Donnerstag, Januar 11, 2007

யுத்தமும்,கவிஞர் மேத்தாவும்.






யுத்தமும்,கவிஞர் மேத்தாவும்.


பலருக்கு மேத்தா ஒரு கவிஞர்.உண்மையில் மேத்தா கவிஞர்தானா?
இந்தக் கேள்வி மிகவும் சுவாரஸ்யமானது.ஏனென்றால் மேத்தா எழுதியதெல்லாம் வெறும் வசனங்களே.அவை கவிதைக் குரிய எந்த அழகையும் கொண்டிக்ருக்கவில்லை.ஏனெனில் அவர் யுத்தத்தை எதிர்க்கிற கவிதையெல்லாம் எழுதிப்போட்டார்!

கூடாதே,இது கூடாதே!!


ஒரு நாடு,
ஒரு மக்களினம்
தனது இறைமைக்காகச் செய்யும் யுத்தம் மிகவும் அழகானது.
கொட்டும் குருதியெல்லாம்
வீரத்தின் விளை நிலத்தில்
மறப்பயிர்களை விளைவிக்கும்.


குருதி சிந்துதே,
குழந்தைகள் சாகிறார்களே,
அப்பாவிகள் அழிகிறார்களே என்று பார்த்தால்
யுத்தம் தீர்வைத் தராது.
மாறாய் பின்னடைவைத் தரும்.

மக்கள் அழிவது தவிர்க்க முடியாது!
மக்கள் பசித்திருப்பது சாதரணமானது.
அகதி முகாம் வாழ்வு வந்துவிட்டால் என்ன?

நாளை விடியப் போகும் ஈழத்தில் இருக்கிறது உங்கள் நிம்மதி!

இல்லையா?



எங்கள் தலைவரிடம் மீளவும் போவோம்.


தேசியத் தலைவர் கூறுகிறார்:"..............................."இப்படி.இதன் அர்த்தம்,பேசாதே!என்பதாகும்.எதற்கும் அடிதான் மருந்து.

ஆனால் மேத்தாவின் பலவீனமே வெறும் வசனங்களாக வருகிறது.

பாருங்கள் அவருடைய கவிதைப் போர்மூலாவை:

"புயலை உருவாக்கும்
வல்லமை படைத்தவர்கள்
ஆனால்
தம்முடைய வாழ்வில் ஒரு
காற்று வீசாதா என்றுதான்
காத்திருக்கிறார்கள்.

இமயத்தையும் தாங்கவும்
வலிமை கொண்டவர்கள்
ஆனால் அவர்களுடைய
சொந்த
இதயம் கனப்பதைத்தான்
அவர்களால்
தாங்கிக் கொள்ள
இயலவில்லை...."


இதை இப்படி எழுதினால் என்ன வரும்?


"புயலை உருவாக்கும் வல்லமை படைத்தவர்கள் ஆனால் தம்முடைய வாழ்வில் ஒரு காற்று வீசாதா என்றுதான் காத்திருக்கிறார்கள்."


"இமயத்தையும் தாங்கவும் வலிமை கொண்டவர்கள்,ஆனால் அவர்களுடைய சொந்த இதயம் கனப்பதைத்தான் அவர்களால் தாங்கிக் கொள்ள இயலவில்லை."


புதுக்கவிதை என்றொரு பாசாங்கில் மேத்தா எழுதிய வசனங்களையேதான் இன்று நாம் பார்க்கிறோம்.


கவிதையென்பது வாசிக்கும் பொழுது நெத்திப் பொட்டில் அடிக்க வேண்டும்.உணர்வைச் சிதைத்து மீளவும் கலைத்து ஒருங்கு படுத்த வேண்டும்.இஃதில்லாக் கவிதை கவிதைதானா?

இதோ ஒரு கவிதை:

"மண்ணில் எங்கள் மைந்தனாய்
மலர்ந்திட்ட இளையவன்-மலரவன்
அண்ணர் மூவரின் அரும் பெரும்
ஆருயிர்ச் சோதரனாகியவன்.

குலம் விளங்க மலர்ந்தவன்
குடும்பத்தின் ஒளி விளக்கானான்
பாசத்தை உணர்த்திய பாலகன்-இவன்
பண்பினால் பலரைக் கவர்ந்தவன்.

"......................"

இலட்சியப் பயணங்கள் மேற்கொண்டு
பசீலனை இயக்கிடும் பணி செய்தான்

"..................."

இடை வழியில் அவனை இழந்திட்டோம்
இராணுவ வேலியை அழித்திடவே
இளம் வேங்கையவன் வேட்கை கொண்டதனால்
களத்தில் காவியம் படைத்திட்டான்.

"..................."

"????????????????????"
"............................."

-கப்டன் மலரவனின் பெற்றோர்.




இதை எழுதினது எங்கட தேசத்துப் பெற்றோர்!
தங்கட மகன் புலியில இருந்து,
இராணுவ முகாம் தகர்க்கப் புறப்பட்டு இறந்தபோது,
இப்படி மகிழ்வோடு பாடுகிறார்கள்.
யுத்தம் அவர்களுக்கு மகிழ்ச்சியானது.
தாம் பெற்ற மகனே களத்தில் பலியாகியதும்,
போரடிக் கொண்டே ஒரு நாவலையும் எழுதி-"போர் உலா"ப் போன மலரவன் பெற்றோரால்
மகிழ்வோடு பாடையில் அனுப்பப்பட்டபோது,உந்தக் கோதாரிபிடிச்ச மேத்தாவுக்கு யுத்தம் பற்றியென்ன தெரியும்?


ஆனால் மேத்தா நான் வாழும் காலத்துக்குரிய கவிஞனே அல்ல.



மலரவன் யுத்தத்தில் செத்ததால்
ஈழ அன்னையின் கருவில் கிடந்து துடிக்கிறான்!
நாளை மலரப் போகும்
தமிழீழத்தில் அவன் தவழும் பொழுதுகளில்
தமிழ்த் தாய் அகம் மலர்வாள்.
எனவே,
காலத்தில் வாழும் அவன் கவிதையாகி நிற்பது வேறு...


மேத்தாவுக்கு ஏதோ புலம்பத் தெரியுது.


யுத்தம் இல்லாத பொழுதும் ஒரு பொழுதா?
அடிமை வாழ்வுக்கு யுத்தம் அவசியமில்லை.
நாம் ஈழத்தின் விடியலுக்காகப் போராடும் நெருப்பு மனிதர்கள்.

யுத்தம் நாம் ஆடும் விளையாட்டு,
வெடிச் சத்தம் நாம் கேட்கும் தாலாட்டு,
புலிகளின் படை கண்டால் புயலாய் ஓடுவார்கள் உலகத்து இராணுவங்கள்!
நாங்கள் போரிட்டால் அமெரிக்காக நடுங்கிச் சாகும்!,
இந்தியா இடறி விழும்-இடிந்து ஓய்ந்துவிடும்!



இதுகூடத் தெரியாத மேத்தா!-இப்படி எழுதுகிறார்:



போரும் சமாதானமும்:

"சமாதானம்-
வீட்டில் எரியும்
அடுப்பின் நெருப்பு.

யுத்தமோ
கூரையை எரித்துக்
கொளுத்தும் வெறுப்பு.

சமாதானக் காலத்தில்
மங்கை
மலர்களைச் சேகரிப்பாள்-
கொண்டவன் நினைவில்
கூந்தலில் சூட!

யுத்த காலத்தில்
தாய்
தலைகளைத் தேடுவாள்
கூந்தலில் சூடிய
மலர்களைக் கழற்றிட

சமாதான நாட்களில்
மணச் செய்தி
பத்திரிகையாய் வரும்

யுத்த நாட்களிலோ
பத்திரிகைகள் வரும்
மரணச் செய்திகளாய்.

சமாதானக் காலங்களில்
ப+க்களைப் பார்த்து நாம்
புன்னகை புரியலாம்

போர்க் காலங்களிலோ
பிணங்களோடுதான் பேசமுடியும்!"

-மேத்தா.


கிறுக்குத் தனமாக எழுதுவதெல்லாம் ஒரு எழுத்தா?

யுத்தம் இல்லாமல் விடிவு வருமா?


இப்போது ஈழத்தை எடுத்தால் யுத்தம் தவிர்க்க முடியாது.


யுத்தத்தால் தான் தீர்வு வரும்.


தீர்வே யுத்தமாக இருக்கும் போது,மேத்தா யுத்தம் பற்றி அறிந்தது அவ்வளவுதான்.


எங்கட தேசியத் தலைவர் செய்கிற ஒவ்வொரு செயலிலுமே யுத்தத்தின் நெடில் இருந்தே தீரும்!-அது அவரது மிகக் கடுமையான சிந்தனையில இருந்து வரும் அதியுச்ச எண்ணங்களாகும்.

இப்படி யுத்தமே தீர்வாக இருக்கும்போது சமாதானம் என்பது வெறும் பொய்யானது-போலியானது.


தமிழருக்குத் தேசம் வேண்டுவதுபோல எல்லாருக்கும் வேணும்.


மேத்தாவுக்கு யுத்தம் பற்றியே ஒழுங்காகத் தெரியாமல் போலிக்கு எழுதுவது சரியில்லை.
எங்கள் தேசியத் தலைவரிடம் கேட்டு விசாரித்தாவது எழுதியிருக்கலாம்.


யுத்தம் அழகானது!
அற்புதமானது
.யுத்தத்தால் நாடு உருவாகும் ஈழம்போல.
யுத்தத்தால் ஒரு இனமே அழிந்தாலும்
ஒரு தேசம் அவர்களுக்காக மலர்ந்தே தீரும்.



இதுதான் யுத்த்தம் பற்றிய தேசியத் தலைவரின் தீட்சன்யமான பார்வையும் கூட.







1 Kommentar:

Anonym hat gesagt…

//யுத்தம் அழகானது!
அற்புதமானது
.யுத்தத்தால் நாடு உருவாகும் ஈழம்போல.
யுத்தத்தால் ஒரு இனமே அழிந்தாலும்
ஒரு தேசம் அவர்களுக்காக மலர்ந்தே தீரும்.



இதுதான் யுத்த்தம் பற்றிய தேசியத் தலைவரின் தீட்சன்யமான பார்வையும் கூட.//

:-))))