Freitag, November 09, 2012

ரேகன் மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!

பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற ரேகன்  மாபியா தமக்குள் அடிபட்டுச் சாவு!

புலி மாபியாக்கள் தமக்குள் கொலைப்படுகின்றனனர்;பணம்-மக்களிடம் ஆயுதமுனையில் கொள்ளையடித்த பல இலட்சம் கோடி டொலர்களைத் தமதாக்கும் முயற்சியில் பெரிய வெட்டுக் கொத்தாவிருந்த இந்தச் சூழல் இப்போதைய நிலவரப்படி துப்பாக்கிச் சூட்டில் கணக்குத் தீர்த்து ஐந்தொகை எழுதுகிறது!;அனைத்தும் மக்கள் பெயரால்.

இவர்கள் இதுவரைப் பிறரை-மக்கள் நலன்விரும்பிகளை-மக்களைப் போட்டுத் தள்ளினர்.ஏனென்று கேட்டவரையெல்லாம்"துரோகிகள்"எனச் சொல்லிப் போட்டனர்.இவர்கள் வைத்த பொட்டுக்கள் ஆயிரமாயிரம்!அதே பொட்டுக்களைத் தமது சகாக்களால் தாங்குபவர்கள் குறித்து மக்கள் எதற்காகக் கண்ணீர்விட வேண்டும்?மக்களையே வேட்டையாடியவர்கள் மக்களது சொத்துக்காகவே இப்போது அடிபட்டுச் சாகின்றனர்.




இத்தகைய பருதி போன்ற கேடிகளைக் குறித்துக் கவலைப்படுதலென்பது வன்னியில் புலிகளாலும் ,அரசாலும் கொல்லப்பட்ட மக்களைக் கொச்சைப்படுத்துவதாகவே இருக்கும்!

பாரீசில் புலிப் பாசிஸ்ட்டுப் பருதியென்ற[பருதி-ரேகன் – (நடராஜா மதீந்தரன்) ] மாபியா கொல்லப்பட்டதை வைத்து நடாத்தப்படும்"ஆய்வுகள்",சும்மா "அரசு"வெனக் கதைவிடுதல்பொதுப் புத்தியாச்சு!

பெரிய-பெரிய புலிப் பினமிகளே அரசோடிணைந்து "அரசியல்" செய்யும்போது இத்தகைய வால்களை அரசு கொல்லவேண்டியிருக்குமா?

இதைப் புரிந்துகொள்வதற்குமுன் புலிகளுக்குள் இருக்கும் பல இலட்சம் கோடி இரூபாய்களது உரிமையையெந்தப் புலி மாபியாக்குழு ஆதிக்கஞ் செலுத்துவதெனத் தொடரும் போரில் இஃது, எந்த வகையானது?

ஏதோ பருதியொரு மக்கள் போராளி,மக்களுக்காகப் பாடுபட்டவனெனக் கருத்தாடுவதில் என்ன நியாயமிருக்கு?

எத்தனை ஆயிரம் மனிதர்களைப் புலிகள் இங்ஙனம் கொன்றார்கள்?

அதே பாசிஸ்ட்டுக்கள், தமக்குள் அடிபடும்போது இதையும் "மக்கள்-விடுதலை" எனும் பெயரால் நாம் உரையாடிவிடும் சந்தர்ப்பமிருக்கே,அஃதுதாம் கயமைத்தனமானது!

வினை விதைத்தவர்கள் அறைவடை செய்கின்றனர்.

அடியுதை,அராஜகமென வெறும் மாபியாக்களாக வலம் வந்த புலம்பெயர் புலிப்பினாமிகள், தமக்குள் அடிபட்டுச் சாகும்போது அந்தச் சாவை மக்களது இழப்பாகச் செய்யும் அரசியலானது சுத்த மோசடியானது.

இந்தப் பருதிக்கும் மக்களுக்கும் என்ன தொடர்பு?

முன்னால் போராளிகளது இன்றைய மோசமான வாழ்வுக்காக இவர்கள் என்னத்தைச் செய்தார்கள்?

கோடிக்கணக்கான டொலர்களைப் பதுக்கி வைத்துவிட்டு அந்தப் போராளிகளை அம்போவென விட்ட கயவர்கள்,மக்களைக் கொன்று சொத்துச் சேர்த்த வரலாறுவொன்றும் மக்களது விடுதலைக்கான போராட்டமில்லை!

வரலாற்றை உண்மையோடு ஏற்க வேண்டும்.அல்லது, வரலாற்றிலிருந்து அனைவருமே காணாமற் போவோம்!

ப.வி.ஸ்ரீரங்கன்
09.11.2012

Freitag, August 24, 2012

அகாலம்-நூல் விமர்சனம்

"ஈழப் போராட்டத்தில் எனது சாட்சியம்"எழுதிய புய்ப்பராயாவின் தங்கச்சியார் புய்ப்பராணி. இப்போது,இந்தப் புய்ப்பராணியும் தனது "போராட்ட"அநுபவங்களை"அகாலம்" எனும் நூலாகக் கொணர்ந்திருக்கிறார்.

அவரது,ஏமாளித்தனமான அரசியலையும்,பாமரத்தனமான கருத்துக்களையும் ஒரு இனஞ்சார் விடுதலைக்குக் குறுக்கே நிற்கும் சக்திகள் மிக இலகுவாகப் பயன்படுத்தியபோது அஃது,மனித விடுதலைக்காகப் போராடும் உள வலிமைக்கெதிராக முன்நிறுத்தப்பட்டு வருகிறது.

இந்தச் சந்தர்ப்பத்திற்றாம் இவர்கள் தமது தேசியவாத அழிவு அரசியலை முழுமொத்த ஆயுத இயக்கங்களுக்கும் தாரவார்த்துக் கொடுத்துவிட்டுத் தம்மைப் புனிதர்களாகவும்,தேச பக்த சக்திகளாகவும் காட்டியபடி,தமது போராட்த்தின் மூலமான அறுவடைக்குத் தியாகத்தைக் கோரி நிற்கின்றனர்.

அத்தகைய உள விருப்புக்கமைய எவருடனும் கூட்டுச் சேர்ந்து பாமரத்தனமாகக் கருத்துக்கட்டும் இவர்கள், நமது காலத்தில் பல இலட்சம் மக்களது உயிருக்கு உலை வைத்தவர்களென நாம் குற்றஞ் சுமத்துகிறோம்!

பாசிசத்தின் கூறுகளுக்கிசைவாக அரசியல் புரிந்த தமிழ்த் தேசிய வாதப் பேய்கள் எந்தவொரு அரசியலறமுமற்ற "ஈழப்போராட்ட" வரலாற்றுக்குப் பிதா மக்களாக இருக்கின்றனர்.

இவர்களது போராட்ட அநுபவங்கள், தமிழ் பேசும் மக்களது விடிவுக்கான அறிவுரையாக விழுந்து, விழுந்து புலம்பும் ஒரு நரிக் கூட்டத்தின் முன்பு அதை உடைத்துத் தமிழ் மக்களது அழிவுக்கான காரண காரியத்தைப் பேசும் சமூக யதார்த்தத்தை"அகாலம்"நூலுக்கான விமர்சனமாகத் தருகிறோம்.

இது,முதலாவது பகுதி. ஐந்து பகுதிகளாக விரியும் தமிழரசனது இவ் விமர்சனமானது தொடர்ந்து வழமைபோலவே உடைப்பில் பதியப்படும்.

இவ் விமர்சனத்தை உள்வாங்குபவர்கள் தொடர்ந்து அண்மித்துக்கொண்டேயிருங்கள்.

நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி

24.08.2012


அகாலம்-நூல் விமர்சனம்

-தமிழரசன்,பேர்ளின்.


பிரான்சில் வாழும் எழுபதுகளின் போராட்ச் செயற்பாட்டாளர்களுடன் தொடர்புடையவரான புஷ்பராணியின்"அகாலம்-ஈழப்போராட்ட நினைவுக் குறிப்புகள்" என்ற 207 பக்கங்கள்கொண்ட நூலது முன்னுரையைக் கிளிநொச்சியைச் சேர்ந்த கருணாகரன் எழுத, அந்நூல் வெளிவந்திருக்கிறது.

இந் நூலில் புஷ்பராணி தனது 40 வருடகால நினைவுகளைப் பதிவு செய்திருக்கின்றார்.

அக்காலத்தினது அரசியலை அவதானிக்க வாய்புப் பெற்றவர்கட்கும்,அரசியல் ஆழங்களில் சஞ்சரிக்க வாய்த்தவர்கட்கும் இந் நூலில் ஒருசில தகவல்களைத் தவிர வேறெதுவுமில்லை!

புஷபராணியினது பேசு பொருள்கள்"தமிழ்த் தேசியவாதிகளது குரல்வளையிலிருந்து நாம் அடிக்கடி கேட்ட பிரச்சார வகைப்பட்ட"கருத்தியல்தாம்.தோற்றுப் போய்விட்ட "ஈழப் போராட்டம்"தமிழ்ப் பகுதிகளில்அங்குலத்திற்கங்குலம் இராணுவம்,கிறிஸ் பூதம், அகதி முகாங்கங்கள்,புத்த சிலைகள்,விகாரைகள்,சிங்களக் குடியேற்றம்,உழுதழிக்கப்பட்ட புலிகளது கல்லறைகள்அகியவை, குறித்த தமிழினவாத ஊடகங்கள் கட்டியமைத்த கருத்துக்களேதாம் புஷ்பராணியிடமும் நிலவிக்கொள்கிறது.இவை குறித்து,ஒரு தமிழ்த் தேசியவாதியின் பெரும் சோகத்துடன் புஷ்பராணி எழுதிச் செல்கிறார்.

அவரது தமிழீழ இலட்சியத்துக்கேற்பட்ட கதி, தான் செய்துகொண்டதென்ற "தியாகங்கள்-அற்பணிப்புள்",விழலுக்கிறைத்த நீராகிவிட்ட துயரம்,தனிப்பட்ட வாழ்விலேற்பட்ட இழப்புகளுடன் அவரது எழுத்துக்கள் விரக்தியையும்,அவநம்பிக்கையையும் கூடவே எதிர்காலமின்மையையும் சுமந்து வருகிறது!.

அவரது எழுத்து முறையீடுகள்,அவருக்குரிய கடந்த காலத்தை உயர்வாகவும்-சிறப்பாகவும் காண்டுகொண்ட திசையில் பிற்காலத்தைய இயக்கவாதக் காலங்களையேதாம் மீறல்கள் நிறைந்ததாகவும் காண்கிறது. புஷ்பராணிபோன்றோரது தொடக்கங்களேதாம் முள்ளிவாய்க்கால் அவலங்களாக முடிவுற்றன.இவர்களன்றெழுப்பிய அதிதீவிரவாத தமிழீழக் கோரிக்கையானது சுற்றியுள்ள இலங்கையின் உள்நாட்டுச் சூழல் மற்றும் சர்வதேசிய நிலவரங்களுடன் இணைந்தபோது அஃது,பாசிச மனிதவிரோதப் போக்குகளாக வந்தடைந்தது.தனிநாட்டுக் கோரிக்கை சார்ந்த நுணுக்கமான அரசியல்,தத்துவார்த்த மதிப்புகட்கு புஷ்பராணி அருகதையற்றவர். மாறாக,உணர்வுமயமான அதீத தேசியவாத மதிப்புகளால் இவரிதை மாற்றீடு செய்கின்றவராக இருக்கின்றார்.தமிழர்களின் பிரச்சனையென்பது சிங்கள,முஸ்லீம்,மக்களதும் பிரச்சனையுமாகும்-ஏன், முழுமொத்த இலங்கை மக்களின் தேசந் தழுவிய பிரச்சனையுமாகும்.தமிழ்த் தேசியவாத்தத்தின் உச்சியிலிருந்த அமிர்தலிங்கம் முதல் பிரச்சாரர்களான புஷ்பராணி போன்றவர்கள் வரை தமிழ் மக்களை ஏக, இலங்கை அரசியல் பரப்புக்கு வரவிடாமற் பார்த்துக்கொண்டார்கள்.சிங்கள விரோதத்தை அரசியலாக்கி வளர்த்தெடுத்தார்கள்,தமிழ் மக்களை எட்டுத் திசையும் நோக்கவல்ல அரசியலிலிருந்து தடுத்து வைத்தார்கள்.இத்தகைய,ஒரு வழிப்பாதையேவின்று முள்ளி வாய்க்காலில் நிறைவு பெற்றதென்ற வகையில், புஷ்பராணியும் கூட்டுக் குற்றவாளியே-இப்போக்குகட்குப் பதிலுரைக்கவேண்டியவரே.ஆனால்,அத்தகையவெழுத்துத் தடயமெதுவும் இவர்தம் நூலில் காணக்கிட்டவில்லை.




முள்ளிவாய்க்கால் முடிவுகள் கண்டு,ஏனைய தமிழ்த் தேசியவாதிகளைப்போன்று புஷ்பராணியும் குமுறுகிறார்.அவர்,சகல பழிகளையும் இலங்கை அரசுமேல் சுமத்திவிட்டு,காரண காரியங்களை ஆய்ந்தறியும் கடனிலிருந்து தப்பியோடுகிறார்.இந்த அழிவுகளுக்கு முழுமையாகப் புலிப் பாசிசமே பொறுப்பு.

மாவிலாறில் பல்லாயிரம் சிங்கள ஏழை விவசாயிகளின் விவசாயத்துக்கான நீரைப் புலிகள் மறித்து, அம் மக்களை ஆத்திரமூட்டினார்கள்,அவர்களது வாழ்வாதாரத்தின் மீது கை வைத்தனர். திரிகோணமலை, மூதூர், கிண்ணியாவுட்பட பலவிடங்களில் முஸ்லீம் மக்களை-அவர்களது வாழ்விடங்களிலிருந்து- புலிகள் துரத்தியடித்தனர். இத்தோடு,இதே புலிகள், முஸ்லீம் மக்களது வாழ்விடங்கள்,ஊருக்குள்ளிருந்தபடியும் இராணுவத்தை நோக்கிச் செல்லடித்து, அதேயிடத்துக்குத் திருப்பி இராணுவத்தைச் செல்லடிக்க வைத்து முஸ்லீங்களை கொல்ல வழி வகுத்தார்கள்.அத்தோடு,முஸ்லீம் இளைஞர்களைத் தேர்தெடுத்த புலிகள் கூட்டாகக் கொன்றார்கள்.

அன்று,புலிகள்தாம் மாவிலாறில் யுத்தத்தைத் தொடக்கி வைத்தார்கள்.கிழக்கில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லீம் மக்களை,சிங்கள மக்களை அகதிகளாக்கிய புலிகள், அவர்களது சொத்துக்களையும் கொள்ளையிட்டனர்.வியாபார நிலையங்கள்,விவசாய நிலங்கள்,ஆடுகள்,மாடுகள்,வாகனங்களென அனைத்தையும் பறிமுதல் செய்தார்கள்.பல காலமாகக் காடுகளில் வாழ்ந்து, வேட்டையாடல், தேனெடுப்பு,மருந்து,மூலிகைகள் எடுத்துக்கொண்டு சீவித்த குறவர்கள், வேடர்கள்கூடப் புலிகளால் கொலையுண்டனர்.மனிதர்களை மட்டுமல்ல வில்பத்துப் போன்ற வனவிலங்குப் பாதுகாப்புப் பகுதிகளிலும் புகுந்து ஆபூர்வமாகப் பாதுகாக்கப்பட்ட மிருகங்களைப் பொழுதுபோக்காகச் சுட்டுக் கொன்றனர்,வேட்டையாடித் தின்றுங்கொண்டனர்.இவ் வலயத்தில் கண்ணி வெடிகளைப் புலிகள் புதைத்து வைத்தமையால் மிருகங்கள் அதில் சிக்கியபொழுதுகளில் காயமுற்றும்,இறந்தும் போயின.தெகிவளை மிருகக்காட்சிச் சலையிற் புகுந்து குண்டு வைத்து மிருகங்களை மட்டுமல்ல மனிதர்களையும் கொன்றார்கள் புலிகள்.தமது அழிவுயுத்த்தைச் சிங்கள மக்களின் பிரதேசங்களான கொழும்பு,கண்டி,காலி உட்பட பலவிடங்கட்கு விரிவுப்படுத்தினார்கள்.

ஆனால்,புஷ்பராணியினது விழிகளுக்குத் தமிழ் மக்களது துன்பம் மட்டுமேதாம் தெரிகிறது.முஸ்லீம்,சிங்கள மக்களது உயிரிழப்புக்காக அவரால் இரங்க முடியவில்லை.மாறாக,மீண்டும் மீண்டும் தமிழர்களது போர்க்காலத் துன்பங்களிற் புகுந்துகொள்கிறார்.தனது தமிழினவாத நிலையை ஈழ விடுதலைப் போராட்டத்தை நியாயப்படுத்துவதில் மறைத்துக்கொள்கிறார். சிங்களக் குடியேற்றமென்ற அவரது வரைதல், வடக்குக் கிழக்கை சிங்கள-முஸ்லீம் மக்களற்ற தூயத் தமிழ்ப் பிரதேசமாக்காணும் கற்பனைக்கு அவரையிட்டுச் செல்கிறது.

வடக்குக் கிழக்குத் தமிழரின் பாரம்பரியப் பிரதேசமென்பது கொலனித்துவக் காலத்திய பிரிடிஸ் அரசின் மக்களைப் பிளவுபடுத்தும் அரசியலின் தேர்வாகும்.இதனைத் தமிழரசுக்கட்சியினர் தமதாக்கிக் கொண்டனர். இதனால்,"தமிழினத் தூய்மைக் கோட்பாடு வளர்த்தெடுக்கப்பட்டது. "புலிகளைப் பின்னிலிருந்து இயக்கியவர்கள் புகலிட நாடுகளிலுள்ள தமிழர்களே,அவர்கள் நம்பிய மேற்குலக நாடுகளேதாம் முள்ளி வாய்கால் அவலங்களுக்குப் பொறுப்பு. புகலிடத் தமிழ்வூடகங்களில்"கொழும்பில் குண்டுகள் வைக்கவேண்டும்,சிங்களவர்களைக் கொல்லவேண்டும்(இதைத் தமிழ்ப் பிளக்கரில் வசந்தன் என்ற அன்பன் பகிரங்கமாகக் கோரியவன்,அவனைக் கதிர் சயந்தன் போன்றவர்களும் அதரித்தவர்கள்) சிங்களவர்கட்குப் பாடம் புகட்டவேண்டும்"என்று பச்சை இனவாதம் பேசிய தமிழ்ப் பாசிசப் போக்களார்கள் குறித்தெவரும் பேசுவதில்லை! எல்லோரும்,சிங்கள பௌத்தப் பேரினவாதம்,சிங்கள மேலாதிக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். பஷ்பராணி,புலித் தலைமையை விமர்சிப்பவராகத் தோன்றியபோதும், புலிகளைப் போராளிகளென அழைத்தும் கொள்கிறார். இறந்த புலிகளின் கல்லறைகளைப் பெருமைப்படுத்துகிறார்.புலிகள், உச்சந் தலைமுதல் உள்ளங் கால்வரை பாசிச அரசியலொழுக்கத்தால் நிரம்பப் பெற்றவர்கள்.இவர்களிடையே"தீய,நல்ல"சங்கதிகளைத் தேடுவது இயலாத செலாகும்.

மேற்கத்தைய சக்திகளின் இராணுவ அடியாட்க் கூலிப்படையான புலிகள் , ஒருபோதும் ஜனநாயக மற்றும் மனிதப் பண்புகளைக் கொண்டிருக்க முடியாது.புலிகள்,இலங்கை மக்களுக்கு மட்டுமல்ல முழு இந்தியத் துணைக் கண்டத்தின் நலன்கட்கும் எதிரான பயங்கரவாத இயக்கமென்பது உலகறிந்தவுண்மை!.புலிகள் மேற்கத்தைய நலன்கட்காகத் தமிழ்பேசும் சிறார்களைக் காயடித்து இரத்தஞ் சிந்த வைத்தனர்.இந்தப் புலிகள் தமிழ் மக்களது நலன்கட்காகப் போராடினார்களென நம்புவது ஒரு அரசியல் மயக்கமாகும்-பிரச்சார வகைப்பட்ட மாயையாகும்.முள்ளி வாய்க்கால் களத்தினது கடைசிக் கட்டத்தில் தம்மைக் காத்துக்கொள்ளப் புலிகள் எங்ஙனம் மக்களைப் பலியாக்கினரென்பதே நல்ல உதாரணமாகும், இந்த பாசிசப் போக்குக்கு.இறந்தவர்களையெல்லாம் தியாகிகளாகவோ,போராளிகளாகவோ கருதமுடியாது.ஒரு,மனிதவிரோதப் பாசிச அமைப்பினது நபர்களது மரணங்கள் அவர்களது சர்வதிகாரத்துக்கான தண்டனையாகும். புலிப் பாசிஸ்ட்டுக்கள் தமிழர்கள் என்பதற்காக,அவர்கட்குப் புஷ்பராணி "போராளிகள்"என்றழைத்துப் பெருமை தருகிறார்.ஜெர்மனிய,இத்தாலியப் பாசிஸ்டுக்களைப் புஷ்பராணி மனித விடுதலையாளர்களாக, வீர மரணத்துக்குரிய போராளிகளாக ஒப்புவாரா?

புலிகளது இராணுவ வாதத்துள் மலைத்துப்போனவர்களும்,அவர்களது தரைப்படை,கடற்படை,விமானப்படை,தற்கொலைப் படைச் சாகசங்களில் தொக்கி நின்ற தமிழ் நடுதரவர்க்கமானது ,கண்மூடித் திறப்பதற்குள் புலிகள் நிர்மூலமாகிப் போனதை நம்ப முடியாதவர்களாகிப் புலி பற்றிய பலிவிதமான கட்டுக்கதைகளை பேணிப் பாதுகாத்தபடித் "தேசியத் தலைவர் ஒரு பொழுதில் தனது தலைமறைவு வாழ்விலிருந்து வெளிவந்து மீண்டும்,தமிழர்களுக்குத் தலைமை தருவாரென" நம்பும் பரிதாபத்துக்குரியவாராகினர். இத்தகையோரே,உண்மையில் புலிகளைப் புழுகிப் பாப்பா மரத்தில் ஏற்றி முள்ளி வாய்க்கால்வரைக் கொணர்ந்துவிட்டவர்கள்;புலிகள் வெல்லப்படவே முடியாத பெரும் சக்தியாகவும் கட்டியமைத்தவர்களும் இவர்களே!. இத்தகையவர்களேயின்று,புகலிவூடகங்கள்முதல் நாடு கடந்த தமிழீழம் வரை இயக்கிக்கொண்டு வருகின்றனர்.இவ்வகைப் போக்குகளோடு சம்பந்தமற்ற விரக்தியாளராகப் புஷ்பராணி தென்பட்டபோதும் அவரும்,இவர்களது அரசியலுக்கு அண்மித்தே வாழ்கிறார்.புலிப் பாசிசவொழுங்கென்பது தமிழரசு அரசியலிலிருந்து தோற்றம் பெற்றவொன்று.இஃது,ஏதோ தனியே பிரபாகரனின் படையலல்ல.யாழ் நடுத்தரவர்க்க சமூக மூலங்கள்தாம் இதைப்படைக்க அடிப்படையாகின.இந்தப் பண்புகள் மேற்கத்தைய நாடுகளின் அரசியல்,இராஜதந்திர ஏவற் பேயாகிவிட்டது.

"ஆயுதங்கள் மேல் கொண்ட அதீத மோகமே,சுத்த இராணுவ வாதமே ஈழப் போராட்டத்தின் தோல்விக்குக் காரணம்"என்று புஷ்பராணியின் எழுத்துக்கள் விளக்கிச் செல்கின்றன.இங்கு,எந்த வர்க்கமானது ஈழப் போராட்டத்தைக் கையிலெடுத்துச் சென்றதென்ற யதார்த்தத்தைவுணர முடியாத புஷ்பராணி,யாழ் நடுத்தர வர்க்கத்தின் வெளிப்பாடுகளை மட்டுமேதாம் காண்கிறார்.தத்துவப் புறக்கணிப்பு,இராணுவக் குணாம்சம்,சிங்கவின வெறுப்பு என்பதற்குத் திட்டவட்டமான தமிழ்த் தேசிய வாதப் பண்புகள் இருந்துகொண்டன.

"தான் எங்குமில்லை,எக் கட்சியிலுமில்லை,இயக்கங்கிளிலும் நம்பிக்கை கிடையாது" என்று புஷ்பராணி சொன்னபோதும் இலங்கையில் தமிழரசுக் கட்சி முதல் புகலிட நாடுகளிலுள்ள பல்வேறு தரத்திலான தமிழ்த் தேசியவாதிகளின் பொதுப் பண்பில் இவரும் இணைகிறார்.தமிழீழக் கனவுகள் சிதைந்தமைக்கு புஷ்பராணி கருதுவதுபோல ஆயுதம் எடுத்த இயக்கங்கள் மட்டுமேதாம் காரணமில்லை.ஆயுத இயக்கங்கட்கு மூலமான தமிழரசு,தமிழர் விடுதலைக் கூட்டணி,தமிழ் இளைஞர் பேரவை போன்றவைகளின் அழிவு அரசியல்தாம் காரணம்.இவர்களே பேரழிவைத் தொடக்கி வைத்தனர்.புஷ்பராணி போன்றவர்களது தீர்க்கதரிசனமற்ற அரசியலுந்தாம் இந்த ஈழவிடுதலைக் கனவுச் சிதைவுக்குக் காரணமாகியது.

" எவர் கைகளில் ஆயுதம் இருந்தாலும் அஃது,அழிவையே தரும்"என்றின்று ஞானம் போதிக்கும் புஷ்பராணியின் மேடைப் பேச்சுகளும்,சிவகுமாரனைப் புகழ்ந்தேற்றும் பேச்சுக்களும்தாம் அரசியலற்ற ஆயுதங்களை ஆதிக்கம் பெற வைத்தன.இங்கு,ஆயுதங்கள் அல்ல,அதைக் கையாளும் சக்திகளின் அரசியல்தாம் நிர்ணயிக்கும் சக்தியாகும்!.துரையப்பாவும்,அருளம்பலமும்,தியாகராசாவும்,குமாரகுலசிங்கமும் சுடப்பட்ட காலத்தில் அதைப் புஷ்பராணி போன்றவர்கள் மேடைகள் தோறும் ஆதரித்தனர்.தமிழ்த் துரோகிகட்கு "உரிய தண்டனையாக" விளக்கவும் முற்பட்டனர்.இப்போக்குகளின் தொடர் வளர்ச்சியே புலிகளது பாசிசமாகும்.

"தமிழீழத்தை"ப் புஷ்பராணி,"பைபிளில் கூறப்படும் வாக்களிக்கப்பட்ட பூமியாக"க் காண்கிறார்.

இஸ்ரேலியச் சியோனிஸ்டுக்கள்கூட இஸ்ரேலை வாக்களிப்பட்ட பூமியாகவே கண்டனர்.மேற்குலக நாடுகள், இந்தியத் துணைக்கண்டத்தின் இஸ்ரேலாக"தமிழ் ஈழத்தை"மாற்ற முயன்றனர் என்பது, உண்மையே.யாழ்.கிங்ஸ் கவுசில் தன்மீது நடாத்தப்பட்ட சித்திர வதைகளை எழுதும் புஷ்பராணி,புலிகளின் சிறைகள்,சித்திரவதைக் கூடங்களில் கொல்லப்பட்ட பல ஆயிரம் மனிதர்களை நினைக்கக்கூட இல்லை. சித்திரவதைகளால் புத்தி பேதலித்து,உள நோயாளிகளாக மாறிய மனித ஜீவன்கள்,சித்திரவதை செய்து கொன்றெரிக்கப்பட்டவர்கள்,நிலத்தின் கீழ் அமைக்கப்பட்ட இருட்டான பாதாளக் கிடங்குகளில் புலிகளால் போடப்பட்ட பாம்புகளோடு சீவிக்க நேர்ந்தவர்கள்,பாலியலுறுப்புக்களைக் குறடுகளால் நசித்துச் சித்திரவதை செய்த புலிப் பெண்களென எமது நினைவுக்கு வரக் காத்திருக்கும் விடயங்கள் ஏராளம்.

தொடரும்...

தமிழரசன்,
பேர்ளின்

Samstag, August 11, 2012

சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில்[5]

அன்பு நண்பர்களே,வணக்கம்!.இது,நாவலன் எழுதிய "தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஏகாதி பத்தியங்களின்சதி" எனும் நூலுக்கான தமிழரசன் எழுதிய விமர்சனத்தின் இறுதிப்பகுதி. இப்பகுதியானது நாவலனது நூலுக்கான விமர்சனத்தைக் கொண்டியங்கினாலும் அது, விரித்து வைத்து நகரும் தளமானது உலகமயப் பொருளாதார நகர்வின் விளை நிலமாகும்.

இந்தப் பகுதியில், மூன்றாம் மண்டலமெனும்[Dritte Welt_Schwellenland  ] பொருளாதாரக் குறியீட்டு அட்டவணைப்படுத்தலுக்குரிய நாடுகளது உயர்வு-தாழ்வு குறித்து நிறையப் பேசுகிறார்.

ஜேர்மனியப் பேராசிரியரும்,சிறந்த இடதுசாரிய அறிஞருமான ஓஸ்க்கார் நேக்ற் [Prof.Dr.Oskar Negt  ] குறித்த வரை முறைகளை ஆதாரமாகவும் பயன்படுத்துகிறார் தமிழரசன்.அவரது தரவுகள் பலமானவைதாம். ஓஸ்க்கார் நேக்ற் குறித்த தரவுகளையுந்தாண்டியின்று  சீன அந்நியச் செலவாணியின் கையிருப்பு 3 ரில்லியன் அமெரிக்க டொலராக இருக்கின்றது.


ஓஸ்கார் நேக்ற் [Sozialphilosoph Oskar Negt  ]ஜேர்மனியில் அனைவருக்குமான நிபந்தனையற்ற அடிப்படை வருமானத்தை[Das bedingungslose Grundeinkommen ] அரசு செய்ய வேண்டுமென வாதிடுபவர்.அதை,இன்றைய ரோசா லுக்சம்பேர்க்கான சார வாகன்கினேக்ற் [Dr.Sahra Wagenknecht ] நிராகரிப்பதும் புரியத் தக்கதே.

உலக மயமாக்கலது விளைவைக் குறித்து நான் நிறையக் கற்றுக்கொள்ள முயன்றபோது பேராசிரியர் டாக்டர் பேர்ன்ட் சென்வ்[ Prof.Dr. Bernd Senf ] வை வாசிக்கவும்-கற்கவும் முடிந்தது.அவரது பொருளாதார விளக்கம் எப்பவும்போலத் தமிழர்கள் அறியாத சில்வியோ கேசலது[ Sivio Gesell ] நியாயவாதப் பொருளாதரத் தத்துவத்துக்கமைய நகர்வது.அத்தகைய மேதமையான விளக்கத்தின் தரவுகளோடு தமிழரசனது விளக்கங்கள் ஒட்டியுறவாடுவதில் எனக்கு ஆச்சரியம் மேல் ஆச்சரியம்.

தமிழரசன் இன்றுவரைப் பேராசிரியர் பேர்ன் சென்வ்வை வாசித்திருக்க முடியாது.அவரது எந்த ஆய்வையும் தொட்டிருக்கக்கூடிய காரணங்கள்அவருக்கு நெருங்கி இருக்க முடியாது.ஏனெனில் ,அந்தப் பேராசிரியர் மார்க்சியத்தின் பரம விரோதி.என்றபோதும், தமிழரசனது விளக்கங்களும்,தரவுகளும் பேராசியர் சென்வின் கருத்துக்களோடு பொருந்திப்போகிறது. உலக மயம் குறித்து நீண்ட ஆய்வுகளைச் செய்த பேராசிரியர், அதன் தாக்கமானது மேற்குலக வீழ்ச்சியோடு தொடர்புடையதாக நிறுவுகிறார்.இதையேதாம் தமிழரசனும் சொல்லிச் செல்கிறார்.

நான்ஆடம் சிமித் மற்றும் ஜோன் மைநார்ட் கேய்னெஸ்,சில்வியோ கெசல் எனும் நவலிபரல் பொருளியாளரை மிக ஆழமாகக் கற்றுத் தேறியபோது இவர்களது வாரிசான பிரிடிறிக் காய்ஜெக்கையும்[ Friedrich A. Hayek] அவரது சீடர்களான மெவுன் பிலேரின் சொசைய்டிக் கூட்டின்  Maurice Allais, Walter Eucken, Milton Friedman, Frank Knight, Fritz Machlup, Ludwig von Mises, Karl Popper, Wilhelm Röpke, George Stigler. போன்றோரையும்,அவர்களது தாராளவாதப் போக்கையும் உள்வாங்கிக்கொண்டேன்.இன்றையவுலகத்தின் மிகக் கெடுதியான பக்ககங்களை இவர்களைத் தவிர்த்துப் பார்க்க முடியாது.

கெய்னிஸ் குறித்தத் தத்துவப் போக்கில்:

1: நுகவர்வும் சேமிப்புறவுக் கோட்பாடு,
2: நிதியீடுக்கோட்பாடு;
3: பணச் சுழற்சிக் கோட்பாடு

இவைகள் மிக முக்கியமானது இன்றைய நவ லிபரல் பொருளாதாரப் போக்கில்.

நாவலனது நூலுக்கான விமர்சனத்துக்காக இந்தப் பரப்புகளில் தமிழரசன் நிறையவே கால்பதித்துச் செல்கிறார்.ஒரு மார்க்சிய அறிஞன் பலதரப்பட்ட தளங்களைத் தனக்குள் உள்வாங்கிக் கருத்தாடுபவனென்பதைத் தமிழரசன் நிரூபிக்கின்றார்.

நாம்,அந்த வெளிகளுக்குள் பிராயாணித்து விட விருப்பம் கொண்டாலேதவிர இன்றைய பொருளாதார நகர்வுகளைக்குறித்து விளங்கிக்கொள்ள முடியாது.இதைத் தவிர்தோமானால் மில்டன் பிறீட்மானது[Milton Friedman ] "யுத்தம் செய்து அழித்தல் மீளக் கட்டுதல்,இடங்களைக் கைப்பற்றுதல்,வாழ்விடங்களைவிட்டு மக்களை அழித்துத் துரத்துதலெனுங்" கோட்பாட்டுக்குள் சிக்கி விடுவோம்.

எனவே,இந்த வெளிகளுக்கூடாக நகர்த்தப்படும் இந்த இறுதிப் பகுதியானது இன்றைய உலகமயப் பொருளாதாரப் போக்குகளில் அமையப்போகும் அதிகார-ஆதிக்க மாற்றங்களைப் புரிவதும் அந்த புரிதலின் வழி புதிய வியூகங்களைத் தேடிக்கொள்வதும் ஒடுக்குப்படும் மக்களது விடிவுக்கு அவசியமானது நண்பர்களே.

வாசியுங்கள்.கட்டுரை மிக நீளமானதுதாம்.எனினும், நேரமெடுத்துத் தொடருங்கள்.

அடுத்த விமர்சனத்தை புஸ்பராணியின் அகாலத்துக்கான நூலின் விமர்சனமாக முன் வைப்போம்.

இரண்டொரு கிழமையில் மீளச் சந்தோம்!

நன்றி.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
11.08.2012


சபாநாவலனின்:தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!

- நூல் விமர்சனம் : 5

( இறுதிப் பகுதி )

3ம் உலக நாடுகள் எல்லாவற்றிலும் நிலப்பிரபுத்துவக் கட்டம் இருந்தது என்ற நாவலனின் கருத்தாவது, ஆபிரிக்கா மற்றும் அரபு நாடுகளில் கிட்டத்தட்ட நிலப்பிரபுத்துவம் நிலவவில்லை என்றே கொள்ளவேண்டும்.

ஆபிரிக்கா, நிலப்பிரபுத்துவத்துக்கு முற்பட்ட இயற்கையுடன் இயைந்த வாழ்வு, வேட்டையாடல் சுயதேவைக்குப் பயிரிடல் என்பன நிலவியது. இங்கு நிலப்பிரபுத்துவம் இருக்கவில்லை. கொலனிக் காலத்திலேயே ஐரோப்பியர் பெரும் நிலப்பரப்பில் பயிர் செய்யத் தொடங்கினர். அரபு நாடுகளில் விவசாயம் பிரதான தொழிலாகவோ நிலம் அதிகாரத்துக்கானதாகவோ  இருக்கவில்லை. அரபு மக்கள் மந்தை மேய்ப்பும் ,நாடோடிப் பண்புகளையும் கொண்டிருந்த மக்கள். நிலையான விவசாயம் செய்யத்தக்க நீர்வளமோ ,ஆறுகளோ அங்கு இல்லை.வாழக் கடினமான புவியியல் நிலையில் அவர்கள் இருந்தனர். இந்தியா, சீனா இடையேயான வர்த்தகம்களைக் கொள்ளையிடுபவர்களாகவும் அதன் பின்பு அவர்களில் வர்த்தகம் புரிபவர்களாகவும் ஒரு பகுதி மாறுகின்றது. வர்த்தகம் வளர்ந்த பின்பே அரபுக்களின் நாகரீகம் வளர்கின்றது.

நாவலன் எழுந்தபாட்டுக்கு நிலப்பிரபுத்துவம் என்பதை பிரயோகிக்கப் பார்க்கின்றார்.

 
செவ்விந்தியர்கட்கோ ஆபிரிக்க மக்களினம்கட்கோ இதைப் பொருத்தமுடியாது.

அவர்கள் இக்கட்டத்தை வந்தடைய இன்னமும் காலம் இருந்தது. இவர்கள் நிலப்பிரபுத்துவத்துக்கு முந்திய இனக்குழுத்தன்மை படைத்தவர்களாக இருந்தனர். இந்த நாடுகளில் காலனி ஆதிக்கம் ஏற்பட்ட பின்னர் இவை அப்படியே கைப்பற்றி ஆளப்படவில்லை என்பதையும் புதிய சமூக பொருளியல் நிலைமைகட்கான அடித்தளம்கள் இடப்பட்டன என்பதையும் நாம் காணவேண்டும். நிர்வாக முறைகள், புதிய முதலாளிய பண்பாட்டின் தொடக்கம், சுதேசிய மொழிகள் பரவலாதல், எழுத்து வடிவம் பெறல், அச்சுக்கலை வளர்ச்சி என்பன தேசியம், முதலாளியம் என்பன வளர்வதற்கான தொடக்க நிலையாயின. மேற்கு நாடுகளின் மூலதன உருவாக்கம் என்பது அமெரிக்காவில் தங்கம், வெள்ளி கண்டு பிடிக்கப்பட்டமை இந்தியா, சீனா, ஆபிரிக்கா கைப்பற்றப் பட்டமையூடாகவே  நடந்தது. தம் சொந்த நாட்டுள் பெறப்பட்ட செல்வம் மூலப்பொருள், சந்தையுள் அவை தங்கியிருக்கவில்லை. குடியேற்ற நாடுகளுடன் வரியற்ற வர்த்தகம், சமமற்ற பொருளாதார கொடுக்கல் வாங்கல்கள் நிலவின.
 
 
‘உலக மயமாக்கலை விளக்க வந்த நாவலன், மலிவான உழைப்பு, மூலதனம், எரிபொருள், சந்தைதேடி ஏகாதிபதிதியங்கள் 3ம் உலக நாடுகட்கு வந்தன’என்கிறார்.
 
 
உலக மயமாதல் [Globalization ]என்பது ஏகாதிபத்திய பொருளாதார சகாப்தத்தில் தவிர்க்கமுடியாத கட்டமாகும்.

ஏகாதிபத்தியம்கள், உலகமயமாதலுக்கு முன்பே 3ம் உலக நாடுகளின் மலிவான உழைப்பு, மூலவளம், எரிபொருள், சந்தை என்பனவற்றை தடையின்றி பெற்று வந்தன. ஆனால் ,உலக மயமாதலின் விளைவாக மேற்கத்தைய தொழி நுட்பங்கள், நவீன உற்பத்தி முறைகள் கீழைநாடுகட்கு பரவியுள்ளமையும், சொந்த உற்பத்தி ஆற்றலையும் தம் கண்டம் தழுவிய சொந்தமூலதன பலத்தைப் பெற்றமையும் நாவலனுக்கு புலப்படவில்லை.

ஆசியாவில் சீனா, இந்தியா, வியட்நாம், இந்தோனேசியா, மலேசியா என்று பல தொகை நாடுகள் பொருளாதார பலத்தை பெறத் தொடங்கி விட்டன.

 உதாரணமாக :  சீனாவானது 1978 இல் உலக ஏற்றுமதியில் 0.8வீத கொண்டிருந்தது. இது 2006 இல் 20 வீதமாக வளர்ந்தது.2005இலேயே சீனாவின் பொருளாதாரம் பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பொருளாதாரத்தைத் தாண்டி வளர்ந்தது. உலகில் 4 வது இடத்தை வகித்தது. 2008 இன் முடிவில் சீனாவின் பொருளாதாரம் உற்பத்தி ஆற்றல் அமெரிக்க, ஐரோப்பிய நாடுனகளை முந்தி ,முதல் இடத்தைப் பெற்றுவிடும் என்று மேற்கத்தைய முதலாளித்துவப் பொருளாதாரவாதிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

உலக மயமாதலில் வளர்ச்சிக்கு ஐம்பது, நூறு ஆண்டுகள் எனத் தேவைப்படவில்லை.

பிரிட்டிஸ் பொருளாதார வளர்ச்சி இரண்டு மடங்காக அதிகரிக்க 58 வருடங்கள் எடுத்தது. அமெரிக்கப் பொருளாதாரமானது இரு மடங்காய் ஆக 47 வருடங்கள் தேவைப்பட்டது. ஆனால், சீனப் பொருளாதாரம் 9 வருடத்துக்குள் இரண்டு மடங்கால் வளர்ந்தது. 2000 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட மதிப்பீட்டில் 4 வருடங்களில் கிராமங்களில் இருந்து 70 மில்லியன் மக்கள் நகரம்களில் குடியேறினர். 2005 ல் மட்டும் 147 மில்லியன் மக்கள் நகரம்கட்கு வேலை தேடி வந்தனர். இப்போது, வருடா வருடம் 60 மில்லியன் மக்கள் வேலைதேடிச் சீனப் பெரு நகரம்கட்கு வருகின்றார்கள். 2000 ஆண்டில் 562 ஆக இருந்த சீன நகரம்களின் தொகை 2006 இல் 688 ஆக ஆகியுள்ளது.
 


 
schanghai,Peking,Chongqing போன்ற பெரு நகரம்கள் மேற்குலகின் லண்டன், பாரிஸ், பெர்லின், பிராங்பேர்ட், நியூயோர்க் போன்ற நகரம்களை சிறு பட்டினம்களாக மாற்றிவிட்டது.

சீனக் கிராமங்களில் இருந்து வந்த விவசாயிகள் ,சீனாவின் பெரு நகரம்களில் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் பெரும்படையை உற்பத்தி செய்துவிட்டார்கள்.

பெரியபாட்டாளி வர்கக்ம் படைக்கப்பட்டுள்ளது என்பது உலக மயமாதலின் சோசலிசம் சார்பான எதிர்வினையாகும். மேற்குலக வாகனத் தயாரிப்பு நிறுவனங்கள் சீனாவுள் நுழைந்த போதும் அதற்கான தொழிநுட்பம் மூலதனமிடலில் முழு அதிகாரம் பெற்றிருக்கவில்லை. Ford,Benz,Bmw,VW என்பன இன்று சீனத் தொழிற்சாலைகளில் உற்பத்தியாகி சீன மூலதனம் – சந்தை நலன்கட்கு கட்டுப்பட்டே வெளி வருகின்றன.

 ஜெர்மனியின் பயணிகள் பஸ்சான "Man"இன் "Neoplan starliner"விலை 350,000 Euro ஆகும். இதே தரம் மாதிரியில் சீன உற்பத்தியான "Zonda A9" 100.000 euro விலையில் முழு ஆசிய ஆபிரிக்க அரபு நாட்டுச் சந்தைகளில் நுழைந்துவிட்டது. Benz இன் Smartஐ சீனா IAAபெயரில் மிக மலிவாகத் தயாரிக்கின்றது. சீன Mokick நிறுவனம் "Mad Ass" மோட்டார் சைக்கிளைத் தயாரித்து 2,000 Euro விலைக்கு ஜெர்மனியச் சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. சீன வாகன, உற்பத்தியால் மட்டும் ஜெர்மனிக்கு வருடாவருடம் 30 மில்லியன் யூறோ நட்டம். ஜெர்மனி தயாரிக்கும் அதே பொருட்களை சீனா உற்பத்தி செய்யத் தொடங்கியமை காரணமாக 2006 இல் மட்டும் ஜெர்மனியில் 70,000 வேலை இடங்கள் இழக்கப்பட்டது. இது 2005 ஐ விட 5 மடங்கால் அதிகம்.
 
 
வாகனம் , விமானம், ஆயுதம், எலக்ரோனிக், மருந்துப் பொருள்,மருந்து உபகரணங்கள். விளையாட்டு,மற்றும் தோல்பொருட்கள், ஆடையணிகள் என்பனவற்றுடன் அணு மற்றும் உயிரணுத் தொழிநுட்பம் விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தொழிற்துறைகளையும் சீனா பெற்றுவிட்டது. இன்று உலகின் மிகப் பெரும் நிலக்கரி உற்பத்தி நாடும் சீனா தான்.எண்ணை எரிசக்திக்கு மாற்றான சக்திகளைப் பெற சூரிய ஒளி, காற்று,நீர்,கடலலை, உயிரியல் வாயுக்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தும் துறைகளையும் அவர்கள் வளர்த்துள்ளனர். 2006 இல் சீனாவானது 103 மில்லியாடன் [103 Milliarden Euro = 103 billion euro .] யூறோக்களை புதிய ஆய்வுகட்கு மட்டும் ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் பாதைகள், பெருந்தெருக்கள், பாலம்கள், ரெயில்பாதைகள், புதிய விமான நிலையங்கள் பெருகி மக்களிடையேயான தொடர்புகளும் பரிவர்த்தனைகளும் அதிகரிக்கின்றது.

 2005 இல் சீனாவில் 1926 தினசரிப் பத்திரிகைகள் ,9500 சஞ்சிகைகள், 273 வானொலிகள், 302 தொலைக்காட்சிச் சேவைகள் இருந்தது.ஐரோப்பிய நாடுகளின் சந்தைகள் சீனப் பொருட்களால் நிரம்பியுள்ளது. ஜெர்மனியில் 40 வீத கொம்பியூட்டர் ,எலக்ரோனிக் பொருட்கள் சீன இறக்குமதியாகும். 2008 இல் சீனாவின் ஜெர்மனிக்கான ஏற்றுமதி 2007ஐ விட 20 வீத அதிகரிப்பு கைத்தொலைபேசி,கம்பியூட்டர், தொலைக்காட்சி, பொழுதுபோக்கு ,எலக்ரோனிக் பொருட்கள், மருந்துவகை, மருத்துவ உபகரணங்கள், இரசாயனப் பொருட்கள், ஆடை வகைகள், விளையாட்டுப் பொருள், தோல்ப்பொருள், உணவுப்பொருள், வீட்டுத் தளபாடங்கள் என்பன பெரும்பகுதி சீனாவில் இருந்தே ஜெர்மனிக்குள் இறக்குமதியாகின்றது.

 10 வருடம் முன்பு ,இந்தப் பொருட்களை பெரும் பகுதியாக வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்த நாடாக ஜெர்மனி இருந்தது. மேற்குலக நாடுகளுக்கு பொருட்களை மலிவாகத் தயாரிக்க முடியவில்லை. உற்பத்திச் செலவு அதிகம், மூலப்பொருள் இறக்குமதியில் தங்கிய நாடுகள் இவை.

சீனாவில் ஒரு மணி நேர ஊழியம் 0.70  சென்ட்களாகும் [0.70 Euro].  இது ஜெர்மனியியல் மணிக்கு  27 யூறோவாகும். இதனால் சீனாவுடன் உலகச் சந்தையில் மேற்கு நாடுகளால் போட்டியிட முடியவில்லை.
 
 
2007 இல் சீனாவின் அரசநிதி இருப்பு 1.2 பில்லியன் டொலர்களாக இருந்தது 2008 இல் இது 2 பில்லியன் [Billion auf Englisch Trillion] ; [2010/ 2011 : Währungsreserven in Millionen US-Dollar : 3.201.680  ] டொலர்களாக அதிகரித்துள்ளது [Exportstarke asiatische Länder verzeichneten seit etwa einem Jahrzehnt ein rasantes Anwachsen der Währungsreserven. Besonders deutlich wird dies am Beispiel der Volksrepublik China. Dieses Land hat nach mehreren Jahren einer äußerst erfolgreichen Handelsbilanz im Jahr 2006 sogar Japan in der Summe der Währungsreserven überholt und besitzt seitdem die höchsten Währungsreserven der Welt. Per 31. März 2008 beliefen sich diese auf 1,682 Billionen US-Dollar.[20] Im April 2011 betrugen die Devisenreserven Chinas erstmals über drei Billionen US-Dollar.[21] ]. இதேசமயம் முழு ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளின் மொத்த நிதி இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும். அதாவது சீனா ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிகமான அரச நிதியிருப்பைக் கொண்டுள்ளது என்று மாக்சியவாதியும் ,சமூக ஆய்வியல் அறிஞருமான Oskar Negt 2007 இல் எழுதிய சீனாவின் வளர்ச்சி பற்றிய "Modernisierung im zeichen der drachen china und der Europaische Mythos der Moderne"நூலில் குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய நாடுகட்கு வெளியேயான ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளின் வளர்ச்சிகளை நாவலன் ஏறெடுத்தும் பார்க்கவில்லை.

நாவலன் , 1990 களில் உலக மயமாதலுக்கு முன்பான இடதுசாரி பார்வையை சுமந்து கொண்டிருப்பதுடன் உலக மயமாகும் பொருளாதாரத்தை அரசியல் நிகழ்வுப் போக்கின் உள்ளார்ந்த விளைவுகளை படித்தறியத் தவறினார்.

 1947 இல் ; Harry.S.Truman மார்சல் திட்டத்தைக் கொண்டு வந்து இரண்டாம் உலக யுத்தத்தால் நாசமறுந்து கிடந்த ஐரோப்பிய முதலாளித்துவ நாடுகளைத் தற்காலிகமாகக் காத்தனர். இதன் உலக சோசலிசத்தை நோக்கி இந்த நாடுகள் செல்லாமல் செயற்கையாகத் தடுக்கப்பட்டது. ஆனால், இன்றைய உலக மயமாதலின் பின்பு அமெரிக்காவிடமோ மேற்கு ஐரோப்பிய ஏகாதிபத்தியம்களிடமோ ஒருவரை ஒருவர் காக்கும் சக்தி கிடையாது.

ஆசிய, லத்தீன் அமெரிக்க தொழிற்துறையும் ,மூலதனமும் உலக மூலதனத்தினதும் தொழிற்துறையினதும் தவிர்க்கமுடியாத பிரிவு என்ற போதும் மேற்குலக நாடுகள் தமது முதன்மை இடத்தை இழந்து விட்டன.


அமெரிக்காவுக்கும் மேற்கு ஐரோப்பாவுக்கும் வெளியே புதிய 100 க்கும் மேற்பட்ட உலகப் பெரு நிறுவனங்கள் தோன்றிவிட்டன என்று அமெரிக்காவில் உள்ள பெரு நிறுவனங்கட்கான ஆலோசனை அமைப்பான Boston Conating Grop (BCG) மதிப்பிட்டுள்ளது. இந்திய Tata , suzlon Energy, சீனக்காகிதப் பொருள் உற்பத்தி நிறுவனமான "Nine Dragons Paper" மெக்சிக்கோவின் Grupo Bimbo பிறேசிலின் Marcopolo என்று பல நிறுவனம்கள் மேற்குலக நிறுவனம்களின் தனிமுதல் இடத்தை கைப்பற்றிவிட்டன. மேற்கைரோப்பிய நாடுகளின் பாரம்பரிய வைன் உற்பத்திக்கு கூடப் போட்டியாக லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா போன்ற நாடுகள் வந்துவிட்டன. ஐரோப்பியக் கூட்டமைப்பு நாடுகளில் 3.4 மில்லியன் கெக்டர் நிலத்தில் பயிராகும் வைன் ,இதனால் தேக்கத்துக்கும் விலை வீழ்ச்சிக்கும் உள்ளாகியுள்ளது.வருடம் 1.5 மில்லியன் லீட்டர் வைன் விற்பனை செய்ய முடியாமல் தேங்கிக் கிடக்கின்றது. ஐரோப்பிய வாழ்க்கைத் தரத்தில் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சி வைன் நுகர்வைப் பாதித்துள்ளது என்பதுடன் உலக மயமாதலின் சுதந்திரமான முதலாளித்துவ சந்தைச் செயற்பாட்டில் மேற்கு ஐரோப்பிய நாட்டு வைன் உற்பத்தியாளர்கட்கு அரச மானியம் வழங்கியும் கூட அவர்களைக் காப்பாற்ற முடியவில்லை.
 
 
எரிபொருள் மற்றும் மூல வளங்கள் ஏகாதிபத்திய கட்டுள் இருப்பதாக நாவலனின் பார்வையும் இன்றைய நிலைமைகளை அவரால் உய்த்துணர முடியவில்லை என்பதற்கு நிரூபணமாகின்றது.

முதலில் எரிபொருள் பிரச்னையை நாம் விளங்க முற்படால். 1910 இல் உலகில் 34.12 மில்லியன் தொன் நிலக்கரி வருடம் பாவிக்கப்பட்டது. அப்போது ஐரோப்பிய நாடுகள் நிலக்கரியுள்ள பிரதேசங்களை தமது கட்டுப்பாட்டுள் கொண்டு வர தம்மிடையே போர் செய்தன. ஆனால் , இன்றைய உலக மயமாகிய பொருளாதாரத்தின் எரிபொருள் பசியானது பிரமாண்டமானது.

உலக மனிதர்கட்கு இன்று, 100 மில்லியன் தொன் எண்ணெய் தேவை என்பதுடன் எரிவாயு, சூரியசக்தி, நீர், அணு, நிலக்கரி உயிரியல் வாயு, கடல் அலைகள் ஊடாகக் கூடச் சக்தி பெறும் காலமிதுவாகும். மேற்கு நாடுகளில் மட்டுமல்ல ஆசிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள செல்வந்தர்கள், நடுத்தரவர்க்கம் மட்டுமல்ல தொழிற்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த நாடுகளில் பெரும் பகுதி மக்கள் காலைக் கடன், குளிப்பு, சுடுநீர்ப் பாவனை, வீட்டை வெப்பமூட்ட கோப்பு, தேநீர், உணவு தயாரிப்பு, குளிர்சாதனப் பெட்டி, தொலைக்காட்சி, கொம்பியூட்டர், பொழுதுபோக்கு, எலக்ரொனிக் பொருட்கள், கார்,விமானப்பயணம், சுற்றுலா சகலத்திற்கும் இன்று எரிசக்தி தேவை. தொழிற்துறை வளர வளர விஞ்ஞானமும் வாழ்க்கைத் தரமும் உயர உயர இதன் தேவை உயர்ந்து வருகின்றது. எனவே, உலக வளம்கள் சரியாகப் பங்கிடப்படாத முதலாளிய அமைப்பில் இதைப் பெறுவதற்கான போராட்டமும் மூர்க்கமாக மாறிவிட்டது.

ஜெர்மனியில் ஒரு மனிதருக்கு அவர் வாழ்நாளில் தலைக்கு 225 தொன் நிலக்கரி 116 தொன் எண்ணெய் மற்றம் அது சார்ந்த பொருட்கள் 40 தொன் இரும்பு, 1.1 தொன் செம்பு 200 கிலோ Schwefel [http://de.wikipedia.org/wiki/Schwefel  ]  தேவை.ஆனால் ,இப்போ உலக மயமாதலின் பின்பு மேற்குலக மனிதர்களின் வாழ்க்கைத் தரம் நுகர்வு இரண்டுக்கும் புதிய போட்டியாளர்கள் 3ம் உலக நாடுகளில் படைக்கப்பட்டு விட்டனர். தமது வளர்ச்சிக்கு ஏற்ற பங்குகளையும் பொருளாதார உரிமைகளையும் கோரத் தொடங்கி விட்டனர். மூலப் பொருட்கள், சந்தைக்கான போட்டி என்பது மேற்குலக நாடுகளிடையே என்பது மாறி 3ம் உலக நாடுகளுடனான மேற்குலகப் போட்டிகளாகிவிட்டது.

மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது 400 ஆண்டு கால உலக வரலாற்றின் பொருளாதார, இராணுவ மேன்நிலையை இப்போ இழக்கத் தொடங்கிவிட்டன இதைத் தான் நாவலன் காணத் தவறிப் போனார்.

மேற்குலக எரிபொருள் நிறுவனம்களான BP, Exxom, MobilChevron, Taxaco,Gulf,Shell போன்ற உலகு தழுவிய நிறுவனம்களே மேற்குலக அரசியலை நிர்ணயித்தன.நினைத்தபோது இந்த நாடுகளை போர் செய்ய வைத்தன. இப்போ கிழக்கு ஐரோப்பா முதல் 3ம் உலக நாடுகள் வரை புதிய உலகப் போட்டியாளர்கள் வந்துவிட்டனர். ரஸ்சிய-Gasprom,சீன CNPL , ஈரானின் NIOC , வெனிசூலாவின் ; PDVSA , பிறேசிலின் PETROBAS , மலேசிய PETRONAS என்பன தோன்றி விட்டன. முன்பு இப்பிரதேச எண்ணெய் வளம்களும் ,எண்ணெய் இருப்பும் உள்ள நாடுகள் மேற்குலகத்துக்கு வெளியே உருவாகி வளர்கின்றன. எண்ணை வர்த்தகமென்பது பாரம்பரியமாக அமெரிக்க நாணயமான டொலரில் நடைபெற்ற ஒன்றாகும்.இப்போது ஈரான் தொடக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகள் வரை யூறோ முதல் தமது சொந்த நாணயம்களில் எண்ணை வர்;த்தகத்துக்கு வரத் தொடங்கியுள்ளன.

டொலரின் வீழ்ச்சி, மேற்குலக நாடுகளின் கார்கட்கு குறைந்த விலையில் எரிபொள் தர முடியாமை என்பன அவர்களின் வாகன உற்பத்தி நிறுவனம்களை நட்டம் ஆள்குறைப்புக்கும் தள்ளிவிட்டுள்ளது. மத்திய கிழக்கு , வட ஆபிரிக்க நாடுகளில் 798 மில்லியாடன் பெரல் எண்ணை இருப்பு உண்டு. ஆனால் ,இந்த நாடுகள் மேற்குலக எதிர்ப்புக்கும் இஸ்லாமிய ஆதரவுக்கும் வந்துவிட்டதுடன் தமது எரிபொருளுக்கான சந்தையை சீனா, இந்தியா, ஜப்பான், தென் கொரியா உட்பட ஆசிய நாடுகளில் பெற்று விட்டன. உலகப் பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற இஸ்லாமுக்கு எதிரான ஏகாதிபத்திய யுத்தப் பயங்கரவாதம் இந்த நாட்டு மக்களை ஏகாதிபத்திய எதிர்ப்புப் பக்கம் வரப் பண்ணியுள்ளது.

 உண்மையில் ஈராக் யுத்தம் என்பது இந்தியா, சீனா உட்பட வளரும் ஆசிய நாடுகளிடமிருந்து மத்திய கிழக்கு எண்ணை வளத்தைக் காக்கும் முதல் முயற்சியாகும். புஸ்ஸின் பொருளாதார ஆலோசகரான lawrence Lindsey ஈராக்கிய யுத்தம் தொடங்கியபோது ‘ஈராக்கில் ஏற்படும் ஒரு அரசுமாற்றம் தினசரி 3 முதல் 5 மில்லியன் பெரல் எரிபொருளை அமெரிக்காவுக்கு கொண்டு வரும்’என்றார். உப ஜனாதிபதி Richard Cheney வெளிநாட்டு அமைச்சர் Condellezza Rice இருவரும் முறையே "Hailliburton" ,"Chevorn"போன்ற அமெரிக்க எரிபொருள் நிறுவனம்களைச் சேர்ந்தவர்களாவர்.ஆனால் மேற்கு நாடுகள் முன்பு போல் உலக எரிபொருள் வளம்களை தனியே அனுபவிக்கமுடியாது, தனிஆளுமை செய்த காலம் போய்விட்டது.

வடகடலில் [Nord See]பிரிட்டன் நோர்வேக்கு உள்ள எண்ணை வளம் கடந்த 5 வருடத்தில் 20 வீத ஆல் வீழ்ச்சியடைந்துள்ளது. 2007 இல் உலகில் 435 அணு உலைகள் இருந்தன. 29 புதிதாகக் கட்டப்பட்டு வந்தது, 64.புதிதாகக் கட்டத் திட்டமிடப்பட்டது. இதில் வட தென் அமெரிக்க நாடுகளில் 127 இருந்தது. 5 புதிதாகத் திட்டமிடப்பட்டது. ஐரோப்பாவில் 130 இருந்தது. 2 கட்டப்பட்டது. 1 திட்டமிடப்பட்டது. ஆனால் ,ஆசியாவில் 110 அணு உலைகள் உள்ளது. 19 புதியதாகக் கட்டப்பட்டது. 43 கட்டத் திட்டமிடப்பட்டது. இது அணுசக்தி உற்பத்தியின் தீவிர வளர்ச்சியைக் காட்டியது.
 
 
3ம் உலக நாட்ட வளர்ச்சியினையடுத்து தங்கம், வெள்ளி, Platin உற்பத்தி இரண்டு மடங்காய் அதிகரித்தது. கணனியின்  Chips க்கு Silizium மும் காரின் புகையில் உள்ள காபனீரொக்சைட்டைக் கட்டுப்படுத்தும் Kataly sator தயாரிப்புக்கு Platinஅல்லது Palladium தேவை.நவீன Digital தொழில் நுட்பத்துக்கு கடும் பாவனைகளுடனும் எண்ணை, நிலக்கரி, நிலவாயு நுகர்வும் தொடர்புடையதாகும். ஆபிரிக்காவில் இப்போ அதிக யுத்தம்கள் நடைபெறுவதற்கான காரணம் மேற்குலக நாடுகள் இந்தியா, சீனா, தென்கொரியா, ஜப்பான், பிறேசில் ஆகிய நாடுகளிடம் ஆபிரிக்காவை இழந்து கொண்டு இருப்பதாகும். ஆபிரிக்கக் கண்டத்தல் எண்ணை, எரிவாயு மட்டுமல்ல தங்கம்,வெள்ளி Platin,செம்பு, உரான், பொஸ்பரஸ், இரும்பு,Malanja,Bauxi,Kobalt,Coltan என்பன உண்டு,Coltan கைத்தொலைபேசித் தயாரிப்புக்கு முக்கியமானது. இதன் விலை வெள்ளியை விட அதிகமாகும். கொங்கோவில் உள்ள malanja,Bauxi,Kobalt,coltan வளம்களை தொடர்ந்து பாதுகாக்கவே மேற்குநாடுகள் உள்நாட்டு யுத்தத்தை[Der Fluch der Reichtümer: Krieg um Rohstoffe des Kongo :Der Reichtum des Kongo ist sein Fluch. Diamanten, Kupfer, Kobalt, Gold, seltene Erden, Edelhölzer - riesige Mengen leicht abbaubarer, gut absetzbarer Roh- stoffe haben schon vor hundert Jahren die Begehrlichkeiten der damaligen belgischen Kolonialherren geweckt. Fast 40 Jahre lang konnte der Diktator Mobutu Sese Seko die Verteilung der Schätze unter seinen Anhängern und internationalen Konzernen kontrollieren. Seit seinem Sturz 1997 hat sich eine Vielzahl von Interessenten auf den Kongo gestürzt. Der Bürgerkrieg ist ein Verteilungskrieg, bei dem es längst nicht mehr um Ideologie, um politische Ziele geht.   http://www.ag-friedensforschung.de/regionen/Kongo/rohstoffe.html   ] தொடங்கி வைத்தன. ஆயுதக் குழுக்களை பயிற்றுவித்து போரில் இறக்கியுள்ளன.சிம்பாவேயில் முகாபே அரசுக்கு எதிராக மேற்குநாடுகள் எதிரணியான MDC" க்கு நிதி தந்து ஆதரிக்கின்றன.  சிம்பாவேயில் உள்ள Platin, இரத்தினக்கற்கள் உட்பட வளம்கள் மேற்குநாடுகளிடமிருந்து சீனாவின் கைகளுக்கு மாறியமையே இதற்குக் காரணமாகும்.
 
 
உலகின் 90வீத Platin ஆபிரிக்காவிலேயே உள்ளது.கொங்கோவில் மட்டும் உலகின் 40வீத Phosphat வளம் உள்ளது.1999க்கும் 2006 இடையில் சீன- ஆபிரிக்க வர்த்தகம் 20 மடங்கால் 35 மில்லியாடன் டொலர்களாக அதிகரித்தது.அங்கோலா,நைஜீரியா,சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா எங்கும் சீனாவின் மிகப் பெரும் முதலீடுகள் இடப்பட்டது .அங்கோவில் மாத்திரம் 10 மில்லியாடன் டொலர்களை சீனா முதலிட்டுள்ளது. அங்கோலா 2007 இல் 10 வீத வளர்ச்சியை எட்டியது. 2008 இல் 20 வீத வளர்ச்சி பெற்றுள்ளது.அதன் எரிபொருள் வளங்கள் சீனாவுக்கு பெரும்பகுதியாய் செய்கிறது.ஆபிரிக்காக வரலாற்றில் முதன் முறையாக உள்நாட்டு யுத்தம்களையும் மீறி வளரவும் முயல்கின்றது. அங்கோலா ஆபிரிக்காவில் மிகவும் வேகமாக வளரும் நாடாகும் செய்தித் தொடர்பு, போக்குவரத்து, மருத்துவம், கல்வி, தொழிற்துறை என்பனவற்றுக்கு அது 10 மில்லியாடன் டொலர்களை முதலிட்டுள்ளது. சீன அரசு நிறுவனமான China Road & bridgecorp அங்கோலா, சூடான், நமீபியா, மாலி, உகண்டா, சியராலியோன் ஆகிய நாடுகளிலும் பாலங்கள், தெருக்கள் என்பவற்றை அமைக்கின்றது.

சீன, இந்திய , தென்கொரிய நிறுவனம்கள் ஆபிரிக்கா எங்கும் துறைமுகம்கள், விமான நிலையங்கள், அரச கட்டிடங்கள், விளையாட்டரங்குகள்,புகையிரதப் பாதைகள், தொழிற்சாலைகள், கழிவுநீர் வாய்க்கால்கள் என்பனவற்றை அமைக்கின்றன. அங்கோலாவில் எண்ணை, இரும்பு,காதிகம் சீமெந்து தொழிற்சாலைகளை சீனா அமைக்கின்றது. அதன் அண்டை நாடுகளுடனான தெருக்கள், புகையிரதப் பாதைகள், தொலைத் தொடர்புகள், ஆபிரிக்கா 2005 இல் 5 வீத வளர்ச்சி, கடந்த 15 வருடத்தில் இல்லாத குறைவான பணவீக்கம் ஆபிரிக்க எயிட்ஸ், பட்டினி, உள்நாட்டு யுத்தம், குழந்தை மரணம்கள் இவைகளால் மட்டுமே நிரப்பிக் கிடப்பதான பழைய மேற்குலகப் பார்வையை நாம் விலக்கிப் பார்த்தால் ஆபிரிக்கா முதலாளித்துவப் பாதையிலான வளர்ச்சியை பெறத் தொடங்கிவிட்டது.

நைஜீரியா 6.5% ,கானா 5.8 %,சூடான் 8 % ,கென்யா 6.5 % ,தான்சானியா 6.9 %, சிம்பாப்வே 6.5% , தென் ஆபிரிக்கா 4.8 %  என்று வளர்ச்சியைக் காட்டுகின்றன.சூடான், சிம்பாப்வே, தென்ஆபிரிக்கா, நைஜீரியா உட்பட ஆபிரிக்க நாடுகட்கு எதிரான மேற்குலகின் கடும் பிரச்சாரம் மனித உரிமைகள் பற்றிய அலறல்களை இந்தப் புலத்திலேயே காணவேண்டும்.
 
 
‘ஆபிரிக்க யூனியன்’ என்ற அமைப்புடன் தற்போது தென்ஆபிரிக்கா, நமீபியா உட்படப் பல நாடுகள் ஒருங்கிணைந்து "Sach" என்ற பொதுஅமைப்பை உருவாக்கியுள்ளன.

2010 இல் சீனாவுடனான ஆபிரிக்க நாட்டு வர்த்தகம் 100 மில்லியாடன் டொலர்களைத் தாண்டி விடும் என்று மதிப்பிடப்படுகின்றது.

தென் ஆபிரிக்கத் துறைமுகம்களான Durban,east London,Port Elizabeth இருந்து சீனாவுக்கு இரும்பு, நிலக்கரி, Platin ஏற்றிச் செல்லும் கப்பல்கள் தொகை அதிகரித்து விட்டது. 1000 க்கு மேற்பட்ட சீன நிறுவனங்கள் ஆபிரிக்காவில் உள்ளது. கடந்த 7 வருடத்தில் 750,000 சீனர்கள் ஆபிரிக்க நாடுகளுக்கு சென்றுள்ளனர். இவர்கள் சீன நிறுவன நிபுணர்கள், நிர்வாகிகள், தொழிலாளர்கள் ஆக இவர்கள் பணிபுரிகின்றனர். இவர்கட்கான கடைகள் சீன உணவு பகுதிகள், வீடுகள் எழுகின்றன. சீன உயர் நிர்வாகிகட்காக ஆடம்பர மாளிகைகள்,சீன மருத்துவர்கள் நுளம்புகளை சமாளிக்க வல்ல வலைகள், குளிரூட்டப்பட்ட வசதிகள், டேபிள் டெனிஸ் விளையாட்டு என்பனவும் ஆபிரிக்கக் கண்டத்தில் நுழைந்துள்ளது. சீன- ஆடைகள், தொலைக்காட்சி, கொம்பியூட்டர், குளிர்சாதனப் பெட்டி, கைத்தொலைபேசி, மோட்டார் சைக்கிள், ஆடம்பர பஸ்கள், எலக்ரோனிக் பொருட்கள், ஆயுதம்கள், விமானம்கள், உணவுப் பொருட்கள்,குண்டு துளைக்காத வாகனங்கள் என்பன மேற்குலக உற்பத்திகளை விட மிகவும் மலிவாக ஆபிரிக்கச் சந்தைக்குள் வந்துள்ளது. சீன ஊடகவியலாளர்கள் தென்ஆபிரிக்கா, அங்கோலா, நைஜீரியா, கானா, கென்யா, உட்பட பல நாடுகளில் நிரந்தரமாக உள்ளனர். ஆசிய நாடுகள் ஆபிரிக்க வளம்கள், மற்றும் அரசியல் போக்குகளில் முக்கியத்துவம் பெற்று விட்டன. சீனாவுக்கான மூன்றிலொரு பகுதி எண்ணை ஆபிரிக்காவிலிருந்தே வருகின்றது. சூடானின் 25 % எண்ணை வளம் உட்பட ஆபிரிக்க எண்ணை வளம்கள் சீனாவின் Petrochia மற்றும் "Cnool" என்பனவற்றிடம் உள்ளது. 40%சீனாவின் எரிவாயு ஆபிரிக்காவிலிருந்து தான் வருகின்றது. இந்திய எரிபொருள் நிறுவனமான "Onel"ஆபிரிக்காவில் உள்ளது.
 
 
சீனாவுடன் ,இந்தியக் கூட்டு மட்டுமல்ல, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ, இலங்கை,தாய்வான், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா,வியட்நாம், கம்பூச்சியா, லாவோஸ் என்பன ஒரே நிதி மற்றும் பொருளியல் கூட்டுள் வந்துள்ளன.

தென் சீன நகரான kunmiing இல் இருந்து லாவோஸ்,கம்பூச்சியாவின் துறைமுகமான Sihanouk ville தொடர்புடன் தாய்லாந்துக் குடாக் கடல்வரை சீனா 2,000 கிலோ மீற்றர் வரை பாதை அமைக்கிறது. இந்த நாடுகளில் பெரும் பொருளாதார முதலீடுகள் செய்கிறது பர்மா,வடகொரியா சகல இடமும் சீன மூலதனம் பரவுகின்றது. ஆசிய நாடுகள் உலக வங்கி, ஐ.எம்.எவ், இடம் கடன் பெற்ற காலம் போய்விட்டது.

சீன மூலதனம் தொழிற்துறைகள் இப்பகுதிகளைக் கட்டுப்படுத்தத் தொடங்கிவிட்டது. கம்பூச்சியாவுக்கு உலக வங்கி 70 மில்லியன் டொலர் தருவதாக வாக்களித்துவிட்டு அதை நிறுத்திய போது சீனா கம்பூச்சியாவுக்கு 600 மில்லியன் டொலர் கடனாகத் தந்தது. சீனா ஆசியாவினது மட்டுமல்ல 3ம் உலக நாடுகளது வங்கியாகவும் ஆகிவிட்டது.

மேலும் சீனாவும் ரஸ்யாவும் இணைந்து மத்திய ஆசிய நாடுகளுடன் இணைந்து "Shanghai Cooperation Organisation" என்ற கூட்டை உருவாக்கியுள்ளன. இதை மேற்கு நாட்டு ‘ஊடகம்கள்’ கிழக்கின் நேட்டோ கூட்டமைப்பு’ என்று பெயரிட்டன.

2007 இல் அமெரிக்க விமானப்படை , கப்பற்படை என்பன கூட்டாக சீன- ஜப்பானிய-தாய்வான் கடற்பரப்பில் தனது நவீன விமானம் தாங்கிக் கப்பலான "Kitty Nawk" தலைமையில் 12 போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களுடன் பயிற்சி நடத்திக் கொண்டு இருந்தபோது இப்பகுதியின் கீழாக சீனாவின் மிக நவீன நீர்மூழ்கிக் கப்பல்கள் இவர்கள் அறியாதவாறு கடந்து சென்றுவிட்டது. அந்த மட்டத்துக்கு சீன இராணுவத் தொழிற்துறையும் ஆற்றல் மிக்கதாகிவிட்டது. 1957 இல் சோவியத் யூனியனின் ‘ஸபுட்நிக்’ விண்வெளிக் கோள் ஏவப்பட்ட போது அமெரிக்காவுக்கு ஏற்பட்ட அதிர்ச்சியை ஒத்த அதிர்ச்சி இதிலும் ஏற்பட்டது என்று மேற்குலக ஊடகம்கள் எழுதின.

சீனா உட்பட ஆசிய உற்பத்திப் பொருட்கள் தரம் குறைந்தவை. மேற்குலக உற்பத்திகளை கொப்பியடித்தவை என்ற பிரச்சாரம் ஜெர்மனி போன்ற மேற்கு நாடுகளில் நடக்கின்றது.

1770 இல் பிரிட்டனில் தொழிற்புரட்சி நடந்த பின்பு அதைக் கொப்பி பண்ணியே ஏனைய ஐரோப்பிய நாடுகள் தொழில் மயமாகின.

ஜெர்மனியானது 1850 களில் பிரிட்டனைப் பின்பற்றியே தொழில் மயமாகியபோது அதன் உற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஸ் உற்பத்தி போல் தரமாக இருக்கவில்லை. பிரிட்டன் உட்பட ஏனைய மேற்கு ஐரோப்பிய சந்தைகட்கு ஜெர்மனியப் பொருட்கள் வந்தபோது போட்டி மற்றும் ஜெர்மனியப் பொருட்களின் தரக்குறைவுகளைக் காட்டவே ஜெர்மனியப் பொருட்களுக்கு Made in Germany என்று உற்பத்தி அடையாளம் இடப்படவேண்டும் என்று பிரிட்டன் கட்டளையிட்டது. பிற்காலத்தில் ஜெர்மனி வளர்ச்சிப் போக்கில் பிரிட்டனை விட சிறந்த தரமான உற்பத்திகளைச் செய்தது Made in Germany என்பது அப்பொருளின் தரத்துக்கு அடையாளமானது. இது சீனாவுக்கும் பொருந்தும்.
 
 
‘கொலம்பியாவும் பிறேசிலும் வியட்நாமும் ஒப்பிடமுடியாத வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. அந்த நாடுகளின் சமூக அமைப்பு வளம், மக்கள் தொகை என்று மாறுபாடுகள் உண்டு. என்று நாவலன் கூறுகிறார்.
 
 
இப்படித் தனித்தும் பிரித்தும் பார்க்கும் எண்ணப்போக்கு நாவலனிடம் எப்படி வந்தது, தமிழ்தேசியவாதிகளின் தனித்தவில் அரசியல் பாதிப்புக்களாலும் தமிழ்நாட்டின் தனியிருப்பு, தனித்தவளை தேடும் போக்குகளாலும் இவர் சிந்தனை செய்ய முடியாது தடுக்கப்பட்டார் என நாம் கொள்லலாம். நாவலன் காட்டும் நாடுகட்கு இடையே இருப்பது போன்ற வேறுபாடுகளை மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே இல்லையா?

ஜெர்மனிக்கும் பிரான்சுக்கும் இடையே இவை கிடையாதா?

இப்படி இருக்க இவை எப்படி ஐரோப்பியக் கூட்டமைப்பாக நாட்டோவாக இணைகின்றன. ஐரோப்பிய நாடுகளுடன் அமெரிக்காவுக்கு வேறுபாடுகள் இல்லையா? அப்படி இருக்க இவர்கள் ஒன்றாக நிற்கிறார்கள். இந்த நாடுகளிடையே ஒரே விதமான அமைப்புக்களை உடையவை என்ற ஒற்றுமை இல்லையா? வேறுபாடுகள் என்பதே மறுமுனையில் ஒருமைப்பாட்டையும் கொண்டது தானே?

கொலம்பியா, பிறேசில், வியட்நாம் என்பன விவசாயப் பொருளாதார உற்பத்தி வடிவம்களில் இருந்து இப்போ உயர்தொழிற்துறை நாடுகளாக மாறுவது என்பதில் ஒன்றுபட்ட இயல்புகள் இல்லையா? வியட்நாம் நிலச்சீர்திருத்தம் செய்து விவசாயிகட்கு நிலம் வழங்கிவிட்டது என்றால் லத்தீன் அமெரிக்க நாடுகளில் பிறேசில், பொலிவியா, வெனிசூலா,நிக்கரகுவா, சிலி, ஆஜன்டீனா என்று முழு நாடுகளுமே நிலச்சீர்திருத்தம் விவசாயிகட்கு நிலம் தருவது, கல்வி,சுகாதாரம், சமூகசேவை உட்பட முதலாளிய வழிப்பட்ட சீர்திருத்தம்களைச் செய்வது ஒத்த தன்மையை வெளியிடவில்லையா? லத்தீன் அமெரிக்கா உட்பட ஆசிய நாடுகளும் தமது நூற்றாண்டு கால சமூக உறக்கத்தை கலைக்கத் தொடங்கியுள்ளன. லத்தீன் அமெரிக்காவில் போர்த்துக்கேய மொழி பேசும் பிறேசிலும் பிரான்ஸ் மொழி பேசும் கெயிட்டியும் ஆங்கில மொழி பேசும் ஜமேக்காவும் ஏனைய ஸ்பானிய மொழி பேசும் நாடுகளுடன் ஒரே கூட்டாக கண்டமாக உருவாகும் நிகழ்வுப்போக்கு நடைபெறுவது ஏன் நாவலனுக்கு எட்டவில்லை?
 
 
வெனிசூலா இல் எழுந்த லத்தீன் அமெரிக்க ஜனநாயக மயமாகும் இயக்கம்கள், பொலிவியா, எக்குவடோர், பராகுவே, பிறேசில், ஆஜன்டீனா, சிலி, நிக்கரகுவா, கௌத்தமாலா, உருகுவே என்பன கியுபாவுடன் ஒன்றிணைந்து "Marcosu" என்ற பொதுக் கூட்டமைப்பாக செயற்படத் தொடங்கியுள்ளன. இந்த நாடுகள் தம்மிடையேயான கூட்டான நிதி நடவடிக்கைகட்காக’தென்பகுதி நாடுகட்கான வங்கி (Banco del sur) யை 7 மில்லியாடன் டொலர் மூலதனத்துடன் ஆரம்பித்துள்ளன. இது உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கிகட்கு எதிராக தமது கண்டத்தில் செயற்படும்.இதனால் லத்தீன் அமெரிக்காவின் 20 நாடுகள் தம்மிடையே பொருளாதாரம், நிதி நடவடிக்கைகளில் இணைகின்றன. டொலர் நாணயத்துக்கு எதிராக ஒரு பொது நாணயத்தைக் கொண்டு வருவது பற்றிய திட்டம்கள் உள்ளது.

 20 அக்டோபர் முதல் பிறேசில்,ஆஜன்ரீனா இரு நாடுகளும் தம்மிடையே தம் சொந்த நாணயம்களான Pesos,Reals இல் வர்த்தகச் செயற்பாடுகளைத் தொடங்கியுள்ளன.இதனால் டொலர் இப்பிரதேசங்களில் செல்வாக்கு இழக்கத் தொடங்கியுள்ளது. அமெரிக்க சி.என்.என். க்கு எதிராக "Tele Sur" என்ற லத்தீன் அமெரிக்க நாடுகட்கான ஸ்பானிய மொழியிலான தொலைக்காட்சிச் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது அரபுநாடுகளில் செயற்படும் அல்ஜசீரா, தொலைக்காட்சிக்கு சமமானதாகும்.

லத்தீன் அமெரிக்காவை ஒரே தாயகமாய்க் கொள்ளும் இலட்சியத்தை முன்பு சிமோன் பொலிவர், பரபன்டோ மார்ட்டி போன்றவர்கள் கொண்டு இருந்தனர். சேகுவேரா முழுக்கண்டத்தையும் ஒரே நாடாக ஆக்கும் இலட்சியத்தைக் கொண்டு இருந்தார். லத்தீன் அமெரிக்காவின் இன்றைய நாடுகளும் எல்லைகளும் செயற்கையாக நாடு பிடிப்பாளர்களால் ஏற்படுத்தப்பட்டதாகும். இக்கண்டம் முழுவதும் ஸ்பானியர், செவ்விந்தியர், கறுப்பு இன மக்கள் என்போரே முக்கிய மக்கள் பிரிவாக உள்ளனர். எப்படி கனடாவும் அமெரிக்காவும் ஒரே தேசமாக பல்லின மக்கள் வாழும் நாடாக இருக்க முடியுமோ அவ்வாறே லத்தீன் அமெரிக்கக் கண்டமும் ஒரே நாடாக இருப்பதே அதில் வாழும் மக்களின் வாழ்வுக்கு சாதகமாக இருக்கமுடியும். இங்கு நாவலன் ஏகாதிபத்தியம்கள், கொலனிக்கால நாடு பிடிப்பாளர்கள் செயற்கையாக வகுத்த எல்லைகளையும் நாடுகளையும் அப்படியே ஏற்கிறார்.
 
 
அமெரிக்காவின் 50 மாநிலம்களையும் 50 நாடுகளாகப் பிரிக்கமுடியாதா?

கனடாவையும் ,பிரான்ஸ் மொழிபேசும் கியூபெக் மாநிலம் முதல் பல நாடுகளாகப் பிரிக்கமுடியாதா? இந்த பிரிக்கப்பட்ட நாடுகளை உலக வரைபடத்தில் தனித்தனி நாடுகளாகப பார்த்திருக்க முடியாதா?

 ஆபிரிக்காவும் லத்தீன் அமெரிக்காவும் செயற்கையாகப் பிரிக்கப்பட்ட சிறு சிறு நாடுகளாகத் துண்டாடப்பட்ட கண்டங்களாகும். இங்கு நாவலனும் ஏகாதிபத்திய பிரிவினைச் சித்தாந்த வழிப்பட ஒழுகுகிறார். தனித்தனி நாடுகளின் தனித்தன்மைகளையும் வேறுபாடுகளையும் தேடியலைகிறார். அதுவும் அதை உலக மயமாகும் பொருளாதாரத்தின் காலகட்டத்தில்இதைச் செய்கிறார்.
 
 



அமெரிக்கா கண்டம் தழுவிய எழுச்சியும் ஒற்றுமையும் சோசலிசமும் வந்துவிடும் என்ற காரணத்தாலேயே அமெரிக்கா இராணுவ ஆட்சிகளை லத்தீன் அமெரிக்க கண்டம் முழுவதும் கொண்டு வந்தது வளம்களை சூறையாடியது. இன்று கொலம்பியா, மெக்சிக்கோ தவிர அனைத்து நாடுகளிலும் இடதுசாரி அரசுகள் பதவிக்கு வந்துள்ளன. இராணுவ அரசுகள் ஒழிக்கப்பட்டுள்ளது. முதலாளிய ஜனநாயகம், சோசலிச திசைவழியிலான போக்குகள் வளர்கின்றன. நிலமற்ற மக்கள் ,ஏழைகள், விவசாயிகள், செவ்விந்தியர்கள் ஆகியோருக்கு நிலம்கள் வழங்கப்படுகின்றது. எனவே இம் மக்களின் விவசாய இயக்கம்களாக எழுந்த கொரில்லா இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கியுள்ளன. முதலாளித்துவ ஜனநாயக இயக்கம்களாக உருமாறுகின்றன. சிலியிலும் ஆஜன்ரீனா எல் சல்வடோலரிலும் வருடத்துக்கொரு சதிப்புரட்சி ,இராணுவ சர்வாதிகாரம் சி.ஐ.ஏ. அரசியல் தலைவர்களை கொலை செய்த காலம் ,அமெரிக்க வாழைப்பழக் கொம்பனி, ‘ ‘ "Chiquita",கொக்கோ கோலாக் கொம்பனி என்பன லத்தீன்அமெரிக்க வாழை பழக்குடியயரசுகளை ஆட்சி செய்த காலம் இன்றில்லை .

காஸ்ரோவிற்கு அடுத்து லத்தீன்அமெரிக்கநாடுகளில் வெனிசூலாவின்’சாவஸ்’கண்டம் தழுவியஅரசியலின் முக்கிய தலைவராகியுள்ளார். ஜெர்மனியின் முக்கிய சஞ்சிகையான "Der Spiegel"விசேட இதழ் (5,2006)’எண்ணையுடன் சேகுவரா, (Che Guvera mit öl)என்றதலைப்பில் வெனிசூலாவின் சாவஸ் பற்றி கட்டுரை எழுதுகிறது.

வெனிசூலாவின் எரிபொருள் வளத்தால் பெறப்படும் பணம் லத்தீன் அமெரிக்க நாடுகட்கு நிதியாக,நீண்டகாலக் கடனாக செல்வதை எழுதிய கட்டுரை அமெரிக்காவில் கறுப்பு இன ஏழை மக்கள் வாழும் பகுதிகளான, Boston,Newyorker,Bronx,ஆகிய பகுதிகட்கு குளிர்காலத்தில் வெப்பமூட்ட சாவஸ் எண்ணை வழங்கிதைக் குறித்து எழுதியுள்ளது.’இந்தத் தென்னமரிக்க மனிதர் அமெரிக்க ஏழை மக்களைக் கைப்பற்றி விட்டார்’ என்கிறது. மறுபுறம் ஜெர்மனிய ஊடகம்கள் சாவஸ் மற்றும் பொலிவியாவின் ஈவா மொராலஸ் ஆகியோரை காஸ்ட்ரோவின் வாரிசுகள் தீவிரக் கொம்யூனிஸ்ட் சர்வாதிகாரிகள் என்று குறிப்பிட்டன.
 
 
வெனிசூலா உட்பட அந்நிய எரிபொருள் நிறுவனம்களை வெளியேற்றி; சகலதையும் அரசுடமையாக்கியதுடன் பிறேசில், கியூபா, பொலிவியா உடன் பெருமளவு ஒப்பந்தம்கள் மேற்கு நாடுகளை எதிர்க்கும் சீனா, ஈரான், ரஸ்யாவுடன் புதிய ஒப்பந்தம்களைச் செய்துள்ளது. அமெரிக்காவின் உருக்கு இரும்பு நிறுவனமான Sidor பிரான்சின் ; lafarge , சுவிசின் Holeim ஆகிய சீமெந்துத் தொழிற்சாலைகள் சகலதும் அரசுடமையாக்கப்பட்டுள்ளது. அலுமேனியம், கார், உழவு இயந்திரம் ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவுகின்றது. செயற்கைக் கோள் ஏவல் ஆகியவற்றுடன் விண்வெளி ஆய்வுக்கும் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது. 2004 முதல் 40,000 முதல் 50,000 வீடுகள்வெனின்சூலாவில வருடாவருடம் கட்டப்பட்டு வருகின்றது.

லத்தீன் அமெரிக்க நாடுகள் அமெரிக்காவுடன் இணைந்து கியூபாவை எதிர்த்து தனிமைப்படுத்திய காலம் போய் இப்போ கியூபாவின் பாதுகாப்பு அரண்களாகிவிட்டன. பிறேசில்,கியூபா,வெனிசூலா புதிய எரிபொருள் வளம்கள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முழுக்கண்டத்திலும் 103 மில்லியாடன் பெரல் எரிபொருள் வளம் உள்ளமை இந்த நாடுகளை இன்னமும் நெருக்கமாய்க் கொண்டு வருகின்றது.

சேகுவேரா போராடி மரணமடைந்த பொலிவியாவில் 1985 பின்பு எட்டு அரசுகள் மாறின.; 20 வருடத்தில் எந்த மாற்றமும் இல்லை. 9 மில்லியன் மக்கள் தொகை கொண்ட மூன்றில் இரண்டு பகுதி மக்கள் தினசரி ஒரு டொலருக்கும் நிறைவான வருமானம் பெறும் நாட்டில் இப்போது தான் ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளையொத்த சமூக மாற்றங்கள் நிகழ்கின்றது. முன்பு அமெரிக்க நிறுவனம்களிடமிருந்த சுரங்கம்களில் பணிபுரிந்த தொழிலாளர்களின் ஆயட்காலம் சராசரியாக 35 வருடங்களாக இருந்தது.

இவர்களில் பெரும்பகுதி சுவாசப்பை நுரையீரல் வியாதிகளால் இறந்தனர். பொலிவியாவில் எண்ணை எரிவாயு, செம்பு, உரான், Zink,Blei,lithium,சல்பேட், நீர்வளம் என்பவைகளைக் கட்டுப்படுத்திய Pacific,LNG,British petrollum,Repsol என்பன அரசுடமையாக்கப்பட்டு வெனிசூலா, பிறேசில்,கியூப உதவிகளுடன் கூட்டாக செயற்பாடு இதனால் பொலிவிய அரசின் வருமானம் 1மில்லியாடனில் இருந்து 4 மில்லியாடல் டொலராக அதிகரித்தது.செல்வந்தர்களான1000 குடும்பங்கள் 25 மில்லியன் கெக்டர் வளமான நிலத்தை வைத்து இருந்தன.

இதில் நில உடமையாளனான Branco marincovic என்பவனின் குடும்பம் மட்டும் 150,000 கெக்டர் நிலத்தை உடமையாய்க் கொண்டு இருந்தது. பொலியாவில் வாழ்ந்த Quechua , Aymaraஉட்பட 36 செவ்விந்திய இனக்குழுக்கள் ஈவா மொராலஸ் அரசின் நிலச்சீர்திருத்தத்தின் கீழ் பெரும் நில உடமையாளர்களிடமிருந்து பறிக்கப்பட்ட நிலம்கள் கிடைக்கின்றது. முன்பு இந்த செவ்விந்தியர்கள் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் முன்பு நடனமாடுபவர்களாக விவசாய நிலம்களில் அரைஅடிமைகளாகவே இருந்தனர். இவர்கள் நிற இனரீதியில் மோசமாக நடத்தப்பட்டனர்.

"Indios"என்பது இழிவான சொல்லாக இருந்தது. இப்போது பொலிவியா அரசுத்தலைவராக உள்ள ஈவா மெராலஸ் ஒரு செவ்விந்தியர் விவசாயிகளாக இருந்து போராடியவர்.அண்மையில் செவ்விந்திய இனக்குழுக்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்து 8 மைல்தூர ஊர்வலமாக தலைநகரை நோக்கி வந்தனர். தமக்கு அனைவருக்கும் நிலம் வழங்கும்படி கோரினர். 18ம் நூற்றாண்டில் ஸ்பெயின் ஆக்கிரமிப்பாளருக்கு எதி;ராகப் போராடிய தமது தலைவர்களான Tupac Katari,Bartolina siso பெயரில் சபதம் எடுத்தார்கள். 2007 இல் முதலாவது செவ்விந்தியப் பெண்களின் மாநாடு கூட்டப்பட்டுள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகட்கு மாதம் 20 யூறோ பெறுமதியில் அரசால் நிதி உதவி வழங்கப்படுகின்றது.
 
பொலிவியாவில் மட்டுமல்ல முழு லத்தீன் அமெரிக்காவிலும் செவ்விந்திய மக்களின் விழிப்புணர்வு ஜனநாயகத்துக்கான போராட்டம்கள் நடக்கிறது. வெனிசூலா, பொலிவியாவில் இருந்து பிறேசில், ஆஜன்ரீனா முதல் பல ஆயிரம் கிலோ மீற்றர் தொலைவில் உள்ள நாடுகட்கு எண்ணெய் எரிவாயுக் குழாய்கள் அமைக்கப்படுகின்றன. கியூப வைத்தியர்கள் , ஆசிரியர்கள் தொழில்நுட்பவியலாளர்கள், உயிரியல் மருத்துவத்துறை நிபுணர்கள், சகல ஸ்பெயின் மொழி பேசும் நாடுகட்கும் பல ஆயிரக்கணக்கில் செல்கிறார்கள். லத்தீன் அமெரிக்க நாடுகளிடையே வித்தியாசம்கள் தனித்துவம்கள் இருப்பதாக ஒரு முதலாளியத் தேசியவாதி போல் சிந்திக்கும் நாவலன் இந்த நாடுகள் முழுவதுமே கடந்த நூறாண்டு முழுவதும் அமெரிக்காவால் இயக்கப்பட்ட இராணுவ அரசுகளாக சர்வாதிகார ஆட்சிகளாக இருந்தது என்ற ஒரே தன்மையைக் காணவில்லையா?

இதன் தலைவர்களின் பெரும் பகுதி அமெரிக்க இராணுவப் பள்ளியில் பயிற்றப்பட்ட ஜெனரல்களாக இருந்தனர் என்ற பொது ஒற்றுமையைக் காணவில்லை. எல்லா நாடுகளிலும் கொரில்லா இயக்கம்கள் எழவில்லையா?

விவசாயிகள் நிலம் கோரியும் நகர்ப்புறத் தொழிலாளர்கள் அந்நியப் பெரு நிறுவனம்களின் சுரண்டலுக்கும் எதிராகவும் போராடவில்லையா? இது முழு லத்தீன் அமெரிக்காவுக்கும் பொதுத்தன்மைகளாக இருக்கவில்லையா?


‘விடுதலை இறையியல்’ தத்துவம்தென்னமெரிக்கக்கண்டம் தழுவிச் செயற்பட்டமை எதைக் காட்டுகின்றது? ஆஜன்ரீனாவின் கடன்கள் பற்றி நாவலன் எழுதியுள்ளார்.

1990 க்கு முன்பு உலக வங்கி, சர்வதேச நாணய வங்கிகட்கு லத்தீன் அமெரிக்க நாடுகள் அடிமைத்தேசம்களாக இருந்தன. இன்று நிலை வேறு அமெரிக்க, மேற்கு ஐரோப்பிய வங்கிகள் நட்டமடைகின்றன. சர்வதேச நாணய வங்கி இப்போ 565 மி;ல்லியாடன் டொலர் நட்டப்பட்டுள்ளது. அமெரிக்க வீடுகள், நிலம்களில் முதலீடு செய்தமையால் வந்த இழப்பு, டொலர் பெறுமதி வீழ்ச்சி புதிய கடன்களையோ முதலீட்டையோ இதனால் செய்யமுடியவில்லை. சர்வதேச நாணய வங்கி தனது தங்க இருப்பில் 403.3 தொன்னை ஏழுமில்லியாடன் டொலருக்கு விற்பனை செய்கிறது. 2009 இல் 100 மில்லியன் டொலர் செலவைக் குறைக்கவும் ஆட்களைக் குறைக்கவும் சர்வதேசநாணயவங்கிதிட்டம். இதன் தலைமை உறுப்புரிமை நாடுகளிடம் அவசர நிதியைக் கோருகின்றது. சீனா, இந்தியா, தென்கொரியா, சிங்கப்பூர்,அரபுஎண்ணை நாடுகள் பிறேசில், வெனிசூலா என்பன முக்கிய கடன் வழங்கும் நாடுகளாக ஆகிவிட்டன. சீனா தனது சேமிப்பில் உள்ள உபரி டொலரை ஆசிய,ஆபிரிக்க நாடுகட்கு கடனாகத் தருகின்றது.

வெனிசூலா தனது கண்டம் கடந்து வெள்ளை ரஸ்யாவுக்குக் கூடக் கடன் தருகின்றது.
 
எனவே, உலக நாணய வங்கி, உலக வங்கி என்பன ஏழைநாடுகளை நிதி தர மறுத்துப் பணிய வைத்த காலம் போய்விட்டது. லத்தீன் அமெரிக்க நாடுகள் 1970,1980 களில் பெற்ற கடனைக்கூட சர்வதேச நாணய வங்கிக்கு சேர்பியா, உருகுவே, சிலி, ஆஜன்ரீனா, பிறேசில் என்பன கட்டிவிட்டன. பிலிப்பைன்ஸ் மற்றும் உலகின் 4 வது பெரிய கடனாளி நாடான இந்தோனேசியா என்பன உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய வங்கியிடமிருந்து விடுதலை பெற்றுவிட்டன. சிம்பாப்வே, அங்கோலா முதல் பொலிவியா இலங்கை வரை உலக வங்கிக்கு சவால்விடும் நிலைக்கு வந்துள்ளன.லத்தீன் அமெரிக்க நாடுகள் தமது ‘ தென் அமெரிக்க நாடுகட்கான வங்கியை உருவாக்கியது போல் இஸ்லாமிய முதலீட்டு வங்கியான IBFW 70 நாடுகளை உறுப்பினராய்க் கொண்டு 500 மில்லியாடன்டொலர் முதலீட்டில் தொடங்கியுள்ளது.

முஸ்லிம் நாடுகள் உட்பட பல ஆசிய நாடுகளின் எண்ணை, எரிவாயு விற்பனையில் திரளும் உபரிமூலதனத்தை ஆபிரிக்க, ஆசிய நாடுகட்கு கடனாகத் தருகின்றது. அமெரிக்கா மற்றும் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் பொருளாதாரத் தடைக்குள்ளான ஈரான், லிபியா, சூடான், சிரியா இந்த இஸ்லாமிய முதலீட்டு வங்கியில் இணைந்துள்ளன.

மலேசியத் தலைநகரான கோலாலம்பூரில் உள்ள இந்த Petronas Towers வங்கியின் பிரிவான ‘இஸ்லாமிய நிதிச் சேவை நிறுவதற்குரியதாகும். அமெரிக்கப் பொருளாதார நிபுணரான இந்த loretta Napoleoni இந்த IBFW வங்கியை உலகில் மிக வேகமாக வளரும் வங்கி இதற்கு உலகம் முழுவதும் கிளைகள் உருவாகிறது.114 மில்லியாடன் முஸ்லிம் மக்களின் 2.7 பில்லியன் டொலர் சொத்துடன் இதில் இணைந்துள்ளனர் என்கிறார். இந்த வங்கி சிறுகடன்கள், எரிவாயு எண்ணை, கட்டிடத் தொழில், உதைபந்தாட்ட Formel -1 எனப்படும் கார்ப்பந்தயம் இவைகளில் முதலீடுகள் செய்கிறது. மேற்குலகால் புறக்கணிக்கப்பட்ட பெருமளவு முஸ்லிம் முதலாளித்துவப் பொருளாதாரப் போக்காளர்கள் கல்வியாளர்களை இத்தகைய அமைப்புக்கள் உள்வாங்கியுள்ளன. பிறேசில் வெனிசூலா என்பன ஈரான், சிரியா உட்படப் பல நாடுகளுடன் பொருளாதாரத் தொழிற்துறை பரிமாற்ற உடன்படிக்கைகளைச் செய்துள்ளன.மறுபுறம் ‘ஆசிய அபிவிருத்தி வங்கி’யானது ஆசிய நாடுகட்கான பிரதான நிதி நிறுவனமாக ஆகிவிட்டது. இதனால் இந்தப் பிரதேசங்களில் உலகவங்கியும் சர்வதேச நாணய நிதியமும் பெறுமதியிழந்துவிட்டன.
 
 
ஆஜன்ரீனா பற்றிப் பேசும் நாவலன் அதன் அண்டை நாடான பிறேசிலின் அபிவிருத்தியைக் கவனித்து இருந்தால் அக்கண்டத்தின் பொதுப்போக்கை அவர் அவதானித்திருக்க முடியும்.

1990 களின் ஆரம்பத்தில் பிறேசில் லத்தீன் அமெரிக்காவிலேயெ பெரும் கடனாளி நாடு ,உலக வங்கியாலும் சர்வதேச நாணய வங்கியாலும் கட்டளையிடப்பட்டு ஆட்சி செய்த நாடு, இப்போ இந்த நாடு தனது 190 மில்லியன் மக்கள் தொகையுடன் உலகில் உள்ள 10 வது பெரியவளரும் தொழிற்துறை நாடு அதன் தேசிய வருமானம் 1.3 பில்லியன் டொலர்கள் அரச இருப்பு 200 மில்லியாடன் டொலர்களாகும்.

தங்கம், நிலக்கரி Nickel, Bauxid,Mangen உற்பத்தியில் உலகில் மிக முக்கிய நாடு தினசரி 1.5 மில்லியன் பெரல் எண்ணை உற்பத்தி செய்கிறது. சோயா, கரும்பு இவைகளில் இருந்து உயிரியல் எரிசக்தியை உற்பத்தி செய்யும் உலகின் முதன்மை நாடு. அமெரிக்காவால் ஒரு காலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட  நாடு ,இன்று முழு லத்தீன் அமெரிக்காவில் மட்டுமல்ல ஆபிரிக்கா, அரபுநாடுகளிலும் அதன் சந்தையும் மூலதனமும் நுழைகிறது. மறுபுறம் சீனாவானது ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளில் போலவே பிறேசிலிலும் அமெரிக்க இடத்தைப் பிடித்துள்ளது. இங்கு மட்டும் சீனாவின் 70 பெரு நிறுவனம்கள் உள்ளது. இவை 300 பாரிய பொருளாதாரத் திட்டம்களைக் கொண்டுள்ளன. வீதிகள், பாலம்கள், மருத்துவமனைகள், தொழிற்சங்கங்கள், வீடமைப்புத் திட்டங்கள் யாவற்றையும் சீனக்கட்டிட நிறுவனம்களே அமைக்கின்றன.

பிறேசிலின் எண்ணை முதல் சோயாவரை சீனாவுக்கு ஏற்றுமதியாகிறது. சிலி நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருளான செம்பு, இப்போ பெரும் பகுதி சீனாவுக்குச்செல்கிறது. முன்புஇந்த மூலப் பொருள்வளத்தைப் பெற அமெரிக்கா இராணுவச் சதிப்புரட்சியை நடத்தி சோசலிஸ்ட் அலன்டேயைக் கொன்றது. ஆனால் ,இப்போ எந்த லத்தீன் அமெரிக்க நாட்டையும் அமெரிக்காவால் உசுப்பமுடியவில்லை. வெனிசூலா, பொலியாவில் இராணுவச் சதிப்புரட்சிக்கும் கலகக் குழுக்களை உருவாக்கவும் முயன்று தோற்றது.

அமெரிக்காவின் பொருளாதார இயலாமை இராணுவ அரசியல் வீழ்ச்சிகளையும் கூடவே கொண்டு வந்துள்ளது.

தொழிற்துறை வளர்ச்சி தான் அது சார்ந்த புதிய பொருளாதார வாழ்வு முறை தான் ஜனநாயகம் மனித உரிமை தனிமனித சுதந்திரம் என்பனவற்றை முதலாளிய மட்டத்துள் கொண்டு வரும். இவையே சோசலிச இயக்கம்களும் புதிய தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் அரசியல் பலம் பெறவல்ல அடிப்படையாகும்.நாவலன் தனித்தனி நாடுகளின் தனியுரிமையை வித்தியாசம்களை வலியுறுத்த முயன்றமை அங்கு சோசலிசம் வரும் என்பதை மறுப்பதில் முடிவடைந்துள்ளது.
 
 
உலகச் சந்தையை வெல்ல மலிவாக உற்பத்தி செய்யவேண்டும். சம்பளம் உயரக்கூடாது. வட்டி அதிகரிக்கக்கூடாது. வட்டியை விட இலாபம் அதிகமாக இருக்கவேண்டும். 3ம் உலக நாடுகளில் மூலப் பொருள், மலிவான உழைப்பு காரணமாக பொருட்களை உற்பத்தி செய்து உலகச் சந்தைக்கு கொண்டு வர முடிகிறது. இதனால் மேற்குலக நாடுகளால் போட்டியிட முடியவில்லை.

அவர்களின் டொலர், யூறோ, பவுண் ஆகிய நாணயம்கள் பெறுமதி இழப்பால் நிச்சயமற்ற தன்மையால் உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரிக்கின்றது. தங்கமானது கிட்டத்தட்ட உலக நாணயமாகிவிட்டது. 3ம் உலக நாடுகள் புதிய உலக நாணயத்தை கண்டறிய வழி தேடுகின்றன என்றால் மேற்குலக ஏகாதிபத்தியம்களின் அந்திம காலத்தை எண்ணிப் பார்க்கமுடியும்.

அமெரிக்க, பங்குச்சந்தை வீழ்ச்சி 3ம் உலக நாடுகளையும் தொட்டது.உலக மயமாகி மென்மேலும் இணையும் மூலதனச் செயற்பாட்டில் ஒன்று திரண்டு வரும் நிதிச் செயற்பாடுகள் இதைத் தவிர்க்க முடியாததாக்கியுள்ளது.

சீனப்பொருட்களுக்கான சந்தை இன்று மேற்குநாடுகளிலும் பிரதானமாகியுள்ளது. ஜெர்மனியில் உள்ள பிராங்பேர்ட் நகரில் இயங்கும் " International centre for corporate culture und history "என்ற அமைப்பு "Das ende des weissen mannes"என்ற நூலை வெளியிட்டுள்ளது. இந்த நூல் மேற்குலக வெள்ளை நாகரீகத்தின் முடிவைப் பேசுகிறது .மாக்சிய நோக்கில் மேற்குலகு சோசலிசப் புரட்சியின் காலகட்டத்தில் ஜரோப்பா நுழைகிறது. தொழிலாள வர்க்கம் தனது கடந்த அனுவச் செழிப்போடு சமுதாய மாற்றத்துக்காக போராட்டத்தை தொடங்குமென்பதாகும்.
 
 
‘உலக மயமாதல் என்பது வளர்ச்சியடைந்த நாடுகளின் சொந்த நலன்கட்கான மறு ஒழுங்கு என்பது நாவலனின் வாதமானது.

இது மிக மேலோட்டமான பழைய இடதுசாரிப் பார்வை என்பதுடன் சமூக இயங்கியல் மற்றும் வளர்ச்சி நிலைமைகளை கணக்கெடாத கருத்தியலுமாகும்.

கிழக்கு சோசலிச நாடுகள் வீழ்ந்தபோது மேற்கு நாடுகள் அந்த நாடுகளில் புகுந்து சூறையாடத் தொடங்கிய போதும் அது எதிர்விளைவுகளை உள்ளடக்காததாக இருக்கவில்லை.அங்கு வளர்ச்சி பெற்ற தனியார் மூலதனம் இன்மையால் ரஸ்யாவில் அரசுவகைபட்ட முதலாளியம் தோன்றியது. எரிபொருள் உட்பட, பிரதான மூலப்பொருள் வளம்களை உள்ளடக்கிய அரசு மூலதனம் எழுந்தது. . Gasprom அப்படித்தான் எழுந்தது.

பழைய சோசலிச நாடுகள் உட்பட சீனா , வியட்நாம் வரை தொழிற்துறை வளர்ச்சி ஏற்படத்தக்க மக்களின் கல்வி வளர்ச்சி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின. ஆபிரிக்காவில் உலகின் எப்பகுதியையும் விட அளவிட முடியாத மூலப் பொருள் வளம்கள் உடையதாக இருந்தும் அது தொழிற்துறையில் வளரத் தடையாக அம்மக்களின் கல்வி, சமூகவியல் பக்குவம் என்பன நிலவின.


அடுத்து ,உலக மயமாதலை மேற்குலக ஏகாதிபத்தியங்களே கொண்டு வந்தபோதும் அது அவர்களுக்கே கட்டுப்பாடாத பொருளாதார விதிகளைக் கொண்டது.

தன் சொந்த விதிகளின்படி இயங்குவது இது நாம் கருதுவது போல் மனித மூளைகட்கும் அதன் ஆசைகட்கும் கட்டுப்பட்டு நிற்பதில்லை. பிரிட்டிஸ் வங்கிகளான Rbs,HSBC,Barclays என்பன பிரிட்டிஸ் ஏகாதிபத்தியம் விரும்பியா நட்டப்பட்டன?

அமெரிக்காவிலும் உள்நாட்டிலும் வீடுகள், நிலம்களில் அந்த முதலீடுகளிலும் பங்குச்சந்தை மற்றும் ஊக வாணிபத்தாலும் அவை சரிந்தன. அமெரிக்காவின் 103 வருடப் பழைமையான ஜி.எம (GM) வாகனத் தயாரிப்பு நிறுவனம், 100 வருடம் வயதுடைய citigrup,Lehman Brothers எப்படி இருந்த இடம் தெரியாமல் போகின்றன?

சுவிட்சர்லாந்தின் யு.எஸ்.பி (USB_  http://www.ubs.com/ch/de.html  ) வங்கி நட்டமடைந்து அரபு மற்றும் சிங்கப்பூர் வங்கிகளால் இப்போ கடன் தந்து காக்க முயலும் நிலை எப்படி ஏற்படுகின்றது?

பிரிட்டிஸ் பிரதமர் சீனாவிடம் உலக வங்கிக்கு நிதி தரும்படி கெஞ்சுகிறாரே? உலக மயமாக்கல் என்பது தன்னைப் படைத்தவர்களையே கொன்று தின்கிறது. சந்தையின் கட்டளைகள் அலட்சியப்படுத்த முடியாதவை.
 
 
உலக மயமாதல் என்பது மேற்கு நாடுகள் விரும்பித் திணித்த ஒன்றல்ல மாறாக ,ஏகாதிபத்தியப் பொருளாதார வளர்ச்சியின் தவிர்க்கமுடியாத கட்டம் இது.

அமெரிக்காவையோ, ஜெர்மனியையோ கேட்டுக் கொண்டு செயற்படுவதில்லை. உலகச் சந்தை உலக மூலப் பொருட்கள் இன்று மேற்குலக நாடுகளின் கட்டுப்பாட்டுள் இருந்து மிக வேகமாக இழக்கப்பட்டு வருகின்றது. இந்த நாடுகளில் வங்கிகள், பெரு நிறுவனங்கள் நட்டமடைதல், வேலை இழப்பு, உற்பத்திக் குறைப்பு, நுகர்வு வீழ்ச்சி, மக்களின் வாழ்க்கைத் தரம் வீழ்ச்சி, உணவுப் பொருட்கள் உட்பட சகலதும் விலையேற்றம் என்பன எதைக் காட்டுகிறது என்பதை நாவலன் எண்ணிப் பார்க்கவில்லை.

நட்டப்படும் பிரிட்டின் வங்கிகட்கு அரசு நிதி தர முயல்வதும் அரசுடமையாக்க முயல்வதும் காட்டுவதென்ன?

 மேற்குலக ஏகாதிபத்தியம்கள் தமது இதுவரை கால பொருளாதார சக்தியை 3ம் உலக நாடுகளிடம் இழக்கத் தொடங்கிவிட்டன என்பது தான்.பிரிட்டனில் வீட்டு விலைகள் சரிவு, வீடுகட்கான வட்டி விகிதம் அதிகரிப்பு, கடன் பெற முடியாமை பெருகிறது.அடுத்த 2 வருடத்தில் வீட்டு விலைகள் குறைந்தது 30 வீத ஆக விழுந்துவிடும் என்று ஐ.எம்.எவ் எச்சரிக்கின்றது.

1980 இல் பிரிட்டிஸ் பிரதமராக இருந்த மார்கிரெட் தட்சர் வர்க்கம் மறைந்து விட்டது. பிரிட்டிஸ் மக்கள் உடமையுள்ள சமுதாயமாக (Ownership society )இருக்கமுடியும். எல்லோரும் வீடுகள் வைத்திருக்க முடியும் என்றார். முதலாளித்துவத்துள் எல்லோரும் எல்லாமும் அடையலாம் என்ற கற்பனை கலைகிறது. பிரான்சின் மொத்தக் கடன் அதன் தேசிய வருமானத்தில் 65வீத என்பதும் ஸ்பெயினின் மத்திய வங்கியான "Banco de Espana" அரசுக் கடன்களைக் கட்ட 80 தொன் தங்க இருப்பை விற்பனை செய்யவுள்ளது. ஸ்பெயினின் ஏற்றுமதி 222 மில்லியாடன் டொலர்களாகவும், இறக்குமதி 324 மில்லியாடன் டொலராகவும் அதிகரித்துள்ளது. அதன் வெளிநாட்டுக் கடன் 1.6 பில்லியன் டொலராக ஏறியுள்ளது.
 
 
இது முதலாளியத்தின் மரணகண்டமாகும்.

 அமெரிக்காவும் ஏற்றுமதியை விட அதிகமாக இறக்குமதி செய்து நுகர்கிறது. இது உலக மயமாதலின் பின்பு ஏற்பட்ட நிகழ்வாகும். நாவலனிடம் செயற்படும் ‘ஐரோப்பிய மத்தியவாத பார்வை’ இன்றைய உலகார்ந்த சடுதியான மாற்றம்களை உள்வாங்க விடாமல் தடுத்துவிட்டது.

உலகில் உள்ள சர்வாதிகாரிகள் ஊழல் அரசியல்வாதிகள் மாபியாக்கள் முதல் இந்திய சினிமா நடிகர் நடிகைகளில் தொடங்கி பிரபாகரன் பரம்பரைகள், உமாமகேஸ்வரன், பிரேமதாசா வரை காசு ஒழித்து வைத்திருந்த சுவிஸ் வங்கிகளே நட்டத்துக்கு மேல் நட்டம் Ubs,Credit Suisse வங்கிகளில் போட்ட காசு போன காசாகிவிட்ட நிலை உலகின் முக்கிய செல்வந்த நாடுகளில் ஒன்றான சுவிஸ் வங்கிகள் பொறியும் என்று முதலாளித்துவவாதிகள் கனவு கூடக் காணவில்லை. உலக மயமாதலின் பின்பு 3ம் உலக நாடுகளில் இருந்து சுவிஸ் வங்கிகட்கு கறுப்புப் பணம்கள் கிட்டத்தட்ட வருவதில்லை.

ஆசிய,லத்தீன் அமெரிக்க நாடுகளில் கண்டம் தழுவிய அளவில் பெரும் வங்கிகள் தோன்றிவிட்டன. வங்கித் தொழிலால் வாழ்ந்த உலகின் பணப்பெட்டியாக இருந்த சுவி;ஸ் கடந்த காலம் போல் இனி இருக்கமாட்டாது. இதுவும் உலக மயமாதலின் விளைவு தான். ஜெர்மனியில் உள்ள நுகர்வோர் பற்றிய ஆய்வு நிறுவனமான "Die Gesellschaft fur Konsumforchung" 15,000 தங்குவிடுதிகளில் நடத்திய ஆய்வில் அண்மைக்காலத்தில் சிறந்த உல்லாசப் பயணிகளாக ஆசியர்களே உள்ளனர் என்று தெரிவிக்கின்றது.

2007 மே மாதம் நடத்திய இந்த ஆய்வில் ஜப்பானியர்கள்,சீனர்கள் அதிகம் பண்புள்ளவர்களாகவும் பணம் செலவு செய்பவர்களாகவும் கூடுதலான ‘டிப்ஸ்’ தருபவர்களாகவுமுள்ளனர் என்கிறது இந்த ஆய்வு .

இதில் தம் சொந்த நாட்டிலேயே ஜெர்மனிய உல்லாசப் பயணிகட்கு 5வது இடமே கிடைத்துள்ளது.

ஒரு காலத்தில் -100 வருடம் முன்பு ,சீனர்களை ‘கூலி’ என்ற பெயரில் அரை அடிமைகளாக ஜெர்மனிக்கு கொண்டு வந்து வேலையில் ஈடுபடுத்தினார்கள். அந்த மக்கள் உலக மயமாதலின் பொருளாதார தொழிநுட்ப வரத்தாலேயே இப்படியாகியுள்ளனர்.

கடைசியாக, உலக மயமாதலை உலக சோசலிச இயக்கத்தால் மட்டுமே சகல மனிதகுல உறுப்பினர்கட்குமானதாக மாற்றமுடியும். உலக மயமாதலுக்கு மாற்று சோசலிசம் தான் என்று உணர்வற்ற நிலையிலேயே நாவலன் தேசியஇனப்பிரச்சனையில் ஏகாதீபத்தியங்களின் சதி தனது முடிவை எட்டியுள்ளது.
 
தமிழரசன்,பெர்லின்.







Donnerstag, August 09, 2012

சபா நாவலனின் நூலுக்கான விமர்சனம்:4

இன்று பலதரப்பட்ட முகங்களுடாகக் கூடும் அரசியல் நிகழ்ச்சிக்குட்பட்ட கூட்டுக்கள் மிக நேர்த்தியாகப் புலிப் பாசிசத்தாலும்,இலங்கையரசினது இனவொடுக்குமுறையாலும் பாதிப்படைந்த இலங்கைச் சிறுபான்மை இனங்களைத் தொடர்ந்து பிளப்பதிலும் "ஒருங்கிணைந்து" இயங்குதலைத் தடுப்பதிலும் வெற்றி கொண்டுள்ளன.

இந்தக் கூட்டுக்களால் கிழக்கு மாகாண மக்களைப் பிளந்து,ஆதிக்கச் சக்திகளுக்குத் தமிழ்பேசும் மொத்த மக்களையும் அடிமையாகுவதும் சாத்தியப்பட்டிருக்கிறது. பலவீனப்படுத்தபட்ட தமிழ் பேசும் மக்களது ஒருகிணைந்த எதிர்ப்பரசியலை மீளக் கூட்டணியின் விருத்தியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்போடு ஒன்றிப்போக வைத்ததில் இலங்கைக்கு "ஜனநாயக-போராட்ட" வழியிலும்,காந்திய அகிம்சையிலும் முன்னுதாரணமிக்கதாக மாறிக்கொண்டிருக்கும் புலிப் பிரமுகர் கே.பி. இவர்களைத் தொடர்ந்து பல்வேறு வகையிற் கவனித்து இயக்கிக்கொண்டிருக்கிறார்.இதுவொரு எதிர்ப்பரசியல் பரிணாமம்தாம்.

மக்களைத் தொடர்ந்து பிளவுப்படுத்துவதை அதிகாரம்-ஆதிக்கமானது தனது வர்க்க அரசியலது தெரிவில் ஒரு ஆயுதமாக வர்க்க வொடுக்குமுறையில் பயன்படுத்துகிறது.பல்வேறு வகையிலான குழுக்களை இந்திய-இலங்கை மேற்குலக சார் "அரசுசார அமைப்புகள்" தமது நிதியீடுகளுடாக மிகவும் ஒழுங்கமைந்த முறையில் வழி நடாத்துகின்றன-"நிலத்து-புலத்து" அரசியலரங்குக்கு மிக நேர்த்தியாக முன் தள்ளியும் விடுகின்றன.

இத்தகைய குழுக்கள் பலதரப்பட்ட கருத்தியற் போராட்டத்தை நிகழ்த்துவதைக் குறித்துத் தமிழரசன் , நாவலன் நூலுக்கான விமர்சனத்தில் வெகு நேர்த்தியாகக் கணிப்பிடுகிறார்.




சமகால நமது அரசியல் நகர்வில் கிழக்கைப் பிளந்தவர்களும்,வடக்கைக் குழறுபடியாக்கிக் குருதியாற்றில் அரசியலைச் செய்கின்றவர்களும்,இணைகின்ற புள்ளிகள் பலதரப்பட்ட கோசங்களது முன் நகர்வில் சந்திக்கின்றது.இது, அதிகாரங்களைப் பங்கீடுசெய்வது குறித்தும்,மக்களது நலம்சார்ந்த வாழ்வாதாரப் பிரச்சனைகள் குறித்தும் அதிகார வர்க்கத்தினது ஆதிக்கத்தை நிலை நாட்டும் முகமாகச் செயற்கையாகவே கருத்துக்களை வெளிப்படுத்துகின்றன.இந்தப் போக்கின் பிதாக்கள், இலங்கையிலிருந்து (நிலத்தில்) போரில் பாதிக்கப்பட்ட மக்களது மீட்பர்களாகவும்,புலம்பெயர் தளத்தில் பன்முகவுரையாடலது தெரிவில் இலங்கைச் சிறுபான்மை இனங்களுக்கான தெளிவான அரசியலைக் குறித்துத் தொடர்ந்து போராட்ட வரலாறு-இலக்கியம்,வெளியீடுகளெனவும்,அரசியலுரையாடாலெனும் போர்வையில் பலதரப்பட்ட சக்திகளையும்-போக்குகளையும் இணைத்து இந்திய-மேற்குலக நலன்களைக் குறித்து இலங்கை அதிகார வர்க்கத்தோடு பேரங்களை நடாத்திக்கொண்டிருக்கின்றனர்.

இதுள் முன்னாள் ஆயுதக் குழுக்களும்,பினாமிப் புலிப் பணக்காரர்களும் மிக வேகமாக இணைந்து வருகின்றனர்.இவர்களை இலக்கிய வியாபாரத்துக்கூடாக மக்கள்முன் தள்ளுவதில் மக்கள் விரோதக் கருத்தியற் போராட்டம்(சாம்பற் தத்துவம் பேசியக்கொண்ட முன்னாள் புலித் தத்துவ வாதிகளும் அவர்களைப் பின் புலத்தில் இயக்கும் வலுக்கரங்களும் இந்தப் போராட்டத்தின் உந்து சக்திகள்) செம்மையாக நடாத்தப்பட்டு வருகிறது. பணம்,இயக்க-ஆயுத மாயைகள் இவர்களது இணைவுக்கான மனவூகத்தைத் தொடர்ந்தளிப்பதால் எந்த ஆதிக்கச் சக்திகளோடும் இணைவதற்கானவொரு மக்கள் விரோத அறத்தை அவர்களுக்குத் தெரிவாக்குஞ் சந்தர்ப்பத்தை இந்திய-இலங்கை,மேற்குலக அரசுகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றன.

இஃது, தெளிவாகவும்,வரலாறாகவும் நம்முன்னிருப்பதைத் தமிழரசன் தொடர்ந்து தோலுரித்துக் காட்டுமிடங்கள் ஒரு நூலுக்கான விமர்சனத்தில் மக்களது எதிர்ப்பரசியலின் வரலாற்று இயக்கப்பாட்டினது நிலை அலசப்படுகிற வெளியாக நம்முன் விரிகிறது.அவசியமான கருத்தியற் போராட்டத்தை இந்தப் பிழைப்பு வாதிகளுக்கெதிராக முன் வைத்திருப்பதால் அதை இனங்காண வேண்டுமெனக் குறிப்புணர்த்துகிறேன்.

மாறிவரும் ஆசியப் பொருளாதாரப் போக்குகள் குறித்துத் தமிழரசன் தரும் "புள்ளிகள்-தரவுகள்" உண்மையானதுதானவென்பதில் சந்தேகமுடையவர்கள் பேராசியர் திரு.கிஷோர் மபுபானியை [Prof.Dr.Kishore Mahbubani ] வாசிக்க வேண்டுகிறேன்.குறிப்பாக அரவரது இந்த நூற்களை 1: Can Asians Think? [Understanding the Divide Between East and West., Steerforth, 2001, ISBN 978-1-58642-033-8 ];  2 : The New Asian Hemisphere  [The Irresistible Shift of Global Power to the East, PublicAffairs, 2008, ISBN 978-1-58648-466-8 ]வாசிக்கும்படி கேடுக்கொண்டு,அடுத்த பகுதியில் சந்திக்கின்றேன்.

அன்புடன்,
ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
09.08.2012


சபா நாவலனின் :தேசிய இனப்பிரச்னையில் ஏகாதிபத்தியங்களின் சதி!
-நூலுக்கான விமர்சனம்:4


ஆரிய திராவிட மோதல்கள் :
 
திராவிட மொழிகள் பற்றி ரெபெர்ட் கால்டுவெல் 1856-1875 காலத்தில் ஆய்வுகளை நடத்தித் திராவிட மொழிகள் பற்றிய நூல் வெளியிட்டார் என்பதுடன் ,குண்டர்ட் ஆகியோரும் திராவிடர் கருத்தியலை வளர்த்தனர்.மக்ஸ்முல்லர் ஆரிய மொழிகள் பற்றிய ஆய்வு வெளியிட்ட (1853) காலப்பகுதியிலேயே இவையும் இடம் பெற்றமையும் இணைத்துப் பார்க்கவேண்டும்.

ஆரிய, திராவிட மொழியாய்வுகளாகத் தொடங்கிய இவைகள் விரைவில் ஆரிய, திராவிட மக்களினம்கள் என்ற கருத்துக்களாக வளர்க்கப்பட்டதை அன்றைய கொலனிக்கால மேற்குலக அரசியலின் தயாரிப்பாகவே விளங்கவேண்டும்.

இந்திய சிப்பாய் கலகம் பிரிட்டிஸ் அரசைப் பயமுறுத்தியிருந்தது ஒன்றிணைந்த இந்திய தேசிய எழுச்சிக்கான தொடக்கமாக அது இருந்தது.எனவே மக்களிடையே பிளவுகள், துண்டாடல்கள் தனியடையாளத் தேடல்கள் ஊக்குவிக்கப்பட்டன.

இப்போக்குகள் தொடர்ந்து வளர்ந்து" ஆரியர்- திராவிடர் " உயர்வுச் சண்டைகளும் , "யார் இந்திய மூத்தகுடி, வந்தேறுகுடி" என்ற வாதிடல்களும் தோன்றின.கண்முன்னேயுள்ள அந்நிய பிரிட்டிஸ் ஆக்கிரமிப்பாளர்களை விட்டு விட்டு ‘கைபர்கணவாய்’ ஊடாக மந்தைகளை ஓட்டிக் கொண்டு வந்தவன் ஆரியன் ,திராவிடன்தான் மூத்தகுடி என்ற வாதம்கள் தோன்றின. புராண இதிகாசம்களில் ஆரியர்- திராவிடர் தேடப்பட்டனர். ராமர் ஆரியன்,இராவணன் திராவிடன்,வசிட்டர் பிராமணன், விஸ்வாமித்திரன் சூத்திரன், சமஸ்கிருதம் தேவபாசை ,அதல்லாதவை நீசபாசை என்ற சச்சரவுகள் முன்வந்தன.
 
 
ஆரியர்- திராவிடர் சச்சரவுகள் சாதாரண இந்திய மக்களை நெருங்கவில்லை.

 மாறாக,ஐரோப்பிய சார்பான ஆங்கிலக் கல்வி பெற்றவர்களும் , நகர்ப்புறம்சார்ந்த நடுத்தரவர்க்கமுமே இக்கருத்தியல்களின் பின்பு அலைந்தனர். பிரச்சாரப்படுத்தினர். தாம் சொந்தமாக மேற்குலக மொழி , நாகரீகம், கருத்துக்களில் பறிபோயிருப்பதை இவர்கள் உணராமல் ஆரிய திராவிடக் கற்பனை எதிரிகளையும் ,தீரர்களையும் தேடி பழைய வரலாற்றின் இருட்டுள் நுழைந்தனர்.

புராண,இதிகாசக் கருத்துக்களை சரித்திர உண்மைகட்குச் சமமாய் நிறுத்தனர்.

திராவிடநாடு, ஆரிய தேசம்,இந்துஸ்தான் கேட்கும் இயக்கங்;கள் தொடங்கின. இவை இந்திய சுதந்திரத்தின் பின்பு ஏகாதிபத்தியங்களின் சொற்கேட்கும் பரிவினைச் சக்திகளாகின. இவர்கள் மேற்கத்தைய கலாச்சாரத்தின் பிம்பங்களாகவுமிருந்தனர். திராவிடப் பெருமை பேசியவர்கள் ஆரியர்களை தமது எதிரிகளாகப் பிரகடனப்படுத்தியிருந்தனர். அதாவது வட இந்திய ஆரியரையே அவ்வாறு கருதினார். ஆனால் ,மேற்குலக வெள்ளை ஆரியரை தம்மை வென்று அடிமை கொண்டவர்களை எதிர்க்கவில்லை.அல்லது , குறைந்தது வட இந்திய ஆரியராகக் கருதப்பட்டவர்களை எதிர்த்தது போல் இது நடைபெறவில்லை. ஏன் இவர்கள் இந்தியக் கறுப்பு ஆரியரை எதிர்த்துவிட்டு ,ஐரோப்பிய வெள்ளைத் தோல் ஆரியரை விட்டு வைத்தனர்?
 
 
மேற்கத்தைய வெள்ளை ஆரிய நாகரீகத்தைப் பின்பற்றினர். அவர்களின்மொழி. பகுத்தறிவு, விஞ்ஞானம், அறிவியல், அரசியல், தத்துவம் இவைகளை ஏற்று ஒழுகினர். இது எப்படி நடைபெற்றது. மேற்குலக, வெள்ளை ஆரியரின் மருத்துவம் இல்லாமல் இந்தியாவின் கொலரா, அம்மை, தொழுநோய்,இளம்பிள்ளைவாதம், கசம்,மலேரியாவில் இருந்து இந்திய ஆரியர் மட்டுமல்ல திராவிடரும் தப்பிப்பிழைத்து இருக்க முடியுமா?

மேற்கத்தைய ஆரியராக கருதப்பட்டவர்களின் ஜனநாயகம், அரசமைப்பு முறைகளை திராவிடர் தழுவவில்லையா?இங்கு, கற்பனையான திராவிடர் ஆரியர்களை நிறுவும் சண்டைகள் மனித விரோதமானவையே. திராவிடர்,ஆரியர் என்ற இரு பிரிவினரிடமும் ஒருவரிடம் இல்லாத சிறப்பு உயர்வுகள் மற்றவர்களிடம் இருப்பதான கருத்துக் கட்டல்கள் மானுடவியல் ரீதியில் ஆதாரமற்றவை.மக்களின் பண்புகள் அவர்களின் வாழ்நிலையில் கட்டமைப்படுபவையே தவிர பிறப்பிலேயே உயிரியல் ரீதியில் முன்பே நிர்ணயிக்கப்பட்டவையல்ல.

வரலாற்றில் முன் எப்போதோ நிகழ்ந்த அநீதிகட்கு ,பல ஆயிரம் ஆண்டுகள் கடந்து பழியெடுக்க வேண்டுமெனச் சபதம் செய்வது, அக்காலத்தின் வரலாற்றுப் போக்கை மறுத்து திருத்தம் செய்ய முயல்வதாகும்.

ஒரு காலகட்ட தனியுடமை அமைப்பின் மனித இழிவுகட்கு இன்றைய மனிதர்களின் ஒரு பிரிவைப் பொறுப்பாக்குவது ஒட்டு மொத்த சமுதாயச் செயற்பாட்டின் இயக்கத்திலிருந்து அவர்களை தனியே பிரித்துக் காண்பது தவறாகும். குற்றம் நிறைந்த தனிச் சொத்துடமை அமைப்பை எதிர்ப்பின்றி விட்டு வைத்துக் கொண்டு, அதனால் இயக்கப்படும் மனிதப்பிரிவுகளையோ தனிமனிதர்களையோ விசாரணை செய்யமுயல்வது சமூக இயக்கப் போக்கை மதிப்பிடாதவர்கட்கு மட்டுமே முடிந்த காரியமாகும். சாபம் தருவதோ, சபிப்பதோ ,தீர்வு அல்ல !;உயர்வு, தாழ்வு பற்றிய கருத்துக்கள் நல்லன கெட்டவை பற்றிய பகுப்புக்கள் யாவும் சமூகத்தின் பொருளாதார உற்பத்திப் போக்கின் நலன்களில் இருந்தே வருகின்றது. குற்றம்கள் ஏனைய மனிதர்களை இழிவு செய்தல் அடிமைப்படுத்தல் என்பன ஏதோ தனிமனித மனம்களில் இருந்து உதித்து வருவதில்லை. சாணக்கியர் முதல் மனு வரை அக்காலகட்ட அரசியல்,சமூக பொருளியல் கட்டளைகளையே நிறைவேற்றினர்.கடந்த காலத்தை நாம் செப்பனிடமுடியாது. மாறாக ,கடந்தகாலப் போக்குகளை ஆய்ந்து எதிர்கால, நிகழ்கால,சமூக மாற்றங்கட்கு கீழ்ப்படுத்த வேண்டும்.

 மனிதர்களின் அக அம்சங்கள் உள்மன உலாவல்கள் புறநிலையாக நிலவும் சமூகவாதிகளின் கருத்துக் கட்டளையிடலாகும். அநீதிகளை உற்பத்தி செய்யும் சமூக அமைப்பை இயங்கவிட்டுக் கொண்டு அந்த இயக்கத்துக்கு உட்படும் மனிதர்களை மட்டும் குற்றம் குறை காண முடியாது.
 
 
ஒரு மக்கள் பிரிவுக்கு எதிராக பகைமையுணர்வுகள், பழியெடுக்கும் சபதம்கள் இந்தியாவின் தேசம் தழுவிய ஒன்றிணைதல் தொடங்க பிரதான தடையாக இருந்தது.

திராவிட நாகரீகம் ஆரியத்தை விட உயர்ந்தது. அங்கு கடவுள் இல்லை , சாதி கிடையாது, பிராமணியம் நிலவவில்லை என்ற வரலாற்று ஆய்வுக்குட்படாத செய்திகள் சரித்திரத் தகுதி பெற்று உலாவின. புராண, இதிகாசப் பாத்திரம்கட்கு உயிர் தரப்பட்டு ,அவர்கள் திராவிட மற்றும் ஆரியக் கருத்துக்களுக்கான போராளிகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டனர். திராவிட நாகரீகத்தில் செல்வந்தர்கள், ஏழைகள், மதகுருக்கள், உலோகத் தொழிலாளர்கள், சுதந்திரமற்ற அடிமைகள் இருந்ததை மறைத்தனர். அவ்வாறே, ஆரியரும் தம் வளர்ச்சியல் கடந்து வந்த மானுடவியல் உண்மைகள் நிலவவில்லை என்று மறுத்தனர்.

திராவிட கருத்தியலானது ‘லெமூரியா’,குமரிக்கண்டம்,குமரி நாடு, ஏழ் கடல் நாடு, ‘தென்குமரி முதல் வடவேங்கடம் வரை’ பரவிய தமிழ்நாடு என்ற தமிழ்த்தேசியவாதக் கனவுகளை பின் தொடர வைத்தது.

தமிழ்நாட்டு தேசியமானது திராவிடத்தின் குழந்தையாகும். இந்தியா என்பது பலவித சாதி,சமய, இனக்குழு, சமூகப் பிரிவுகள், மொழிகளின் நாடாகும்.

இவைகளிலே பிளவும் ,முரண்களும் ,சச்சரவுகளும் நிலவவே செய்யும் என்பதன் பொருள் ,அவர்களிடையே பொதுவான வர்க்க ரீதியிலான அம்சம்களும் உடன்பாடான சமூகப் போராட்டத் தேவைகளும் நிலவாது என்பதல்ல.

அந்நிய பிரிட்டிஸ் ஆட்சியை எதிரிடத்தக்க பலத்தை தம்மிடையே திரட்ட கடமைப்பட்ட இந்தியர்களாக உருவாகி வந்த மக்களை பிரிட்டிஸ் அரசு ஆரியர், திராவிடர், தலித்தாக மட்டுமல்ல, இந்துவாக, சீக்கியர், முஸ்லிம், பௌத்தர்களாக கூறு போட்டுக் கையாண்டது. அந்தப் பிரிவுகளிடையே தனித்தனி தலைமைகளை உருவாக்கி தன் கீழ் கையாண்டது.

திராவிடத் தமிழ்ப் பெருமைகளைத் தேடி தமிழ்தேசியவாதிகள் எகிப்து, பாபிலோனியா, பேர்சியா, கிறீஸ், மத்தியதரைக் கடற்பிரதேசம் எங்கும் பயணித்தார்கள். இலங்கையில் பண்டிதர் கணபதிப்பிள்ளை "அலெக்சாண்டர் ஒரு தமிழன் " என்று கண்டு பிடிக்க ,தமிழ்நாட்டில் பெருஞ்சித்திரனார், ம.பொ.சி,ஆதித்தனார் போன்றவர்கள் இதையொத்த கண்டு பிடிப்புக்களை நிகழ்த்தினர்.இவர்கள் ஏகாதிபத்திய பிரிவினை அரசியலுக்கான சிறந்த இரைகளாக இருந்தனர். சுமேரிய, எகிப்து நாகரீகம்கள் திராவிட நாகரீகம் எனவும் இந்த நாகரீகம்களின் மூலம் தமிழர் நாகரீகமே என்ற விளக்கம்களும் உலாவின. இவைகளின் வரலாற்றுப் பெறுமதிகள் பற்றி தமிழ்தேசியவாதிகள் கவலையுறவில்லை.

தமிழ்நாட்டுத் திராவிடக் கருத்துக்கள் பிராமணிய எதிர்ப்பை, மனித விரோத மட்டத்துக்கு வளர்த்துச் சென்றனர்.

ஆரியக் கருத்தாளர்கள் யூதர்களை எப்படி மதித்தனரோ அப்படியே திராவிடர்களை ஆரியக் கருத்தாளர்களும் ,திராவிடச் சிந்தனையாளர்கள் ஆரியரையும் நடத்த விரும்பினர். தென்னிந்திய திராவிடவாதிகள் வாய்ப்புக் கிடைத்தால் ஜெர்மனிய நாசிகளைப் போல் ஆரியர்கட்கும் ,பிராமணர்கட்கும் வதைமுகாம்களை அமைக்குமளவு தயாராக இருந்தனர்.திராவிடப் பெருமை, திராவிட தேசம் பேசிய பெரியார் கூட ஆரியரை, பிராமணர்களை எதிர்த்தாரே தவிர வெள்ளை ஆரியரான பிரிட்டிஸ்காறரை எதிர்க்கவில்லை. மாறாக, அவர்களின் நாகரீகம், பகுத்தறிவு, விஞ்ஞானம் இவைகளைப் புகழ்ந்து இந்திய விவசாய சமூகத்தின் பின் தங்கிய நிலைமைகளை நையாண்டி செய்தார்.

மேற்கு நாகரீகம் தொழிற்துறை வளர்ச்சியின் விளைவு, தொழிற்புரட்சியின் முன்பு ,பிரிட்டன் கூட இந்திய நிலைமைகளையொத்த சமூக நிலைமையையே கொண்டு இருந்தது என்று இவர்கள் கண்டாரில்லை. இந்தியப் பிராமண மதகுருக்களை போல் ஜரோப்பாவில் பாப்பரசர் கிறிஸ்தவமத குருக்களைநியமிப்பது போல் மன்னர்களையும் நியமித்தனர். பல சமயங்களில் வரி செலுத்தாத மன்னர்களின் நாட்டை அடமானமாகப் பெற்றார்.மன்னார்கள் இல்லாத போதும் ,மன்னராக இளவயது சிறுவர்கள் இருந்தபோதும் பாப்பரசரே நாட்டை நிர்வகித்தார். தன்னை எதிர்த்த மன்னர்களை விலக்கினார்.அவர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்யுமாறு மக்களை கிறீஸ்துவின் பெயரால் தூண்டினார். தனது சார்பான புதிய மன்னர்களை நியமித்தார். நாடுகளிடம் இருந்து கப்பம் பெற்றார். பகை நாடுகள் மீது படையெடுத்தனர். ஏனைய நாடுகளை அந்த நாடுகள் மேல் படையெடுக்கும்படி தூண்டிவிட்டார். புரட்டஸ்தாந்து மதத்துக்கு மாறிய நாடுகளிலும் ,தமது பகை நாட்டிலும் ஞானஸ்நானம், திருமணம், சாவு, அடக்கம் செய்தல் ஆகியவற்றுக்கான கிரிகைளை அவர் மறுத்தார்.

திருச்சபை உத்தியோகம்கள், பதவிகள் விற்கப்பட்டன. வாங்கப்பட்டன.
 
மதகுருக்கள், நிலபுல சொத்துக்களை வைத்து இருந்தார்கள். அந்த நிலம்களில் ஏழைகளும், அடிமைகளும் உழைத்தார்கள். சந்தைகளில் அக்காலத்தில் மனிதர்கள் ஆடு,மாடுகள் போல் விற்று வாங்கப்பட்டனர். அடிமைகள், தியோர்கள் (Theows)என்று அழைக்கப்பட்டனர். ஏழைகள் கடனைத் திருப்பித் தர முடியாத விவசாயிகள் தம்மைத் தாமே நிலப் பிரபுக்களிடம் விற்றுக் கொண்டனர். பிரிட்டனில் கி.பி.1000 இல் அடிமையகளே சந்தைகளில் முக்கிய விற்பனைப் பண்டமாக இருந்தனர். தப்பியோடும் அடிமைகள் திருடும் அடிமைகள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டனர். கொலை செய்யப்பட்டனர். அடிமைகளைக் கொல்ல உரிமை இருந்தது. குற்றம் செய்தவர்களை தீயை ஏந்தச் செய்தல் ,நீரில் மூழ்கச் செய்தல் ஆகியவை ஊடாக குற்றமற்றவர்கள் என நிரூபிக்கக் கோரும் நீதிசார் நடைமுறைகள் ஐரோப்பாவில் இருந்தன.

மதகுருக்கள், படைத்தலைவர்கள்,அரசுப் பிரதிநிதிகள், செல்வந்தர்கட்கு அரசன் மானியமாக வழங்கிய நிலம் " Bochland "என்று அழைக்கப்பட்டது.

இந்த நிலம்களில் விவசாயிகள் குத்தகைக்கு உழைத்தார்கள்.

 குத்தகையாக விளைபொருள் தராத விவசாயிகளைக் கொல்லும் உரிமை நிலவுடமையாளனுக்கு இருந்தது.கிறீஸ்தவ திருச்சபைகள் தமது சொந்த நீதிமன்றம்களைக் கொண்டிருந்தன. இங்கு கிறீஸ்தவத் திருச்சபை சார்ந்த குற்றவாளிகளை இவை விசாரித்து அரச நீதிமன்றம்களை விட மிகவும் குறைவான தண்டனையே வழங்கின. உதாரணமாக, அரச நீதிமன்றம் கொலைக்கு மரணதண்டனை வழங்கியபோது திருச்சபை நீதிமன்றம் கொலைக்கு தமது திருச்சபை ஆட்களை கிறீஸ்தவ மதச் சின்னம்கள் ,மத ஆடைகளை களைந்து விடும்படி மட்டுமே தீர்ப்பளித்து.

பாவம்களைச் செய்த பாவிகளிடம் இருந்து, கிறிஸ்தவ மதகுருக்கள் பணத்தைப் பெற்றுக கொண்டு பாவம்களை போக்கும் பொருட்டு ‘பாவமன்னிப்பு சீட்டுக்களை’ வழங்கினர். இப்படியாக, செய்த பாவம் போக்கப்பட்டுப் புண்ணியம் விலைக்க வாங்கப்பட்டது. பாவ மன்னிப்புச் சீட்டுக்களை விற்பதற்காக ஐரோப்பா எங்கும் பாப்பரசரின் கிறீஸ்தவப் "பாவம் போக்கிகள் " அலைந்த திரிந்தார்கள்.
 
 
கி.பி. 1539 இல் பிரிட்டனில் கத்தோலிக்க மதத்தைக் காக்க ஆறு விதிகட்கான சட்டம் (The statute of six Articles) கொண்டு வரப்பட்டது.இதன் மூலம் கத்தோலிக்க கொள்கைகளை நம்பாதவர்களை உயிரோடு எரியூட்டும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. கிறிஸ்தவ வழிபாட்டின்போது படைக்கப்படும் ரொட்டியும், வைனும் கிறீஸ்துவின் தசையும் இரத்தமுமாகும் என்பதை நம்ப மறுப்பது ,தெய்வ நிந்தனையானது. இஃது,கத்தோலிக்க எதிர்ப்பாக்கப்பட்டு மரணத்துக்குரிய தண்டனையானது !

14ம் நூற்றாண்டில் வெடிமருந்து கண்டு பிடிப்புக்குப் பின்பு பீரங்கிப்படைகள் உருவாகின.சண்டையிட்டன. கி.பி. 1600 இன் பின்பே பிரிட்டனில் வெளிநாட்ட உள்நாட்டு வர்த்தகம் வளர்ந்தது. நகரம்கள் எழுந்தன. துறைமுகங்கள் கப்பல்கட்டும் தொழில்கள் வந்தன. 1525 இல் வில்லியம் டிண்டேல்; (William Tyndale) பைபிளை லத்தீனில் இருந்து ஆங்கிலத்துக்கு மொழி பெயர்த்தார். அதன் பின்பே ஆங்கிலமொழி வளர்ந்தது. கலைகள், இலக்கியம், அறிவுத் துறைகள் வளரத் தொடங்கின. இங்கு தொழில் மயமாதலின் விளைவாகவே வர்த்தக வளர்ச்சி காரணமாகவே இவை நிகழ்ந்தன. அடிப்படையில் இந்திய பிரிட்டிஸ் சமூகங்கள் அக்காலத்தே கிட்டத்தட்ட ஒரே மட்டத்திலேயே இருந்தன.

ஐரோப்பிய முதலாளிய வளர்ச்சி தான் மேற்குலகை மாற்றியது.இந்தியாவின் உடன் கட்டை ஏறும் முறைபோல ஐரோப்பிய ‘விக்கிங்கர்’ மக்கள் பிரிவிடம் ஆண் இறக்கும்போது பெண்ணையும் அவனுடன் சேர்த்து எரிக்கும் பழக்கம் நிலவியது. எனவே, இந்து சமயத்தையோ பிராமணியத்தையோ இதுவரை மனிதவரலாற்றில் இல்லாத கொடுமைகளைக் கொண்டிருப்பதாகக் கற்பிக்க முடியாது. பல ஆயிரம் வருடம் மாறாத சமூகமாக இந்தியா இருப்பதே இதற்குக் காரணம் ,மறுவகையில் இந்தியாவானது பேர்சியா,பபிலோனியா, எகிப்திய நாகரீக மிச்சம்களையும் நினைவுகளையும் கொண்டுள்ள ஒரு சமூகமாகும்.

இந்திய சமூக இருப்பை வரலாற்று மற்றும் மானுடவியல் ரீதியில் அணுகாமல் அதன் மிகப் பின் தங்கிய பொருளாதார உற்பத்திமுறைகளோடு இணைத்து ஆராயாமல் வெறும் ஆரிய,பிராமண வெறுப்புக்களால் எதிர்கொள்வது காலம் கடந்த பெரியாரிய,அம்பேத்காரிய அரசியல் சரக்குகளாகும்.

இந்திய முழுச் சமூக அமைப்பும் சோசலிசத்துக்குள் வரும்வரை இந்திய சமூகக் கொடுமைகளை ஒரு போதும் முழுமையாக ஒழிக்கமுடியாது என்பதே இந்திய அரசியல் சமூகப் போக்குகள் திரும்பத்திரும்ப நிரூபிக்கும் விடயமாகும்.
 
இந்தியாவின் சகோதர மக்கள் பிரிவுகளிடையேயுள்ள அநீதிகள் முரண்பாடுகள் என்பன வர்க்க சமூக ஒழுங்குகட்குட்பட்டவை. சாதிகள் என்பன வர்க்க சமூகத்தின் வெளித்தோற்றமாகும். பல்வகையான தொழிற் பிரிவினைக்குட்பட்ட  உழைப்பாளர்களின் பிரிவாகும். சாதிகளை வர்க்க சமூகத்தின் அம்சமாகப் பார்க்க மறுத்தவர்களது மதிப்பீடுகள் இன்று பொய்த்துப் போய்விட்டன.

பிரிட்டிஸ் ஆட்சிக்காலத்தில் பிரிட்டனையன்றி உள்ளுரில் சொந்த தேச மக்களை ஆரியர்- திராவிடர் என்ற வரலாற்றுக் கற்பிதங்களுடன் இப்போக்குகள் இந்திய சுதந்திரத்தின் பின்பு, நாட்டுப் பிரிவினை வடக்கு, தெற்கு பேதம் ,வடவர்- தென்னவர் சார்ந்த தீராத சச்சரவுகட்கு இட்டுச் சென்றது.

 இவர்கள் ஏதோ ஒரு வகையில் மேற்குலக சக்திகளின் அரசியல் நிதிக் கட்டளைகட்கு உட்பட்டே செயற்பட்டனர். இந்தியாவின் முன்னேற்றமற்ற பழைய விவசாய சமூக அமைப்பில் உள்ளுரின் பிரச்னைகளைத் தீர்க்கமுடியவில்லை. பலவிதமான சமூகப் பிரிவுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கலகம் செய்ய வாய்ப்புகள் நிலவியது என்ற போதும் மறுபுறம் ,இந்திய மக்களின் பல வண்ணப் பண்புடைய போக்குகள் பகை மட்டுமே நிரம்பியவையாகக் காண்பிப்பது திராவிட – ஆரிய பிரிவினைவாத சக்திகட்கு அவசியமாக இருந்தது. இவை ஒரு தேசமாக பொதுப்பண்புகளை நோக்கி வளரத்தக்க வரலாற்றுக்கட்டத்தில் இருந்தன.

இன்று, வளர்ச்சியடைந்த எல்லா முதலாளித்துவ நாடுகளும் இத்தகைய பல இனக்குழுத்தன்மை வாய்ந்த வித்தியாசமான ஏற்றத்தாழ்வான போக்குகளிலிருந்து முன்னேறி வந்தவையே. ஆரியர் – திராவிடர் பல ஆயிரம் வருடங்களாக ஓயாது ,ஒழியாது போரிட்டனர் என்ற வரலாற்றுப் புனைவுகள் தான் " ஒருவரையொருவர் பழியெடுக்க முயலும் இந்த இரண்டு பிரிவுகட்கும் " ஆதாரமாகும் ;இந்தியாவின் சகல துன்புறும் மக்கள் பிரிவுகளும் ஒன்று சேராமல் இந்தச் சிந்தனைகள் பார்த்துக் கொண்டன என்ற அளவில் ,இவர்கள் முதலாளித்துவ அமைப்புக்கு சிறப்பான சேவை புரிந்தார்கள்.
 
இந்திய ஆரியக்கருத்துக் காவிகள் இந்தியாவுக்கு முதலாளிய வழயில் கூட ஒரு போதும் தேவைப்பட்டிராத யூத எதிர்ப்பைக் கொண்டிருந்ததுடன் ,கிட்லரையும் ஜெர்மனியப் பாசிசத்தையும் வெளிப்படையாகவே ஆதரித்தனர்.

தாம் ,ஐரோப்பிய ஆரியருடன் சேரும் ஒரே இனம் என்று நம்ப இவர்கள் கற்பிக்கப்பட்டு இருந்தனர். இவர்கள் திராவிட மற்றும் தலித்திய வெறுப்புக்களைக் கொண்டிருந்ததுடன் ஆரியரின் மதம் என்று தாம் கருதிய "இந்து மதம் " ஊடாகச் சகலரையும் அதனுள் உள்ளடக்கி விட முயன்றனர். இவர்களின் பொது அம்சமாக சோசலிச எதிர்ப்பு இருந்தது. இவர்கட்கு எதிர் நிலையில் செயற்பட்ட பெரியார்,அம்பேத்கார் போன்றவர்கள் தாம் சார்ந்த மக்களை சோசலிசத்தின் பக்கம் போகாமலும் ,பிரிட்டிஸ் மற்றும் ஏகாதிபத்திய எதிர்ப்பு வரை முன்னேறாமலும் பார்த்துக் கொண்டார்கள். இதற்கு, இவர்கள் ஆரிய எதிர்ப்பை இடதுசாரிச் சாயலுடன் வெளிப்படுத்தினர்.

இந்த இரு பிரிவும் பல நூறு மில்லியன் கணக்கான ஏழைகளாலும் உழைப்பாளர்களாலும் நிரம்பிய இந்திய மக்களை இணையவிடாமல் செய்தனர்.

மனிதப்பண்பாட்டு அம்சங்களை, உயர்வு தாழ்வு முறைகளை, தீவிரமாய் பேசியதின் ஊடாக மக்களின் பொருளாதார அம்சங்களை அதை வெல்வதற்கான வழிவகைகளைப் புறம் தள்ளிவிட்டனர். இன்று, தமிழ்நாட்டில் பெரியாரியம், தலித்தியம், பின் நவீனத்துவம், காந்தீயம், திராவிடம், இந்துமதம் பேசிய எல்லோருமே சுற்றிச்  சுற்றி மேற்குலக அரசியல், கருத்தியல், பொருளாதார ஆர்வம்கட்கு உட்பட்டவர்களே. பல தொகை மேற்குலக  NGO  க்கள் இவர்களுடன் உறவு கொண்டுள்ளமை இதற்கு வெளிப்படையான சான்று!; 1990 இன் தொடக்கத்தில் பெரியார், அம்பேத்கார், காந்தியம்,பின் நவீனத்துவம், தலித்தியம் பற்றி பெரும் தொகை ஆய்வுகள், நூல்கள் வெளிவந்தமையும், இதற்கான அமைப்புக்கள் புத்தமைக்கப்பட்டமையும், இடதுசாரி அமைப்புக்களின் இடத்துக்கு இவை பதிலாக நிறுவ முயற்சிக்கப்பட்டமையும் ஏதோ நினையாயப் பிரகாரமாக நடந்தேறவில்லை. உலகம் முழுவதும் மேற்குலகு சார்பான கருத்துக்கள் முன்னேறிக் கொண்டிருந்தபோதே இவை நடந்தன.
 
ஸ்டாலினிசக் கட்சிகளில் இருந்து வெளியேறிய அரசியல் உதிரிகள் இப்போக்குகளில் முன்னணியில் இருந்தனர். NGO நபர்களாக மாறுவதற்கான கல்வித்தகைமை, ஆங்கில மொழியறிவு நடுத்தவர்க்க சமூகப் பின்புலம் என்பன அவர்கட்கு தோதாக இருந்தது. இவர்கள் கலகக்காறர்களாகவும், கட்டுடைப்பாளர்களாகவும், புத்தமைப்பாளர்களாகவும் தோன்ற முயன்றனர்.

இவர்கள் உலக மயமாதலுள் நுழைந்த இந்திய முதலாளித்துவத்துக்கு ஏற்ற கருத்தியல் தயாரிப்பை வழங்க முயன்றனர். உலக மயமாதலில் நேரடியாகப் பயன் பெறத் தொடங்கிய புதிய சமூகப் பிரிவுகளின் பேச்சாளர்களாக மாறினர். இவர்கள் பெரியார், அம்பேத்கார், காந்தி போன்றவர்களை புனரமைத்தனர். புதிய வாதம்களால் நிரப்பினர் என்பது மறுபுறம் இந்தியா தழுவிய ஒரு புதிய முதலாளிய வளர்ச்சிக்கு எதிரான மேற்குலக நாடுகளின் விருப்பார்வமாகவும் இது இருந்தது. இந்தியாவில் மட்டுமல்ல பெருமளவு 3 ம் உலக நாடுகளில் பலவித சமூகக்குழுக்களை மேற்குலக நாடுகள் அரசியல் வாழ்வுக்கு கொண்டு வந்த சமயமாக அது இருந்தது. NGO க்களின் சகாப்தம் தொடங்கிய தருணம் அது தான். இவை இடதுசாரிகள், சமூக விடுதலை அமைப்புக்கள், கொரில்லா இயக்கம்களின் பலம்களையும் குறைக்க முயன்றன. அவர்களின் இடம்களைக் கைப்பற்றின.


 தமிழ்நாட்டில் தியாகு, திருமாவளவன், அ.மாக்ஸ்,ராமதாஸ், ரவிக்குமார் போன்ற ஸ்டாலினிசக் கட்சி மற்றும் மாவோயிச ஆயுதக்குழுக்களின் நபர்கள், சாதிய அமைப்புக்களை உருவாக்கியதுடன் இடதுசாரிச் சிந்தனைகளை ஆய்வதாய்த் தொடங்கி கடைசியாக மாக்சிய விரோதத்துக்கு வந்து சேர்ந்தனர்.




 1990 களில் மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த சீர்திருத்தவாத சோசலிச அரசியல் கருத்துக்களின் உதவியுடன் மாக்சியத்தை ஆராய முயன்ற இவர்கள் , இறுதியாக, நம்பிக்கையழிவுக்கும் இவர்களது குழுக்கள் பிரிந்து உடைந்து சிதறி தனிமனிதர்களாக காணாமல் போவதற்கும் வழியானது. 1990 தொடங்கி அதன் பத்தாண்டு முடிவு வரை புதிய எழுத்தியக்கம் படைத்தவர்களாகக் கருதப்பட்டவர்கள் இன்று, எந்தப் பயன்பாடுமற்றவர்களாக அரசியல் தனியன்களாக மாறிவிட்டனர். புகலிடங்களில் அரசியல் , இலக்கிய கலகங்களை மூட்டியவர்களாக தம்மை உரிமை கோரிக் கொண்ட இவர்கள் , இன்று, அம்பலமாகிவிட்டனர்.

இவர்கள் கைடேக்கர் ,நீட்சேயை மட்டுமல்ல மேற்குலக பாசிசத்தின் நவீன செமிட்டிக் எதிர்ப்பு வடிவம்களையும் தமிழ்நாட்டில் இறக்குமதி செய்து இருந்தனர்.

மாக்சியம் செமிட்டிக் பாதிப்புடைய சிந்தனை என்று குற்றம் சாட்டப்பட்டதுடன்  நீட்சேயின் பாசிசத் தோற்றக் காரணிகளை மறைத்து அவனைப் போற்றினர். பாசிச சிந்தனாவாதி மாட்டின் கை டேக்கர் கொண்டாடப்பட்டார். மாற்றாக ,ஜெயமோகன் போன்ற இந்துமதவாதிகள் இவர்களின் உதிரித் தகவல்களைச் சேகரித்துக் கொண்டு செமிட்டிக் மற்றும் மாக்சிய எதிர்ப்பும் பேசத் தொடங்கினர்.தமிழ் நாட்டில் பெரியாரியம் மற்றும் தலித்தியம் பேசியவர்கள் திராவிடர் சிந்தனைக்கு நெருக்கமானவர்களாக இருந்த போதும் மறுபுறம் மேற்கத்தைய ஆரிய மற்றும் பாசிச செமிட்டிக் எதிர்ப்புக் கருத்துக்களையும் பிற்காலத்தில் கொள்முதல் செய்து இருந்தனர் என்பது பெரும் முரண்பாடாகும்.
 
 
இன்று  திராவிடம், ஆரியம், காந்தியம் என்பன இந்தியப் பொது முதலாளிய வளர்ச்சியுள் நவீன மயமாகும் தொழிற்துறையுள் கலந்து உருகத் தொடங்கிவிட்டன. இவைக்கு எதிர்காலமில்லை. திராவிடம் என்பது தென்னிந்திய திராவிட மக்களை ஒன்றிணைப்பது என்று தொடங்கிப் பின்பு, தமிழ்நாட்டில் திராவிட இயக்கமாக, பெரியாரியமாகக் குறுகி இன்று, இவை பாராளுமன்ற வாதக் கட்சி அரசியலில் கூட வழக்கொழிந்து வருகின்றன.

திராவிட இயக்கம்கள் இன்று, இந்திய தேசியப் போக்குள் ஈர்க்கப்பட்டு கலந்துவிட்டன. தமிழ்நாட்டு திராவிட இயக்கவாதிகட்கு வெள்ளை மற்றும் கறுப்புத் திராவிடர்கள் இருப்பது தெரியாது. இவர்கள் இந்தியாவுக்கு வெளியல் உள்ள திராவிடராகக் கருதப்படுபவர்களை எண்ணுவதில்லை. செமிட்டிக் மற்றும் மங்கோலிய மக்கள் பிரிவுகளுடன் கூட திராவிடமொழிபேசும் மக்கள் பிரிவுகட்கு தொடர்புள்ளது என்பதால் ‘உலகத் திராவிடர்களே ஒன்றிணையுங்கள்’ என்றா இவர்கள் கேட்கமுடியும். திராவிடப் பெருமை என்பது ஆரியப் பாசிசச்  சிந்தனா முறைக்குச் சமமானதே. திராவிடர்கள் ஆரியரால் ஒடுக்கப்படுகின்றனர் என்ற கருத்து வரலாற்றின் அறியாக் காலத்துக்கு உரியதான ,சான்று தர முடியாத கருத்துக்களைப் பின் தொடர்வதாகும்.
 
 
‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற ஏகாதிபத்திய கருத்தியல் அப்படியே நாவலனால் எடுத்துக் கையாளப்படுகின்றது.

 இஸ்லாமிய மக்களுக்கு எதிரான மேற்குலக யுத்தத்திற்கு ‘இஸ்லாமிய அடிப்படைவாதம்’ என்ற தனிமைப்படுத்தும் அரசியல் சித்தாந்தம் பாவிக்கப்படுகின்றது.மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் அமெரிக்காவை எதிர்ப்பவர்கட்கு இப் பெயர் தரப்படுகின்றது. ஈராக்கிலும் ,ஆப்கானிஸ்தானிலும் ,ஈரானிலும் மேற்குலக அரசை எதிர்த்து போராடும் சக்திகட்கு இப்பெயர் இடப்படுகின்றது.

ஒரு அரசியல் போராட்டம், ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடைய இயக்கம் இப்படியாக மதவாத விளக்கம்களால் மட்டும் நிரப்பப்பட்டது. இஸ்லாம் எதிர்ப்பு இயக்கம் என்பது அரபு மக்கள் எதிர்ப்பு இயக்கம்களாகவும் இனவாத ஐரோப்பிய மேன்மை பேசும் அமைப்புக்களாகவும் இருந்தன.ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் புதிய நாசி இயக்கம்கள் இப்போ யூதர்களை விட இஸ்லாமையும் முழு முஸ்லிம்களையும் எதிர்ப்பவர்களாக மாறியுள்ளனர். ஆபிரிக்க,ஆசிய முஸ்லிம்கள் மதவெறி கொண்ட கீழ்நிலை மனிதர்களாக அழித்தொழிக்கப்பட வேண்டிய மக்கள் பிரிவாக மாற்றப்பட்டுள்ளனர்.

ஜெர்மனியில் அரசு மட்டுமல்ல புதியநாசி அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து நாடு தழுவிய "PROD" என்ற இஸ்லாமிய எதிர்ப்பு இயக்கத்தைத் தொடங்கியுள்ளனர். அன்றைய யூத எதிர்ப்பு இன்று இஸ்லாம் எதிர்ப்பாக மாறியுள்ளது. ஊடகம்களில் பெரும் தொகையான இஸ்லாம் எதிர்ப்புச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ள தினசரி புதிய ‘இஸ்லாம் மேலான விமர்சகர்கள்’ (Islamkritiker) தோன்றுகின்றார்கள். இணையத்தளம் முதல் பத்திரிகைகள் வரை முஸ்லிம்களைப் பயங்கரவாதிகள் தற்கொலைக் குண்டுதாரிகள், குழந்தைத் திருமணம், கட்டாயத் திருமண வழக்கம்களை உடையவர்கள் என்று உருவகிக்கின்றன. புதிய நாசி இணையத்தளம்களில் அரபுக்கள் பன்றிகளையொத்தவர்கள் என்று வர்ணிக்கப்படுகின்றார்கள். இஸ்லாமிய அடிப்படைவாதம் என்பது ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்துக்கு இடப்பட்ட பெயராகும்.
 
 
இதனுள் உலகின் பலநூறு மில்லியன் முஸ்லிம் மக்கள் இருக்கின்றார்கள்.

உலகில் நடைபெறும் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்களை எல்லாம் மதத்தின் பெயரால் அடையாளப்படுத்த முடியுமா?

புஸ் ஒரு கிறீஸ்தவ அடிப்படைவாதி என்று ஏன் கொள்ளப்படுவதில்லை?

ஐரோப்பியக் கூட்டமைப்பை ஒரு கிறீஸ்தவக் கூட்டமைப்பு என்று ஏற்றுக்கொள்ள முடியாதா?; பிரிட்டனின் அயர்லாந்து மேலான ஒடுக்குமுறையை புரட்டஸ்தாந்து, கத்தோலிக்கப் போராட்டமாக நாம் விளக்கமுடியாதா?

தலாய் லாமாவின் சிந்தனைகள் ஏன் பௌத்த மத அடிப்படைவாதமாய்க் கொள்ளப்படுவதில்லை? ; தமிழ், சிங்கள பிரச்னையை ஏன் பௌத்த, இந்துமத அடிப்படைவாதம்கட்கு இடையேயான போராட்டமாய் விளக்கப்படுவதில்லை?

ஒரு அரசியல் போராட்டத்தின் விளைவுகளே இன்று இஸ்லாமிய அடிப்படைவாதம் என்று மேற்கு நாடுகளால் பிரச்சாரப்படுத்தப்படுகின்றது. மதம் என்ற அளவில் கிறீஸ்தவம் இஸ்லாம், யூதநம்பிக்கை யாவுமே கிட்டத்தட்ட ஒரே மூலத்தில் பிறந்த ஒரே சாயல்படைத்த மதம்களாகும்.

மதம்கட்கு உள்ள பிற்போக்குத்தன்மை, மனித விரோதப் பண்புகள் எல்லா மதம்கட்கும் பொதுவானவை. பைபிள் புனிதமானது அதன் தழுவலாகப் பிறந்த ‘குர்ரான்’ கொடியது என்ற வகுத்தல்கள் மேற்குலக அரசியலின் படையலாகும்.

இஸ்லாமிய இயக்கம் வரலாற்றில் தீவிரத்தன்மை பெற்ற காலம்களை நாம் பார்த்தால் அது மேற்கு நாடுகளின் அரசியல்,இராணுவச் சதிகளின் விளைவாகவே இருந்தது. முதலாம் உலக யுத்த சமயத்தில் ஜெர்மனி,அரபு முஸ்லிம்கள் மத்தியில் பிரிட்டன் பிரான்சுக்கு எதிராக ‘புனித யுத்தம்’ எனப்படும் இஸ்லாமிய மதவாத அமைப்புக்களை உருவாக்கியது. அல்ஜீரிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிராக பிரான்சும் மேற்குநாடுகளும் அங்கு இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கினர்.
 
 
ஆப்கானில் சோவியத் யூனியனுக்கு எதிராகவும் பாலஸ்தீனத்தில் PLO வுக்கு எதிராக இஸ்ரேல்’ஹமாஸ்’ இயக்கத்தை தொடங்கியது. பாகிஸ்தான், காஸ்மீர்,சீனா, லிபியா ,முன்னாள் யூகோஸ்லாவியா எங்கும் மேற்குலக உளவுத்துறைகள் இஸ்லாமிய இயக்கம்களை உருவாக்கிpன. இவர்களே குரான் போதிக்கும் இஸ்லாமியப் பள்ளிகளையும் உருவாக்கினர். அப்படி எதிர்ப்புரட்சி சக்திகளான இஸ்லாமிய இயக்கம்கள் உலக மயமான பின்னர் மத்திய கிழக்கு எண்ணெய் வளம்கள் ஆசிய நாடுகளின் பொருளாதாரத்தோடு பிணைந்த பின்பே ஏகாதிபத்திய எதிர்ப்பு குணத்தைப் பெறுகின்றன.

இஸ்லாமிய இயக்கம்கள் என்பது ஆசிய,ஆபிரிக்க மக்களின் ஒரு பிரிவின் மேற்குலக எதிர்ப்பு இயக்கமாகும். 1990 முன்பு இந்த முஸ்லிம்அமைப்புக்ககள் அமெரிக்கக் கட்டுப்பாட்டுள் இருந்தன. கொம்யூனிச எதிர்ப்பும் உள்நாட்டில் ஜனநாயக எதிர்ப்பையும் சர்வாதிகார அரசியலையும் கொண்டிருந்தவையாகும். இன்று ஆசிய,ஆபிரிக்க எரிபொருள் வளம்களை காக்கும் இயக்கம்களாக உள்ளன. இந்த எழுச்சி தனி நாடுகளில் அல்ல ஒரு மில்லியாடனுக்கும் மேற்பட்ட மக்களின் இயக்கமாக உள்ளது. 3ம் உலக வளம்கள், தொழிற்துறை சார்ந்த போக்குகள் இதனால் பலமடைகின்றன. மேற்கு நாடுகள் எவ்வளவுக்கு கொடூரமான சக்திகளாகி மாறி யுத்தப் பயங்கரவாதம் செய்கின்றனவோ அந்த மட்டத்துக்கு இஸ்லாமிய இயக்கம்களும் கொடூரமாக மாறுகின்றன.

இஸ்லாமிய இயக்கம்கள் ஜனநாயகம், மனித உரிமைகள் என்பவற்றைக் கண்டறியாத 3ம் உலக சமூகம்களில் இருந்து உருவானவை என்பதால் இனக்குழுத்தன்மை வாய்ந்த தீவிரமான குணாதிசயம்களை வெளிப்படுத்துகின்றன. இப்பிராந்தியம்களில் தொழிற்துறை முன்னேற்றம் வளரும்போது இஸ்லாமிய இயக்கம்கள் பலமிழக்கத் தொடங்கும் மேற்குலக ஆதிக்கம்கள் முஸ்லிம் நாடுகள் மேல் குறையக் குறைய இந்த இயக்கம்கள் ஏனைய முதலாளிய ஜனநாயக அமைப்புக்கட்கும் தொழிலாளர் அமைப்புகட்கும் வழிவிடவேண்டிய வரும்.
 
 
இங்கு, நாவலன் இஸ்லாமிய அடிப்படைவாதம் பேசுகிறாரே ஒழிய கிறீஸ்தவ, பௌத்த,யூத அடிப்படைவாதம்களை அவர் பேசவில்லை.

ஏகாதிபத்தியம்களை எதிர்க்கும் அமைப்புக்களை அது தற்காலிமாக இருப்பினும் கூட நாம் ஏகாதிபத்தியம்களோடு ஒன்று சேர எதிர்க்கக்கூடாது. பலம் பொருந்திய பிரதான எதிரிக்கு எதிராய்ப் போராடும் எமது பலமற்ற எதிரிகளை எதிர்ப்பதென்பது மேற்குலக ஒடுக்குமுறையாளர்களை ஆதரிப்பதில் தான் கொண்டு போய் விடும்.

இஸ்லாமிய அடிப்படை வாதம் என்ற கருதுகோளே மேற்குலக பிரச்சாரகர்களாக மாறுவது தான். இஸ்லாமிய அடிப்படைவாதத்தைப் பேசும் நாவலன்  திபேத்திலும், பர்மாவிலும் உள்ள பௌத்த அடிப்படைவாதத்தைப் பேசவில்லை என்பது அவரது சிந்தனையொழுங்கு பற்றிய பிரச்னையாகின்றது.

தலாய்லாமா, பின்லாடன் இருவருக்கும் உள்ள ஒற்றுமை மத அடிப்படைவாதம் என்றால் பின்லாடனின் மதவாதம் ஏகாதிபத்திய எதிர்ப்புப் பண்புடையது என்பதுடன் மேற்குலக கூலியான தலாய் லாமாவை விட உயர்வானது.
                               
இங்கு, மிகவும் மேலோட்டமானதும் எளிமைப்படுத்தப்பட்ட சுலோகம்களில் அவர் சிக்கியுள்ளதைக் காண்கின்றோம். இந்தியா மிகவும் மந்த கதிபடைத்த உலகின் பழமையான விவசாயப் பண்புகளையும் ,உற்பத்தி வடிவம்களையும் கொண்ட நாடாகும்.

பிரிட்டனின் வரவு என்பது இந்திய நிலப்பிரபுத்துவக் கட்டமைப்பை முழுமையாக அழிக்கவில்லை. அது, மன்னர்களையும், ஜமீன்தார்களையும் கொண்டு அதை நிர்வகித்தது, மறுபுறம், பல நூறு மக்கள் பிரிவுகள், இனக்குழுக்கள், மொழி மற்றும் பிரதேசப் பிரிவுகள் உடைய மக்களை ஒரே இந்தியாவாக பிரிட்டிஸ் இணைத்தது. ஒரே விதமான சட்டம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், தெருக்கள், வாகனம், புகையிரதம் ஆகியவைகளைக் கொண்டு வந்தது. ஒரு மத்தியப்படுத்தப்பட்ட பலமான அரசை உருவாக்கியது. நாடு தழுவிய தொடர்பும் நாணயம், வரிமுறைகளையும் ஏற்படுத்தியது; ஒரு புறம் பிரிட்டன் இந்தியாவின் பழைமையை அழித்தது. மறுபுறம், புதியதாக சமூக,பொருளியல் நிலைகளை உருவாக்க அது கட்டாயப்படுத்தப்பட்டது.




"ஆக்கலும் அழிவும் "இணைந்தே நடந்தது. இந்தியாவில் பரவலாக நகரம்கள் உருவானது என்பது ஒரு குறிப்பிடத்தக்க தொழில் வளர்ச்சி வர்த்தகம் என்பன அல்லாமல் ஏற்பட்டிருக்கமுடியாது. இந்தியா கைப்பற்றப்பட்டுக் கொண்டிருந்தமைக்கு சற்று முன்பாகவே பிரிட்டனில் தொழில்புரட்சி ஏற்பட்டு இருந்தன. பிரிட்டனின் இளம் முதலாளியம் பெரும் பேராசையுடன் கொலனிகளைச் சூறையாடியது ,மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்தது.பிரிட்டனில் இருந்து உற்பத்திப் பொருட்களை இறக்கிக் கொலனிகளில் விற்றது.

இந்தியக் குடிசைக் கைத்தொழில் உட்பட சிறு தொழில்கள் இதனால் அழியத் தொடங்கியது. பிரிட்டனின் பெரும் துணி ஆலைகளைக் காக்க இந்தியாவில் பருத்தியைக் கொண்டு மிகச் சிறப்பாக நெய்யப்பட்ட மஸ்லின் துணிகளின் உற்பத்தியை அழிக்க இந்திய நெசவுத் தொழிலாளர்களின் பெருவிரல்கள் வெட்டுவது வரை பிரிட்டன் சென்றது. இந்தியத்  தொழிற்துறை வளர்ச்சியை பிரிட்டனால் தாமதிக்கச் செய்ய மட்டுமே முடிந்தது. ஒரு தொழிற்துறை வல்லமை பெற்ற நாடாக இந்தியா உருவாகத் தேவையான சமூகத் தயாரிப்பு, இந்தியர் என்ற தேசிய உருவாக்கம் என்பன பிரிட்டிஸ் காலத்திலேயே உருவாகின்றது.
 
 
இந்தியாவானது பிரிட்டிஸ் காலத்தில் அந்நிய மூலதனத்தால் நிரப்பப்பட்டது என்ற நாவலனின் விளக்கமானது அவரின் புரிதல் சார்ந்த குழப்பத்துக்கு அடையாளம், பிரிட்டன் இந்தியா உட்பட கொலனிகளைக் கொள்ளையிட்டே தனது சொந்த மூலதனத் திரட்டலையும் ,பிரிட்டிஸின் தேசியப் பொருளாதாரம், தொழிற்துறைகளைக் கட்டிக்கொண்டது.

மறுபுறம் ,இந்தியாவானது பிரிட்டிஸ்காலத்தில் தான் தொழில் மயமாக்கலுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. பிரிட்டன் இந்தியாவைக் கைப்பற்றாமல் இருந்திருந்தால் இந்தியா தொழில்மயமாக இன்னமும் நீண்டகாலம் தனது சொந்த வழியில் வளரவேண்டி வந்திருக்கும். முதலாம் இரண்டாம் உலக யுத்த சமயத்தில் பிரிட்டனில் பொருட்கள் உற்பத்தி செய்ய முடியாமையாலும் விலை அதிகமாக முடிந்தமையாலும் ,இந்தியாவிலும் பகுதியாக உற்பத்தி செய்தது. சில தொழிற்துறைகளை இந்தியாவுக்கு கொண்டு வந்தது. பிற்காலத்தில் மேற்கத்திய மூலதனம்கள் தேசிய எல்லைகளை மீறி வளரத் தொடங்கியபோது அவை இந்தியா உட்பட நம் உலக நாடுகளில் நுழைந்தன. ஆனால் ,இன்றைய உலக மயமாதலில் இந்திய மூலதனம் தனது தேசிய எல்லைகளையும் தாண்டிக்கொண்டு 3ம் உலக நாடுகளில் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பாவிலும் நுழைவதை நாவலன் காணவில்லை என்பது அவரது பிரதான குறைபாடாகும்.
 
 
இந்தியா, சீனா இரண்டும் 21ம் நூற்றாண்டுக்கான நாடுகள் என்று "Die Zeit" என்ற ஜெர்மனியப் பத்திரிகை எழுதுகின்றது.

உலக மக்கள் தொகையில் 35 வீதமானவர்கள் இப்பிராந்தியத்தில் வாழ்கின்றார்கள் என்பதுடன் உலகின் மிகப் பெரிய உழைப்பாளர்களின் நாடுகளாக இப்பிரதேசம்கள் மாறிவிட்டன.

ஆசிய அபிவிருத்தி வங்கியான "ADB" யின் தலைவர் Haruhiko Kuroda ஆசியாவுக்கான பொது நாணயம், வரித்தீர்வு என்பவை பற்றிப் பேசியுள்ளார். ஜப்பானிய Yen சீன Yuan தென்கொரிய Won , இந்திய ரூபாய் இவைகட்கு மாற்றான நாணயமொன்றைக் கொண்டு வரத்திட்டம் உள்ளது. உலகவங்கி, சர்வதேச நாணய வங்கி இவை ஆசியப் பிராந்தியத்தில் மட்டுமல்ல முழு 3ம் உலக நாடுகளிலும் சக்தியிழந்துவிட்டது.

இலங்கை, பாகிஸ்தான், வங்காளதேசம், பூட்டான், நேபாளம், மாலைதீவு ஆகிய பகுதிகளில் மட்டுப்பட்டுக் கிடந்த இந்தியா இப்போ இந்தியத்துணைக்கண்ட எல்லைகளைக் கடந்து வெளியேறி உலகு தழுவிய சந்தை, மூலதனமிடல், தொழிற்துறைகளில் மேற்குலக நாடுகளின் பிரதான போட்டி நாடாகிவிட்டது. இந்தியா, பிறேசில், தென் ஆபிரிக்கா என்பன கூட்டாக "IBSA" என்ற சுதந்திர வர்த்தக வலயத்திட்டத்தை உருவாக்கியுள்ளன.பிறேசிலுடன் கூட்டாக "Icone" என்ற ஆய்வுத்திட்டத்தை தொடங்கியுள்ளது. உயிரணுத் தொழிநுட்பம், விண்வெளி ஆய்வு மற்றும் விமானத் தயாரிப்பு தொழிநுட்பம், அணுத்தொழில்துறை, மருந்துப் பொருட்கள் தயாரிப்பில் இவர்கள் ஆய்வு மற்றும் தயாரிப்புக்களில் ஈடுபட்டுள்ளன. இந்திய மருந்துப்பொருள் தயாரிப்பு நிறுவனமான Ranbaxy பிறேசில் முதல் தென் ஆபிரிக்காக வரை நுழைந்துள்ளமையால் பாரம்பரியமான ஜெர்மனிய பிரிட்டிஸ் மருந்துப் பொருள் தயாரிப்பு நிறுவனம்கள் தமது சந்தைகளைப் பறி கொடுத்துள்ளன. மேற்குலகின் உயர்ந்த உற்பத்திச் செலவு அதிகவிலைகளுடன் உலக சந்தைகளில் இந்தியா, சீனா, பிறேசில் போன்ற நாடுகளுடன் மேற்கு நாடுகள் போட்டியிட முடியவில்லை.
 
 
பிரிட்டனிடமிருந்து Ford நிறுவனத்தால் வாங்கப்பட்ட Jaguar ,land rover ஆகியவைகளை இந்திய Tata motors வாங்குகின்றது.இதேபோல் tata நிறுவனத்தின் துணை நிறுவனமான Tata steels பிரிட்டிஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகளின் உருக்கு இரும்புத் தயாரிப்பு நிறுவனமான Corus ஐ வாங்கியதன் மூலம்[ Corus war ein niederländisch-britisches Unternehmen, das Stahl und Aluminium produzierte und 2007 von der indischen Tata Steel übernommen wurde. Seit dem 27. Oktober 2010 firmiert Corus als Tata Steel Europe (formerly Corus)  http://de.wikipedia.org/wiki/Corus  ] உலகின் 5 வது பெரிய இரும்பு உருக்கு நிறுவனமாக மாறியுள்ளது. இதே நிறுவனம் சிங்கப்பூரின Natsteel தாய்லாந்தின்  Millenium steel ஐ வாங்கியுள்ளது. இதன் மூலம் இத்தாலியின் Riva ஜெர்மனியின் Thyssen Krupp ஆகிய இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனங்களை முறையே 9 வது மற்றும் 10 வது இடத்துக்குத் தள்ளியுள்ளது.

மற்றொரு இந்தியரின் நிறுவனமான Lakshmi Mittal தான் உலகின் மிகப் பெரும் இரும்பு உருக்கு தயாரிப்பு நிறுவனமாகும். இது அமெரிக்காவின் "Nucor"மற்றும் "USS" விடப் பெரியதாகும். லுக்சம்பேர்க்கின் "Arcelor" ஐ 2005 இல் 26 மில்லியாடன் டொலருக்கு வாங்கியதின் மூலம் [  Arcelor S.A. war bis 2006 der weltweit zweitgrößte Stahlproduzent. 2006 wurde Arcelor von dem Konkurrenten Mittal Steel Company übernommen und 2007 zu ArcelorMittal fusioniert.Am 25. Juni stimmte das Arcelor-Management einem nochmals erhöhtem Angebot von Mittal Steel in Höhe von 25,4 Milliarden Euro zu; aus Mittal und Arcelor wurde nun Arcelor Mittal, der mit Abstand weltgrößte Stahlproduzent. Arcelor Mittal wird anstelle Arcelor im Finanzindex CAC40 ab November 2006 gelistet.Das Unternehmen verfügt über rund 60 Werke in mehr als zwei Dutzend Staaten und beschäftigt rund 310.000 Mitarbeiter. Für das Jahr 2007 war ein EBITDA von 19,4 Mrd. US-Dollar angekündigt. Damit ist ArcelorMittal vor Thyssen-Krupp und der spanischen Acerinox der größte Stahlproduzent der Welt (2009 produzierte es 73,2 Mio. t Rohstahl)[2] und einer der weltweit führenden multinationalen Konzerne, 2008 auf Platz 28 der Fortune 500. http://de.wikipedia.org/wiki/Arcelor ]இது சீனா முதல் மேற்கு நாடுகள் வரை ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் ஆகிவிட்டது.

பிரிட்டன், இந்தோனேசியா,ரூமேனியா, கசகஸ்தான் உட்பட பல நாடுகளில் தொழிற்சாலைகளைக் கொண்டுள்ளது. இந்த இந்து முதலாளி[Lakshmi Mittal_ http://de.wikipedia.org/wiki/Lakshmi_Mittal  ] ரூமேனியத் தொழிலாளர்கட்கு கிறீஸ்தவ தேவாலயம் இலவசமாய்க் கட்டித் தருகின்றான். பிரிட்டிஸ் தொழிற்கட்சிக்கு நிதி தருகின்றான். Lakshmi Mittal க்குப் போட்டியாக வந்த மற்றைய இந்திய நிறுவனமான Tata இப்போ உலகில் 50 நாடுகளில் 96 நிறுவனம்களைக் கொண்டுள்ளது. இதில் 250.000. தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். இரும்பு, இயந்திரத் தொழில், இரசாயனம், நுகர்பொருள், எரிபொருள்,தொலைத்தொடர்பு, உட்பட பலதுறைகளில் இது உள்ளது. இத்தாலிய Fiat , ஸ்பெயினின் ; Hispano Carrocera ஆகிய வாகனத் தயாரிப்பு நிறுவனம்களில் Tata நிறுவனம் பங்குகளை வாங்கியுள்ளது. இது Tata Motors,Tata steel , Tata consultancy எனப் பல துணை நிறுவனம்களைக் கொண்டுள்ளது. Tata CTS தான் ஆசியாவிலேயே மிகப் பெரிய software தயாரிப்பு நிறுவனமாகும்.

இந்தியா தனது உற்பத்தியில் 40 வீதத்தை வெளிநாடுகட்கு ஏற்றுமதி செய்கிறது. இந்தியாவின் சீனாவுக்கான ஏற்றுமதி கடந்த 5 வருடத்தில் 12மடங்காக அதிகரித்துள்ளது. சீனாவின் Dong Fang,Changchun ,FAW , போன்ற வாகனத் தயாரிப்பு போலவே இந்திய Ashok Leyland ,Tata பெரிய வாகனத் தயாரிப்பில்         [ கனரக ] இறங்கிவிட்டது. இந்தியத் கைத்தொலைபேசி நிறுவனமான Bahatri தென் ஆபிரிக்க கைத் தொலைபேசி நிறுவனமான MTN ஐ 62 மில்லியன் வாடிக்கையாளருடன் வாங்கியுள்ளது.
 
 
இந்திய "HAL" நிறுவனம் அமெரிக்காவின் "Bell" கெலிகொப்டர் உற்பத்தி நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் "Bell Texto407 " என்ற புதிய நவீன கெலிகளைத் தயாரிக்க உள்ளது. இதே சமயம் ஐரோப்பிய, "EADS"வுடன் இணைந்து இந்தியாவில் "Eurocopter" என்ற கெலிகொப்டர்களை தயாரிக்க ஒப்பந்தமாகியுள்ளது. பிரான்சின்  Renault வாகனத் தயாரிப்பு நிறுவனம் இந்திய, M&M நிறுவனத்துடன் கூட்டாக வாகனத் தயாரிப்புத் திட்டம்.ஜெர்மனிய VW,BMW, கார்த்தயாரிப்பு நிறுவனம்கள் இந்தியாவுள் நுழைவு. இந்தியாவானது உலகில் சீனாவுக்கு அடுத்து உலகின் மிகப் பெரிய தொழிலாளர்களைக் கொண்ட நாடாக வளர்கின்றது. நவீன முதலாளியம் வளர்கின்றது என்றால் அதன் எதிர் விளைவாக தொழிற்துறைப் பாட்டாளி வர்க்கமும் இந்தியாவுள் உருவாகி வருகின்றது. 2010 ஆம் ஆண்டில் சீனாவில் 109 மில்லியன் தொழிற்துறைப் பாட்டாளிகள் இருப்பர் என்றால் இந்தியாவில் அது 80 மில்லியனாக இருக்கும் என்று மதிப்பீடுகள் காட்டுகின்றன.

இந்தியாவில் சிறு தொழில் சிறு உற்பத்தி அழிகின்றது என்றால் பெரும் தொழிற்துறைக்கு வழிவிடவே இது நடைபெறுகின்றது. சிறுவிவசாயி, சிறு உற்பத்தியாளன், சிறுவர்த்தகர், சிறுகைத்தொழில் என்பன அழிபட்டே தீரும். சிறுவிவசாயிகள் நெசவாளர்கள் தற்கொலை செய்வது நடைபெறுகின்றது. இது முதலாளிய வளர்ச்சிப் போக்கின் விதியாகும். முன்பு வளர்ந்த மேற்கு நாடுகளிலும் இத்தகையவை நடந்தன. இறுதியாகச் சோசலிசம் வந்து முழு மக்களையும் விடுதலை செய்யும் வரை வர்க்க சமுதாயக் கட்டமைப்பைத் தகர்க்கும் வரை இந்த மனித அநீதிகளை நிறுத்த மார்க்கமில்லை.


நாவலன் ஏனைய சமகால தமிழ்ப் பரப்பு சீர்திருத்தவாதப் போக்காளர்களைப் போலவே உலக மயமாக்கலுக்கு முந்திய மதிப்புக்களில் பின் தங்கிவிட்டார்.

ஐரோப்பிய மையவாதப் போக்குகள் மேற்குலகே இன்னமும் 3ம் உலக நாடுகளைக் கட்டியவிழ்ப்பதான பழைய கருத்துக்களில் உறைந்து போயுள்ளனர். இன்றைய மேற்குலக வங்கி மற்றும் பெரு நிறுவனங்கள் சந்திக்கும் நெருக்கடிகள் 3ம் உலக நாடுகளையும் பின் தொடர்கின்றது. மேற்கு                            ஐரோப்பிய நாடுககும் ,ஐரோப்பாவும் தமது உலகார்ந்த முதன்மையிடத்தை இழந்து விட்டன. இந்த நாடுகளில் தொழிலாளர்களின் எழுச்சி, மக்கள் கிளர்ச்சிகட்கான காலம் அரும்பத் தொடங்கிவிட்டது. அதைக் காண நாம் அனைவரும் கட்டாயம் உயிருடன் இருப்போம். தமிழ்த் தேசியம் ,தமிழ்ஈழம் சமஸ்டி என்ற சகல வரலாறு கைவிட்ட போக்குகளை முழுமையாகத்  தலை முழுகவும் ,வாழும் புகலிட நாடுகளின் மக்கள் கிளர்ச்சிகள், சோசலிசத்துக்கான உழைக்கும் மக்களின் முழக்கம்களில் கலக்கவும் காலம் கட்டளையிடும். இது தவிர்க்கமுடியாமல் நடக்கும் தப்ப முடியாமல் நாம் முகம் கொடுப்போம்.
 
தொடரும்...

தமிழரசன்
பெர்லின்