந்த இயக்கமும் ஒரு தொடர்ச்சியின் மட்டுப்படுத்தப்பட்ட வழங்கலாகவே இருப்பதாகவும் நான் உணர்கிறபோது இந்த நான் எவ்வளவு காலத்துக்கு மட்டுப்படுத்தப்பட்டேன் என்பதும் என் சிந்தையில் உருப்போட முடியாத உண்மையற்ற உறைவிடமாக-இருட்டு வெளியாக இருக்கிறது.

இங்கே வாழ்வோடு விருத்தியாகவேண்டிய மனித படைப்பு முற்றாகத் துண்டிக்கப்பட்ட பின் எந்த உன்னதங்களும் மனிதனுக்குச் சொந்தமில்லாது போய் அதுவது அதன் போலித் தன்மையோடு பொருமிக்கொண்டே இந்தப் புவிப் பரப்பைவிட்டு எங்கோ நெடுந் தொலைவில் பறந்தடிக்கிறது.

இங்கே தற் செயல் என்பது தற் செயலல்ல என்பது உண்மை.

இது உண்மை என்பதன் ஒரு தொடர் இயக்கம்.

அந்தப் புள்ளியைத் தேர்வினடிப்படையில் தேர்வு செய்வதைத் தவிர வேறு வினை இருப்பதற்காகவொரு சாத்தியத்தை இந்த உண்மை மறைத்தே வைத்திருக்கிறது.இது என்ன என்பதே கேள்வியாக விரியும்போது அந்தக் கேள்வியே வாழ்வின் தேர்வாக மாறுகிறது.

மதவாதம் மலிகிறது.

தன்னைத் தவிர்த்த இயகத்தின் மூலமொன்று சிந்தனையை வெருட்டிக்கொண்டே இருக்கிறது.

அது நெடுந்தொலைவிலிருந்து நம்மைச் சிறை வைத்திருப்பதாகச் சொல்கிறேன்.நானே ஒரு நிலையில் அவனுக்கான தூதுவராக என்னைப் பிரகடனஞ் செய்கிறேன்.

வளங்கள் அனைத்தையும் என்னைச் சுற்றி வைத்தபடி நான் அவனைத் தரிசிக்கும்படி கட்டளையிடுகிறேன்.

எனக்கும் இந்த இருப்புக்கும் இடையில் என் உணர்வுத் தொடர்ச்சி ஊசலாடுகிறது.அது படைப்பின் இன்னொரு விளிம்பில் என் ஆசையாக விரிகிறது.எனக்கும் ஆசைக்கும் இடையில் ஆக்கமற்ற அழிவு நிலைப்பதாக நான் உணர்கிறேன்.

ஆசையே அனைத்துக்கும் காரணமாகிறதென்று உணர்வேன்.

அப்போது ஆசையை நீக்கு என்கிறேன்.

அங்கேயும் ஆசையே நீக்கத்தைக் கோரும்போது நீக்கம் வெளியில் நிலைப்பதற்கான குறுகிய வட்டம் எனக்குள்ளதான் இருட்டாக மலிவுறுகிறது.வெளியின் தொடர்ச்சி வெளியே இல்லையென்பதும் என்னையழிக்கும் காலத்தில் நிலைப்பதால் மனிதப் படைப்பின் அந்நியத்தில் சுழல்கிறது.இங்கேதான் இந்த அந்நியமாதலை சொல்வதும் ஏதோவொரு அந்நியத்தின் அவசரக் குடுக்கைத் தனத்தின் பதிவாக அறிவது கட்டுத் தன்மையாகவே இருக்கிறது.அனைத்தும் புனைவுக்குள் கிடந்து மீளமுடியாதவொரு சோகத்தைத் தகவமைக்கும்போது சோகமென்பதும் புனைவுதான் என்று உணர்கிற உணர்வே புனைவாகச் சுழலும் தரணமெல்லாம் உலகத்துள் ஒன்றுமில்லை என்பதாகிறது.

உலகே மாயம்!

இங்கே நான் வசமாத் தப்பிக்கிறேன்.என்னைப் பின் தொடரும் ஆபத்தைத் தணிக்கிறேன்.அது என்னைக் கொல்லாதவரை-எனது இருப்பை அசைக்காதவரை எனக்குள் புனைவைத் திணிக்கிறேன்.

திணிப்தால் எனது நம்பிக்கைகளைத் தகவமைக்கிறேன்.

இந்த நம்பிக்கைகள் எனது பலவீனத்தின் இன்னொரு வடிவத்துள் நிலைபெறும்போது நான் போரிட வேண்டிய பொழுதுகளைக் காலம் எனக்குத் தந்து விடுகிறது.நான் எனக்காகவே போரிட முனைவதால் நானே இன்னொரு தொடர்ச்சிக்கு மூலத்தைப் பிரேரிக்கிறேன்.பிரமத்தின் பகுதி நானாக விரிவதாகச் சொல்லியே என்னைத் தொலைக்கிறேன்.

பிரமம் அநாதியாகிறது.

அநாதி அழிவின்றி இருந்து அடக்குமுறையாக விரிவதில் ஆக்கம் நிலைபெற முடியுமா?.

Freitag, Januar 12, 2007

பேய் ஓட்டுதல்

"ஒரு வாத்தியாரிடம் பாடம் கற்கும் மாணவனுக்கு"உலகம் உன்னில் தொங்குவதில்லை"யென அவரொரு கவிதை சொல்ல,அதை வெட்டருவாள் மாணவன் கிட்டி விளையாடும் வயதில் கிழட்டுக் கதம்பம் -நாய் என்கிறான்.வாத்தியோ வயசான காலத்திலும் வம்புக்காவேனும் வதைபடும் மாணவனைக் கவிழ்த்து விடுவதில் விருப்பின்றி,தன் வினை பணிசெய்து கிடப்பதாகச் சொல்லிக் கொண்டார்.பேதமை வாத்திக்கா அல்லது மாணவனுக்கா?"




பேய் ஓட்டுதல்.



போடுதலும்
கழட்டுதலும்
பின் போடுதலும்
எடுத்தலும்
சிதைத்தலும்
பின்னுவதும் பிரட்டுவதும்
தொடர்கதையாய் காலம் நகர,



அதன்பின் துடைப்பதும்
கழுவுவதும்
புரட்ட முனைவதும்
பேசக் கற்பதும்
எழுதிப் பழகுவதும்
எதற்கெடுத்தாலும்
குருதியேற்றம்
இறக்கம்
அழுத்தம்
எத்தனை
கதைகளும்
எருக்கலம் இலையாக!



கருத்தொடு கதை சொல்.
இல்லையானால் வாய் திறந்து
பேசாதே மற்றவை-மற்றவர்கள்
புராணம்!



போதும்,
பேய்விரட்டல்கள்
புரட்டல்கள்.



பிசாசுகளின்
இருப்பைப்பற்றிக் கதைகாவிக் கொண்டிருப்பதைவிட
கருத்தோடு
எதிர்வினை வை.



அல்லாது போனால்
அவித்த சோற்றை மெல்ல மென்று
அம்மாவிடம்
தோசைக்கு மா அரைப்பதுபற்றிக் கேள்
பின் அந்த வேலையில்
அம்மாவுக்கு உதவு.


எத்தனை முறை
எத்தனை கர்ச்சனை!
எதிலும்
உப்பும் இல்லை
உறைப்பும் இல்லை.


இதுவா
பேய் விரட்டும்
உடுக்கையடி?



உலக்கையெடுத்து
உரலிடிக்குமுன்
உரலில் உமியா நெல்லாவென்று
பார்த்துக் கொண்டால்
இடிப்பது
உணவுக்கு உதவுமா இல்லை
விழலுக்கு இறைத்த நீராகுமா என்பது தெளிவு.


உன்னை
உலகப் புள்ளியின் மையத்தில் ஏற்றி வைத்துவிட்டு
நீ சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும்
உன்னைப் பின்னியே உலகில் வந்து தொலைக்கிறது!


உலகம்
உனது மையப் புள்ளியல்ல-நீ
அதில் மேடை தேடுகிறாய்
ஆடிக் கொள்வதற்கு
அவ்வளவுதான்.



அவசரப்பட்டு
அடுக்கிவிடும்
வார்த்தைக்கு அர்த்தம் இருப்பதில்லை
அதிலும் நீ சொல்லும்
கதைகளெல்லாம்
அலட்டல்-நமைச்சல் உனக்குத்தான்.



அந்தரத்தில்
ஆயுதம் தூக்கி
அடுப்பெரிக்கப் புணங்களை அள்ளிப் போட்ட
கதைகளின் அரிச்சுவட்டில்
நீ
ஆடுகிறாய்
கீச்சு மாச்சுத் தம்பலம்
மாச்சு மாச்சுத் தம்பலம்
இப்ப நீ
மூச்சு!



கவிஞர் சேரனும் சில நினைவுகளும்...

'மீண்டும் கடலுக்கு' தொகுப்பை முன்வைத்து- எப்போதெல்லாம் தூக்கம் வருமெனச் சொல்ல முடியாதபடி உழைப்பு நடக்கின்றது.எப்ப பார்த்தாலும் சனங்களுக்கு ஏதாவதொன்றுக்கு ஆசையாய்த்தான் இருக்கு!
எனக்கும் ஊருக்குப் போய்-சண்டை நடந்தாலும்,சனங்கள் செத்தாலும்,ஆச்சியப்பு மூச்சுவிட்டாலும் பறுவாயில்லை-வடிவாகச் சுத்தித்திரியவேணும்.வன்னிக்குள்ள போய் காட்டுப்பண்டியோட ஒருபோத்தல் நாட்டுச் சரக்கை மூக்கு முட்ட விட்டுட்டு;.பிறகு ஒரு உந்துரளி,பின்னுக்கொரு பஞ்சாபி... சொல்லவா வேணும்!

வன்னிக்குள்ள மச்சாள் புல்லுப் புடுங்கிறாள்.அவளைப் பார்க்கிறத்துக்கும் உது நல்ல வாய்ப்புத்தான்.எண்டாலும் நம்மட நிலைமையில உந்தக் கனவுகளைச் செய்யிறத்துக்காவது நாம கொஞ்சம் அடக்கி வாசிக்கிறதெண்டு யோசிச்சுக் கன நாளாச்சு.

ஆரு செத்தால் எனக்கென்ன!

எவனுக்குப் போட்டுத் தள்ளினாலென்ன!

பேசாதே!

ஊரெல்லாம் ஒன்று கூடி அழுதாலும்,நாம பாட்டுக்கு ஆப்பிரக்கப் பழங்குடிகள் பற்றியோ அல்லது அமெரிக்கப் பழங்குடிகள் பற்றியோ பேசுவம்.மிஞ்சிப் போனால் இருக்குது சினிமா.பிறகென்ன நம்மட திருவிழா நல்லா நடக்கும் தானே?

".........................."

கோவிக்காதேங்கோ.நானும் இப்படிப் பண்ணாட்டி நாட்டில போய் மேய முடியாதில்லையோ!பேந்து பேசக்கூடாது! மூச்!!


எனக்குக் கவிதையெண்டால் சரியான விருப்பம்.

முன்பெல்லாம் பாரதியில தொடங்கி இப்ப நம்மட வைரமுத்துவின்ர கவிதையிலும் கொஞ்சம் பற்றுத்தான்.

அவருக்குப் பாட்டெழுத வரும்,படிக்க வரும்,பேச்சும் வரும்!


எனக்கும் கொஞ்சம்...

வேண்டாம் உதுபற்றிச் சொல்லக் கூடாது.


முன்னொரு காலத்தில் முழுமொத்த இலங்கையிலும் நாம கால் பதிச்ச போது,நல்லாத்தான் இவன்களோட நானும் ஒட்டினன்!மறுத்தோடுகிற நானாத்தான் இருந்தனான்.இப்பதான் கொஞ்சம் படிச்சதெண்டும்,பாடம் சொல்லிக் குடுப்பதென்றும் கொஞ்சம் மவுசு வந்திருக்கு...


இப்ப என்னத்துக் உதுகளப் பேசுவான்?

"நான் உன்னை நீங்க மாட்டேன்
நீங்கினால் தூங்க மாட்டேன்..."


"..............................."

"...சேர்ந்ததே நம் ஜீவனே..."

எப்போது சுந்தரி?

சும்மா விடுங்கோ!

"சுந்தரி,சும்மாவொரு செய்தி சொல்லேன் நீ கொஞ்சி!"

ஆசையைப்பார்,ஆசையை!


என்ர மச்சாளுக்கு நல்லாத்தான் நாணத் தெரியும்.கொஞ்சம் தூக்கலான மார்புக்குள்ள மாட்டாத சீவன்கள் எவரோ?

உப்பிடித்தான் எனக்குப் பொண்டுகளெண்டால்.

என்னை பொண்டுகளாலேயே கட்டிப் போட்டிருக்கிறன்.


"மனிதர்கள் புரிந்துகொள்ள
இது மனிதக் காமம் இல்லை
அதையும் தாண்டிப் புண்ணாக்கானது"


காமத்தைப் பற்றி கொட்டாம்பட்டிச் சுப்பு என்னமாக் கவிதை எழுதுகிறார்!
இது மாதிரி உவருக்கு ஒரு சொட்டும் வருகுதில்லை.எண்டாலும் ஏதோ பதினெட்டாம் நூற்றாண்டு மொழியோடு சொல்லுகிறார்.அறிவுக்கும் உணர்ச்சிக்கும் இடையில கையப்போட்டு உவர் நடாத்திய கவிதா நிகழ்வால் மோனத்தைக் கண்டவர்களுள் நானும் ஒருவன்.


அக்காவின்ர கையப் பிடிச்சுக்கொண்டு கிணற்றுக்குள்ள விழுந்த தரணத்தில் அப்பாவோடு தமிழ் நாட்டில் சுத்தக் கொடுத்து வைத்ததில் எப்பவோ வைரமுத்துவோடயும் சேர்ந்தொரு படமும் எடுத்துப் போட்டன்.காவி நிறுத்தில ஒரு கந்திரி.

அடப் பாவி!உதென்ன கதையடா?


சும்மா விடுங்கோ மேலே போங்களேன்!

டி.சொய்சா என்றொரு பத்திரிகையாளர் இலங்கையில வாழ்ந்தார்.நிலவுகின்ற ஒடுக்கு முறைகளை-பிரேமதாசாவின் அட்டகாசங்களை ஆத்திரத்தோடு அவிட்டு விட்டார்.அந்தோ அவரும் போனார்.

டி.சொய்சாவோடு நானும் பத்திரிகையாளானாக இருந்தனான் எண்டார் ஒரு கவிஞர்.

இவர் இப்ப ஒடுக்கு முறையோடு ஒன்றிப் போய் அதன் ஒழுக்கம் தவிர்க்க முடியாதாம்.

இருக்காதா பின்ன?

நான் பாருங்க அப்பப்ப உப்பிடிதான்...


"முன்னே செல்லும் மூன்றடி கருதி,
பின்னே வைக்கும் ஓரடியாலே,
பெரிதாக எந்த இழப்பு இல்லை!"


இப்ப எல்லாரும் இப்படித்தானாம்.

"கோரிக்கையற்றுக் கிடக்குதண்ணே-இந்த
வேரிற் பழுத்த பலா"

ஓ...பாரதி தாசனோ?

ஆமா!

நாம இப்ப ஆருக்காவது தாசனாக இருப்பதுதான் சரி.நம்மட கனவுகளுக்கு வடிவம் கொடுக்க இதுதான் சரி.


"எழுதப்படாமலேயே
போயிருக்க வேண்டிய
ஒரு கவிதை."

ம்... மேலே சொல்லுங்க!

"சவப் பெட்டிகளைத் திறந்து வையுங்கள்"

இன்னும் மேல போய் மறுத்தோடுங்க சார்!

அப்படியா?

இதோ!

"நெடு மரப் பெரு நிழல்கள்
ஒடுங்கி,
சோகமாகப்
புற்களின் மேல் விழுந்திருகிற
இந்த நிலத்தில்
காற்று எப்போதும் போல
விட்டு விட்டு வீசீக் கொண்டிருக்கிற
நேரத்தில்
இன்னும் நிறைவேறாத ஆசைகளும்
இலட்சியங்களும்(எவன்ர தலையில எவளின்...)
அறுந்து
துயர இழைகளில் ஆடிக்கொண்டிருக்கும்
ஆறடி நீளம்(ச்சீ இவ்வளவு நீளமா?) இரண்டடி அகலம்(இது சரிப்பட்டு வராது)
என ஒரு வெளியில்


அந்த இரு
சவப்பெட்டிகளைத் திறந்து வையுங்கள்
கொஞ்ச நேரமாவது
புதிய ஆடைகள் வேண்டாம்
அகதி முகாம்களில்
மாற்றுடையின்றித்
தோய்த் ஆடை
உலரும் வரைக்கும்
மறைப்பினுள் நிற்கும்
நம் பெண்களை(உவருக்கு உதில பாருங்க சரியான அனுபவம்...) நினைப்போம்


குருதி படிந்த அங்கிகளைச்
சற்றே தளர்த்தி
இரணங்களைத் தெரிய விடுவோம்
மெல்லிய வெய்யில்
இலைகளுக் கூடாகப் ப+க்களாய்
அவற்றின் மேல் உதிரட்டும்
காற்று வந்து
தடவிச்("..........")செல்லட்டும்


தலை சிதறிக்
குருதி நிலம் தெறிக்கக்
கொலை நடந்த இடத்தில்
குருதியில் ஊறிய
சுலோக அட்டை கிடந்ததை
மறுபடியும் அனைவரும் நினைப்போம்

ஒரு வகையில்
இந்த உடல்கள் அதிஸ்டம் உள்ளவை
சவப்பெட்டி
ரப்பர் வாசனையின்றி எரிய
விறகுகள்
சுற்றியழச் சுற்றம்
கண்ணீர் அஞ்சலி
கவிதை வரியில் துண்டுப்
பிரசுரம்


பெட்டியில் அடங்கும்
வாய்ப்பே அற்று
மயான மூலையில்
முகமறியா இருளில்
முகமிழந்து புதைத்த உடல்களை
பாதி எரித்து
மீதி அழித்து
சிதைத் உடல்களைச்
சுதந்திரத்துக்காய்க்
களத்திலிறங்கிக்ச்
சுதந்திரம் இழந்தவர்களை
நாம் நினைத்திருந்தால்
மிகவும் கொடிது
இது எதிரியின் வேலையல்ல
எம்மவர் கொலைக்கரம்
பதித்த சுவடுகள்


கறைபடியாக் கரங்களெனத்
திக்கெட்டும் பறையறைந்து
கவி சொன்ன
என் வாய்குச் செருப்படி


நியாயப் படுத்தத் துண்டுப் பிரசுரம்
போலித் தராசு,
நீலிக் கண்ணீர்

உதவாது தோழரே
நமது
ஒரு தேசத்தின்
அரசியல் தற் கொலை இதுவென அறிக!


கரங்களில் உயரும்
கருவிகளைப் பறிக்கும்
ஒரு மக்கள் குரல்
அராஜகத்தின் வேருக்கு
ஒரு கண்ணீர் வெடி.

-சேரன்(1987)

(ஈழ விடுதலைப் போராட்டத்தின் போர்க்கால இலக்கிய வரலாற்றின் எழிச்சிக் கவிஞனாகிய சேரன்
ஜனநாயகத்துக்காகப் போராடியதால் அதன் எதிரிகளால் மிரட்டப்பட்டவன்.-தி.உமாகாந்தன்)


இன்றைக்கு அண்ணாச்சி"மீண்டும் கடலுக்கு" போனார்.போனபோது அது குருதியால் நிறைந்திருந்தைக் கண்ணுற்றார்.அந்தக் குருதியின் உறவு தன் பிடரிவரை வருவதை அறிந்தார்.

எடுத்துப் போட்ட ஏதோவொன்றுக்காகக் "கண்ணீர்"வெடியென்று பிரகடனப்படுத்தாமல்
"தேசியம்"பாடிப் பல்லுக்காட்டிப் பட்டம் பிடித்தார் புயலில் ஏற்றி விண்கட்டிப் பறப்புக்கு.
இப்ப எனக்கு ஒரு சின்ன மனசு அழுகுது.
என்னங்கடா இது?
"உதவாது தோழரே" என்ற நம்ம "எழிச்சி"க் கவிஞரும் அவரை வாசித்த வாசகரும் பொருந்தி நிற்கும் இடம் இதுதான்:


//அதே சமயம், பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாய் புலம்பெயர்ந்து வாழும் சேரனுக்கு இங்கு நடக்கும் தற்கொலைகள், பெண்கள் மீதான வன்முறைகள், நாற்றமடிக்கும் சாதிய அழுக்குகள் எதுவும் சலனமடையச் செய்யவில்லை என்பது ஆச்சரியப்படுத்தும் விடயந்தான். சிலவேளைகளில் வானத்தில் பறக்கும் பறவைகளுக்கு மண்ணில் நடக்கும் நிகழ்வுகள் குறித்து அவ்வளவு அக்கறையிருப்பதில்லையோ தெரியவில்லை.//


இங்கே தேசியம் என்றால் தேனாகிக் குருதி சிந்தும் கணங்கள் மறந்து,உலகப் போராட்டம்,விடுதலைக் குரல்கள்-கறுப்பினப் போராளிகள் பற்றிக் கயிறு விடுவதுதான் இவர்களின் நியாயப்பாடு!

இருக்காதா?

என்னைப் போலத்தான்,
வன்னிக்குள்ள போய் நல்ல காட்டுப் பண்டி பிடித்து...


















Donnerstag, Januar 11, 2007

யுத்தமும்,கவிஞர் மேத்தாவும்.






யுத்தமும்,கவிஞர் மேத்தாவும்.


பலருக்கு மேத்தா ஒரு கவிஞர்.உண்மையில் மேத்தா கவிஞர்தானா?
இந்தக் கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது.ஏனென்றால் மேத்தா எழுதியதெல்லாம் வெறும் வசனங்களே.அவை கவிதைக் குரிய எந்த அழகையும் கொண்டிக்ருக்கவில்லை.ஏனெனில் அவர் யுத்தத்தை எதிர்க்கிற கவிதையெல்லாம் எழுதிப்போட்டார்!

கூடாதே,இது கூடாதே!!


ஒரு நாடு,
ஒரு மக்களினம்
தனது இறைமைக்காகச் செய்யும் யுத்தம் மிகவும் அழகானது.
கொட்டும் குருதியெல்லாம்
வீரத்தின் விளை நிலத்தில்
மறப்பயிர்களை விளைவிக்கும்.


குருதி சிந்துதே,
குழந்தைகள் சாகிறார்களே,
அப்பாவிகள் அழிகிறார்களே என்று பார்த்தால்
யுத்தம் தீர்வைத் தராது.
மாறாய் பின்னடைவைத் தரும்.

மக்கள் அழிவது தவிர்க்க முடியாது!
மக்கள் பசித்திருப்பது சாதரணமானது.
அகதி முகாம் வாழ்வு வந்துவிட்டால் என்ன?

நாளை விடியப் போகும் ஈழத்தில் இருக்கிறது உங்கள் நிம்மதி!

இல்லையா?



எங்கள் தலைவரிடம் மீளவும் போவோம்.


தேசியத் தலைவர் கூறுகிறார்:"..............................."இப்படி.இதன் அர்த்தம்,பேசாதே!என்பதாகும்.எதற்கும் அடிதான் மருந்து.

ஆனால் மேத்தாவின் பலவீனமே வெறும் வசனங்களாக வருகிறது.

பாருங்கள் அவருடைய கவிதைப் போர்மூலாவை:

"புயலை உருவாக்கும்
வல்லமை படைத்தவர்கள்
ஆனால்
தம்முடைய வாழ்வில் ஒரு
காற்று வீசாதா என்றுதான்
காத்திருக்கிறார்கள்.

இமயத்தையும் தாங்கவும்
வலிமை கொண்டவர்கள்
ஆனால் அவர்களுடைய
சொந்த
இதயம் கனப்பதைத்தான்
அவர்களால்
தாங்கிக் கொள்ள
இயலவில்லை...."


இதை இப்படி எழுதினால் என்ன வரும்?


"புயலை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் ஆனால் தம்முடைய வாழ்வில் ஒரு காற்று வீசாதா என்றுதான் காத்திருக்கிறார்கள்."


"இமயத்தையும் தாங்கவும் வலிமை கொண்டவர்கள்,ஆனால் அவர்களுடைய சொந்த இதயம் கனப்பதைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை."


புதுக்கவிதை என்றொரு பாசாங்கில் மேத்தா எழுதிய வசனங்களையேதான் இன்று நாம் பார்க்கிறோம்.


கவிதையென்பது வாசிக்கும் பொழுது நெத்திப் பொட்டில் அடிக்க வேண்டும்.உணர்வைச் சிதைத்து மீளவும் கலைத்து ஒருங்கு படுத்த வேண்டும்.இஃதில்லாக் கவிதை கவிதைதானா?

இதோ ஒரு கவிதை:

"மண்ணில் எங்கள் மைந்தனாய்
மலர்ந்திட்ட இளையவன்-மலரவன்
அண்ணர் மூவரின் அரும் பெரும்
ஆருயிர்ச் சோதரனாகியவன்.

குலம் விளங்க மலர்ந்தவன்
குடும்பத்தின் ஒளி விளக்கானான்
பாசத்தை உணர்த்திய பாலகன்-இவன்
பண்பினால் பலரைக் கவர்ந்தவன்.

"......................"

இலட்சியப் பயணங்கள் மேற்கொண்டு
பசீலனை இயக்கிடும் பணி செய்தான்

"..................."

இடை வழியில் அவனை இழந்திட்டோம்
இராணுவ வேலியை அழித்திடவே
இளம் வேங்கையவன் வேட்கை கொண்டதனால்
களத்தில் காவியம் படைத்திட்டான்.

"..................."

"????????????????????"
"............................."

-கப்டன் மலரவனின் பெற்றோர்.




இதை எழுதினது எங்கட தேசத்துப் பெற்றோர்!
தங்கட மகன் புலியில இருந்து,
இராணுவ முகாம் தகர்க்கப் புறப்பட்டு இறந்தபோது,
இப்படி மகிழ்வோடு பாடுகிறார்கள்.
யுத்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியானது.
தாம் பெற்ற மகனே களத்தில் பலியாகியதும்,
போரடிக் கொண்டே ஒரு நாவலையும் எழுதி-"போர் உலா"ப் போன மலரவன் பெற்றோரால்
மகிழ்வோடு பாடையில் அனுப்பப்பட்டபோது,உந்தக் கோதாரிபிடிச்ச மேத்தாவுக்கு யுத்தம் பற்றியென்ன தெரியும்?


ஆனால் மேத்தா நான் வாழும் காலத்துக்குரிய கவிஞனே அல்ல.



மலரவன் யுத்தத்தில் செத்ததால்
ஈழ அன்னையின் கருவில் கிடந்து துடிக்கிறான்!
நாளை மலரப் போகும்
தமிழீழத்தில் அவன் தவழும் பொழுதுகளில்
தமிழ்த் தாய் அகம் மலர்வாள்.
எனவே,
காலத்தில் வாழும் அவன் கவிதையாகி நிற்பது வேறு...


மேத்தாவுக்கு ஏதோ புலம்பத் தெரியுது.


யுத்தம் இல்லாத பொழுதும் ஒரு பொழுதா?
அடிமை வாழ்வுக்கு யுத்தம் அவசியமில்லை.
நாம் ஈழத்தின் விடியலுக்காகப் போராடும் நெருப்பு மனிதர்கள்.

யுத்தம் நாம் ஆடும் விளையாட்டு,
வெடிச் சத்தம் நாம் கேட்கும் தாலாட்டு,
புலிகளின் படை கண்டால் புயலாய் ஓடுவார்கள் உலகத்து இராணுவங்கள்!
நாங்கள் போரிட்டால் அமெரிக்காக நடுங்கிச் சாகும்!,
இந்தியா இடறி விழும்-இடிந்து ஓய்ந்துவிடும்!



இதுகூடத் தெரியாத மேத்தா!-இப்படி எழுதுகிறார்:



போரும் சமாதானமும்:

"சமாதானம்-
வீட்டில் எரியும்
அடுப்பின் நெருப்பு.

யுத்தமோ
கூரையை எரித்துக்
கொளுத்தும் வெறுப்பு.

சமாதானக் காலத்தில்
மங்கை
மலர்களைச் சேகரிப்பாள்-
கொண்டவன் நினைவில்
கூந்தலில் சூட!

யுத்த காலத்தில்
தாய்
தலைகளைத் தேடுவாள்
கூந்தலில் சூடிய
மலர்களைக் கழற்றிட

சமாதான நாட்களில்
மணச் செய்தி
பத்திரிகையாய் வரும்

யுத்த நாட்களிலோ
பத்திரிகைகள் வரும்
மரணச் செய்திகளாய்.

சமாதானக் காலங்களில்
ப+க்களைப் பார்த்து நாம்
புன்னகை புரியலாம்

போர்க் காலங்களிலோ
பிணங்களோடுதான் பேசமுடியும்!"

-மேத்தா.


கிறுக்குத் தனமாக எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தா?

யுத்தம் இல்லாமல் விடிவு வருமா?


இப்போது ஈழத்தை எடுத்தால் யுத்தம் தவிர்க்க முடியாது.


யுத்தத்தால் தான் தீர்வு வரும்.


தீர்வே யுத்தமாக இருக்கும் போது,மேத்தா யுத்தம் பற்றி அறிந்தது அவ்வளவுதான்.


எங்கட தேசியத் தலைவர் செய்கிற ஒவ்வொரு செயலிலுமே யுத்தத்தின் நெடில் இருந்தே தீரும்!-அது அவரது மிகக் கடுமையான சிந்தனையில இருந்து வரும் அதியுச்ச எண்ணங்களாகும்.

இப்படி யுத்தமே தீர்வாக இருக்கும்போது சமாதானம் என்பது வெறும் பொய்யானது-போலியானது.


தமிழருக்குத் தேசம் வேண்டுவதுபோல எல்லாருக்கும் வேணும்.


மேத்தாவுக்கு யுத்தம் பற்றியே ஒழுங்காகத் தெரியாமல் போலிக்கு எழுதுவது சரியில்லை.
எங்கள் தேசியத் தலைவரிடம் கேட்டு விசாரித்தாவது எழுதியிருக்கலாம்.


யுத்தம் அழகானது!
அற்புதமானது
.யுத்தத்தால் நாடு உருவாகும் ஈழம்போல.
யுத்தத்தால் ஒரு இனமே அழிந்தாலும்
ஒரு தேசம் அவர்களுக்காக மலர்ந்தே தீரும்.



இதுதான் யுத்த்தம் பற்றிய தேசியத் தலைவரின் தீட்சன்யமான பார்வையும் கூட.