Samstag, Februar 02, 2013

தமிழருக்குச் சுய நிர்ணயவுரிமை அவசியமில்லை...!

தமிழ்பேசும் மக்களது சுய நிர்ணயத்தை மறுப்பதென்பது இலங்கையில் "இனவொடுக்குமுறை, இனவழிப்பு நிகழவில்லை" என்பதன் மறுபக்கமாகும்!


ன்று, முன்னிலை சோசலிசக்கட்சியோ அன்றித் தமிழர்களது நிலத்து-புலத்து இயக்கவாதச் சக்திகளோ எந்தப் பொழுதிலும் இலங்கை மக்களின் பிரச்சனைகளிலிருந்து தமது போராட்டப் பாதையைத் தீர்மானிக்கவில்லை.உதாரணமாகச் சிங்கள இனவாத ஒடுக்குமுறைக்குள் இன்னல் படும் தமிழ்பேசும் மக்களது பிரதான முரண்பாடு சிங்களப் பேரினவொடுக்குமுறையாகும்.அதையொட்டிய இராணுவ ஆட்சியாகும்.


இதன் தெரிவில் சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரச ஜந்திரமும் பிரதான எதிரியாகவும்,சிங்கள மக்கள் மத்தியிலுள்ள இட்டுக் கட்டப்பட்ட  பௌத மாதவாதத்தோடான சிங்களத் தேசியப் பெருமிதமும் அதன் வழியான தமிழ்பேசும் மக்கள்மீதான சிங்களப் பாட்டாளிகளது உளவியற்றாக்குதலும்,இனப்பழிப்பும்-ஒதுக்குதலும்கூடிய பண்பாட்டு ஒடுக்குமுறையும் இரண்டாவது பெரும் முரணாகவும்,எதிரியாகவும் இருக்கிறது[Die nationale Selbstbestimmung ist eine Grundformel der Demokratie für unterdrückte Nationen. Dort, wo die Klassen – oder die ständische Unterdrückung durch nationale Unterdrückung verkompliziert wird, nehmen die Forderungen der Demokratie vor allem die Form der nationalen Gleichberechtigung, der Autonomie oder der selbständigen Existenz an./Das Recht der nationalen Selbstbestimmung und die proletarische Revolution. By Leo Trotzki  ].தமிழ்பேசும் மக்களின் விடுதலைக்காக, மக்களின் வெகுஜனப் போராட்டத்தால் மக்களே போராட்ட அணியாக மாறிவிடுவதைத் தடுப்பதில் இவர்கள் கணிசமான வியூகத்தைச் செய்கின்றனர்.தமிழ்-சிங்கள இனத்துக்குள் முகிழ்க்கும் புதியவகை மாதிரியான இடதுசாரிய வேடம் பூண்ட எதிர்ப் புரட்சிகரச் சக்திகள் "சுய நிர்ணயவுரிமையைச் சிறுபான்மை இனங்களுக்கு மறுப்பதன்வழி" தமது இலக்கைச் சரியகவே நிலவும் ஒடுக்குமுறை அரச ஜந்திரத்தின் வியூகத்துக்கமையவும்(Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd.   ), அதன்அரசியல் ஆதிக்கத்தை நிலைப்படுத்தவும் அதிகார அமைப்புகளோடிணைத்துள்ளனர்.


இதன் மத்தியில், புலம் பெயர் தமிழர்களின் "புரட்சிகர"முகாங்கள்அன்னிய நலன்களின் அற்ப சலுகைகளுக்காக அவர்களால் தோற்றுவிக்கப்பட்டபொரு லொபிக் குழுவென்பதற்கு இன்றைய பற்பல நிகழ்வுகள் சாட்சியாகின்றன.இதுவரை தமிழ் இயக்கவாதக் குழுக்காளால் செய்யப்பட்ட-மேற்கொள்ளப்பட்ட போராட்ட முன்னெடுப்புகள் யாவும் மக்களின் அழிவை மேன்மேலும் வலுப்படுத்தியதேயொழிய மாறாக, விடுதலையை அல்ல!இது எந்தவொரு விடுதலை அமைப்புக்குள்ளும் நிகழாத எதிர்மறை நிலையாகும்.


இப்போது,புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் சுயநிர்ணய உரிமையைச் சிந்தாந்தவுரையாடாலாகக் குறுக்கித் தாழ்க்கும் இவர்கள் சிங்களப் பேரினவாதவொடுக்குமுறையை திரைமறைவில் மறைத்து அதன் பிரதான பாத்திரத்தை இல்லையென்கின்றனர்.


வெறுஞ் சிந்தாந்தவுரையாடலாகத் தமிழ்பேசும் மக்களது உரிமையையும் ,சிங்களப் பேரினவாதவொடுக்குமுறைக்கெதிரான தமிழ்பேசும் மக்களது எதிர்ப்பு அரசியலையும் குறுக்கிவிடும் "சித்தாந்தச் சதியானது மிகவும் வரலாற்றுத் திரிபுக்குள்  மக்களைக் கட்டிப்போடுகிறது"[ Das Zimmerwalder Manifest .By Leo Trotzki  ].





இதன் அடுத்த நகர்வுக்குள், சிங்களப் பேரினவாத ஒடுக்குமுறையொன்றே இலங்கையில் இல்லையென்றும்,அது தமிழ்பேசும் மக்களுக்குள் இருக்கும் இனவாதத்தின் திரிப்பே என்று தத்துவமுரைக்கும் நிலைக்கு முன்னிலைச் சோசலிச அமைப்புக்குக் கூஜாத் தூக்கும் இரயாகரன் குழுவிலிருந்து ஏனையவர்களும் வகுப்பெடுப்பார்கள்.


தமிழ் மக்கள் ஏதோ சுயநிர்ணயவுரிமையை வலிந்து கேட்பதாகவும்,அது தமிழ்க் குறுந்தேசிய வாதிகளது கயமையெனவும் இட்டுக்கட்டும் நிலைக்கு இரயாகரன் குழு இப்பேதே தயாராகிவிட்டது.


தமிழ்பேசும் மக்களது இயல்பு வாழ்வுக்குள்ளும்,பொருளாதாரத் துய்புக்குள்ளும் சிங்கள ஆளும் வர்க்கத்தின் திமிரைக் கட்டவிழ்த்துவிடும் சிங்கள இனத்தின் பாசிச வன்முறைசார்-கருத்தியல்சார் ஒடுக்குமுறையே பிராதான முரண்பாடாகவிருக்கிறது. இதுமேலும் இனங்களுக்கிடையில் இனவாத முரண்பாடாகி அரச ஆதிக்கமும்-உரிமையுமுடைய சிங்களப் பாட்டாளிகளையும் ஆட்டிப்படைக்கும்போது நம் மக்களின் பிராதான முரண்பாடு சிங்களப் பேரினவாத வொடுக்குமுறையே.இந்தவொடுக்குமுறையானது வெறுமனவே சிங்கள ஆளும் வர்க்கத்தால் மட்டும் தூண்டப்படுவதில்லை.இதற்குள் வரலாற்று ஐதீக மனமும்-பெருமிதக் கனவும் சரிசமனமாகச் சிங்கள இனத்தை ஆட்டிப்படைக்கின்றதென்பதால் பெரும் பகுதிச் சிங்கள மக்களது ஒத்துழைப்புடனேதாம் சிங்கள ஆளும் வர்க்கம் தமிழ்பேசும் மக்களை வேட்டையாடுகிறது.இதிலிருந்து தப்புவதற்குத் தமிழ் பேசும் மக்களக்குள்ள ஒரே அரசியல் ஆயுதம் சுய நிர்ணயவுரிமைக்கான தொடர் கோரிக்கையும் [Die Entwicklung des Selbstbestimmungsrechts der Völker unter besonderer Berücksichtigung seines innerstaatlich-demokratischen Aspekts und seiner Bedeutung für den Minderheitenschutz.By Denise Brühl-Mose  ]அது சார்ந்த வெகுஜனப் போராட்டமுமே!இதைத் தடுப்பவர்கள் சிங்களப் பேரினவாதத்தை மூடி முறைத்து இலங்கையின் ஆளும் வர்கத்துக்குத் துணை போபோகின்றவர்களாக மாறுகிறார்கள்-மாற்றப்படுகிறார்கள்.இதைத்தாம் முன்னிலைச் சோசலிசக் கட்சியை ஆதரிப்பதன் போக்கில் நாம் பலமாக வரையறுக்க வேண்டும்.


இதுசார்ந்து, சட்டரீதியாகத் தமிழ்பேசும் மக்களை இனவொடுக்குமுறைக்குள்ளும்-அழிப்புக்குள்ளும் வைத்தொடுக்கும் அரசும் அதன் பொருளாதாரப் பொறிமுறையும்தாம் நமது மக்களது சுயநிர்ணயக் கோரிக்கைக்கான தோற்றுவாயாகும் [Nur wenn der Staat die nach Autonomie oder gar einen eigenen Staat strebende Minderheit durch seine Herrschaftsausübung diskriminiert, kann er seinen Anspruch auf territoriale Integrität nach dem gegenwärtigen Völkerrecht verwirken..So z. B. Ipsen u. a., Völkerrecht, S. 368  ].இதை மறுத்தொதுக்கும் முன்னிலைச் சோசலிசக்கட்சியாகட்டும் அல்லது அவர்களது தாய்க் கட்சியான ஜே.வி.பீ. ஆகட்டும் இவர்கள் அனைவருமே சிங்களப் பேரினவாத ஓட்டுக் கட்சிகளது தெரிவின் வழியே நமது மக்கள் மீதான இனவொடுக்குமுறையை அரசியல் ரீதியாகச் சரியென்றும், சட்டரீதியாக அறமென்றும்-பௌத்த ஆசாரத்தின்படி பெரும்பகுதி மக்களது உயர்ந்த நீதியென்றும் சொல்லாமற் சொல்கின்றனர்-சுயநிர்ணயவுரிமையைத் தமிழருக்கு மறுக்கும்போது அதன் பின் ஒளிந்திருப்பது இலங்கையில் இனவாத முரண்பாடொன்றில்லை என்பதே!


தமிழ் மக்கள் மீதான சிங்கள ஆளும் வர்க்கத்தின் பல்லாண்டுகால "திமிர்த்தனமான" இனவொடுக்குமறையால் பாதிக்கப்பட்ட தமிழ்பேசும் இனத்தின் இருப்புக்கும்-தற்பாதுகாப்புக்குமான ஒரே அரசியல் அயுதமாகவேதாம் சுயநிர்ணயவுரிமைக் கோரிக்கையும் அதுசார்ந்த வெகுஜன அரசியலும்[ Alle Völker haben das Recht auf Selbstbestimmung. Kraft dieses Rechts entscheiden sie frei über ihren politischen Status und gestalten in Freiheit ihre wirtschaftliche, soziale und kulturelle Entwicklung.“-By Lenin, Über das Selbstbestimmungsrecht der Nationen, in: Ausgewählte Werke, Bd. I, Dietz, Berlin 1970, S. 687   ] தமிழ்பேசும் மக்களது அரசியலாக வருகிறது.அதை மறுப்பதன்வழி இலங்கையின் ஆளும் வர்க்கத்தைக் காத்து அவர்களது அடியாளகவே இந்த முன்னிலைச் சோசலிசக் கட்சி வகை இடதுசாரியம் இலங்கையில் சட்டவுரிமை பெற்றுச் செல்வாக்குச் செலுத்துகிறது.


இதைத் தாண்டிச் சமவுரிமைக்கான இயக்கம் இடதுசாரிய வேடங்கட்டிச் சிறுபான்மை மக்களினங்களை அண்மிக்கும்போது இதைப் பாட்டாளிகளது ஐக்கியத்துக்குக் குறுக்கே நிறுத்திச் சிங்களப் பாட்டாளிகளைப் பிளப்பதிலேயேதாம் சுயநிர்ணயவுரிமைக்கான நகர்வு வழிவிடுமென அபாய அறிவுப்புச் செய்து, பேரினவாதத்தைத் தொடர்ந்து ஒரு அரசியல் போக்காக இருத்தி வைக்கின்றனர்.


கூடவே,இத்தகைய அமைப்புகள் தமிழ்பேசும் மக்களுக்கான சுய நிர்ணயவுரிமையை மறுப்பதன் வாயிலாக-மகிந்தாவின் மொழியில் சொன்னால்- "இனவொடுக்குமுறை- இனமுரண்பாடொன்றே இலங்கையில் கிடையாது.மாறாகப் புலிப் பயங்கரவாதமே உண்டு" என்பதை இவர்களுஞ் சொல்லாமாற்சொன்ன அன்றைய நிலையில்,இன்றும் சுயநிர்ணயவுரிமைக்கு அதே ஆப்பு அடிக்கும்போது தமிழ்பேசும் மக்களுக்கான சுயநிர்ணயக் கோரிக்கையையும் அதுசார்ந்த சுயநிர்ணயத்துக்கான அரசியல் முன்னெடுப்பையுந்தாம் புலிக்கு நிகராக நிறுத்தி மாண்டுபோன புலியின் பாத்திரத்தை நிரப்புகிறார்கள்.


இத்தகைய நடாத்தையின் வழி,இனவாத இராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து தமிழ்பேசும் மக்கள்மீது கட்டவழ்த்துவிடவும்,அதையே நிலைப்படுத்தி அரசியல் சட்டவாக்கமாக்கித் தமிழ்பேசும் மக்களை இராணுவ ஆட்சிக்குள் கட்டிவைக்கும் நிலைக்கு மறைப்புக் கட்டவே தமிழ்பேசும் மக்களது சுயநிர்ணயக் கோரிக்கையை மறுப்பதன் அரசியற்றொடரில் இலங்கை அரசின் இனவொதுக்கலை நியாயப்படுத்தி விடுகிறார்கள்.


பிரதான எதிரியான சிங்கள ஆளும் வர்க்கமும் அதன் அரசும் வெறும் வர்க்க எதிரயாகவே காட்டப்படும்போது,தமிழ்பேசும் மக்களது "பிரதான முரண்பாடு இனவொடுக்குமுறை அல்ல " என்றாக்குகிறார்கள்.


இலங்கையில் "இனவொடுக்குமுறை இல்லை" என்பதில் இலங்கை அரசின் மொத்த குத்தகைக் காரர்களாகிறார்கள் இந்த வகை இடதுசாரிகள்.இவர்களை ஆதிரிப்பவர்கள் தம்மிடம் தமிழர்களது சுய நிர்ணயவுரிமைக்கான ஆதரவும்-ஏற்பும் உண்டென்றும்,சுய நிர்ணயத்தை ஆதரித்தபடி முன்னிலைச் சோசலிசக் கட்சியைத் தாம் ஆதரிப்பதென்பதும் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதமாகும்.


 தத்தம் எஜமானர்களுக்கான சேவகத்தோடு அடையாள நெருக்கடியிலிருந்து தற்காலிகமாக மீள்வதையுமே இவர்கள் கடமையாக ஏற்கின்றனரென்று நாம் கூறுவோம்.



ப.வி.ஸ்ரீரங்கன்
02.02.2013