Montag, Januar 18, 2010

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...

உலக இடதுசாரிமுகாமின் இழப்புகளாக இவர்களது மரணங்கள்...

டந்த ஆண்டின் இறுதியிலும்,இந்த ஆண்டின் ஆரம்பத்திலும் உலகக் கம்யூனிச முகாம் இரண்டு அதி முக்கியமான கோட்பாட்டாளர்களை-தத்துவவாதிகளை இழந்திருக்கிறது.கடந்தாண்டு இறுதியில்,ஜேர்மனிய இடதுசாரிய வட்டத்தின் பெருஞ்சிந்தனையாளரும்,பொருளாதார அறிஞரும்,உலக ஏகாதிபத்தியத்துக் எதிரான விமர்சகருமான யூர்க் கூப்ஸ்சிமித்தை(Prof.Dr.Juerg Huffschmid) இழந்தாம்.பேராசியர் கூப்சிமித் மிக முக்கியமான கோட்பாட்டாளர். ஜேர்மனியப் பாசிசத்துக்கு எதிரான போரில் எழுபதுகளில் ஜேர்மனிய மாணவர்களுக்கு வழிகாட்டியவர்.இதற்காக ஜேர்மனிய பெருநகரான பிறீமன் பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து மார்க்சியத்தை அரசியல் பொருளாதாரத்துறையுள் இணைத்துக் கற்பித்திருக்கிறார்.இவரது இழப்புக்குப் பின்பாக நாம் இப்போது, இழந்திருப்பது பிரான்சினது இடதுசாரியமுகாமின் செயல் வீரனும், அதிமுக்கியமான கோட்பாட்டாளரும் தத்துவவாதியுமான டானியல் பென்சாய்(franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaïd ). இரண்டாவது தடவையாகவும், பாசிச எதிர்ப்புப் போராட்டக்களம் தனது சிந்தனையாளர்களை,வழிகாட்டிகளை மெல்ல இழந்திருக்கிறது.



( Prof:Dr.Juerg Huffschmid)

கடந்த வருடம் டிசம்பர் 5.2009 அன்று ஜேர்மனிய மார்க்சியர், பேராசிரியர் யூர்க் கூப்சிமித் நோய்வாய்க்குட்பட்டுத் தனது 69வது வயதில் மரித்தார்.இது மிகப்பெரிய இழப்பாக இருந்தது.80 களில் மார்க்சிய ஆய்வு வட்டத்துக்கு(In den 80er Jahren war er Mitarbeiter des Instituts für Marxistische Studien und Forschungen(IMSF))இவர் மிகப்பெரிய பங்களிப்புச் செய்திருக்கிறார்.பல விதமான போராட்டப்பாத்திரத்தை உலகமயப் பகாசூர நிதிநிறுவனங்களுக்கெதிராகத் தொடர்ந்து நடாத்தியவர்.இவரது ஆய்வுள்,சிந்தனைகள் இருபத்தியோராம் நூற்றாண்டில் மார்க்சியத்தின் புதிய போராட்ட வியூகங்களைக் கட்டியமைத்தது.இவரது இழப்புக்குப் பின் இப்போது பிரஞ்சிய மரபு மார்க்சியர் டானியல் பென்சாய் இவ்வலகில் தனது போராட்டத்துக்கு முற்றுப் புள்ளிவைத்து, அதை உலகு தழுவியமுறையில் கையளித்துச் சென்றுள்ளார்.


12.ஜனவரி 2010.அன்று, பிரான்ஸ் இடதுசாரியவட்டத்து தத்துவவாதியம்,கோட்பாட்டாளரும் போராளியுமான டானியல் பென்சாய் இவ்வுலகில் தனது போராட்டத்தையும்,வழிகாட்டலையும்விட்டுச் சென்றிருக்கிறார்.ஐரோப்பியச் சூழலுள் 70களில், முதலாளித்துவப் பாசிச ஒடுக்குமுறைக்கெதிரான போராளிகளில் மிக முக்கியமான பேராற்றல்மிக்கவர்கள் பிரான்சிலும்,இத்தாலியிலும் இருவர்.அவர்களுள் ஒருவர் இந்தப் பிரஞ்சிய மார்க்சியரடிக்கல் டானியல் பென்சாய்.மற்றவர்,இத்தாலிய நவ மார்க்சியர் அன்ரோனியோ நெக்றி(Antonio Negri).

(Antonio Negri)

அன்ரோனியோ நெக்கிறி இன்று தனது கடந்தகால மார்க்சியப் புரிதலிருந்து-புரட்சிகர கட்சியினது போராட்ட,யுத்த தந்திரோபாயத்திலிருந்து வேறொரு பாதையில் இன்றைய பல்தேசியப் பொருளாதார நகர்வு குறித்துப் பேசிக்கொண்டிருக்கிறார்.இவரது புதிய நூல்களான Commonwealth, Goodbye Mr.Socialism போன்றவை மிகப் பெரிய சர்ச்யை இடதுசாரிய வட்டத்துக்குள் செய்தபடியிருக்கிறது.போராட்டப்பாதையில் அதன் செல்நெறிகுறித்து நிறைய மாற்றங்களைக் கோருபவராக இருக்கின்றார் நெக்றி(எழுபதுகளில் இவரது ஓப்பறாய் (Operaismus)அமைப்பு நடவடிக்கையானது மிகப் பெரிய இரத்தக்களிரியை இத்தாலியில் தோற்வித்தது.இந்தப் போராட்டமுறையானது அவருக்கு முப்பதாண்டுச் சிறையாக அமைந்து தோல்வியிலும் முடிந்தது பலருக்கு ஞாபகம் இருக்கும்).

தற்போதைய டானியல் பென்சாயினது இழப்பு, உண்மையான போராளியினது இடைவிடாத பல்முனைப் போராட்டத்துக்கு உதாரணமாக அமைந்துபோகிறது.சதா போரிட்டுக்கொண்டு பிரான்சினது வீதிகளில் மக்களது போராளியாக-மக்களைத்திரட்டிக்கொண்டு ஏகாதிபத்தியத்தைப் பாசிச அரசை எதிர்த்துப் போராடிய டானியல் பென்சாய், ஒரு அற்புதமான சிந்தனையாளன்.இவரது நூல்கள் ஜேர்மனிய மொழியில் முழுமையாக மொழியாக்கப்படவில்லை.குறிப்பட்ட தத்துவார்த்தத் தெரிவுகளின் ஜனநாயகம் என்றால் என்ன?மற்றும் சுயதீனம் என்றவை மிக முக்கியமான தத்துவார்த்தத் தேடலை உள்ளடக்கியது.சதா மிகப்பெரிய தத்துவப் போராட்டத்தைச் செய்த இந்த மரபு மார்க்சியப் போராளி, கோட்பாட்டுரீதியாவும் மிக முக்கியமானவர்.இடதுசாரிய வட்டத்துள் நாளாந்தம் விவாதிக்கப்படும் தத்துவார்த்தப் போக்குள் அன்ரோனியோ நெக்றி,டானியல் பென்சாய்க்கு முக்கியமான இடம் இருக்கிறது.


90களில் டானியல் பென்சாய்க்கும் அநன்ரோனியோ நெக்கிறிக்குமான அரசியல் நெருக்கும், நெக்கிறியின் பிரஞ்சியப் புகலிட வாழ்வில் ஆரம்பித்துக்கொண்டது. லூசியோ அல் தூசரது கொள்கைகளுக்கும் இருப்பியல்சார் கோட்பாட்டுக்களுக்கும் நாளாந்தம் டானியல் பென்சாய் பெரும் சர்ச்சைக்குரியவராகவும் அவரது போராட்டச் செல்நெறி இடதுசாரியவட்டத்துக்கு நாளாந்தம் பாரிய அடிபாட்டையும் ஏற்படுத்தியிருக்கிறது.

( franzoesische Theoretiker und Aktivist Daniel Bensaid )

என்றுபோதும்,மிகப் பெரும் முதலாளித்து எதிர்பாளரான இந்தத் தத்துவவாதி, உலகத்தின் முன் நமக்குப் பல உதாரணங்களைவிட்டுச் சென்றிருக்கிறார்.அல்ஜீரிய யூதப் பெற்றோருக்கு 1946 ஆம் ஆண்டு பிரான்ஸ் தூலூசில் பிறந்த டானியல் பென்சாய், பிரஞ்சியக் கம்யூனிசக் கட்சியில் இருந்து வெளியேறிவர்.பிரஞ்சிக் கம்யூனிச வாதிகளது பாராளுமன்றச் சகதியையும்,எதிர்ப்புரட்சி அரசியலையும் நிராகரித்து வெளியேறிய உண்மையான புரட்சிகாரன். இறுதிவரையும் புரட்சியைக் காட்டிக்கொடாத ஒரு பெரும் பாட்டாளிய வர்க்கத் தோழன்.எதிர்ப்புரட்சியை நிராகரித்து, புரட்சிகர இளைஞர் அணியை(Jeunesse communiste revolutionnaire-Revolutionary Communist Youth) 1966 இல் தோற்றுவித்து, உலகு தழுவிய ஏகாதிபத்திய எதிர்ப்போராட்டத்தில் பங்களித்த இந்த மார்க்சியரது இழப்பு மிக அதிகமான இழப்பாக இருக்கிறது.


இந்தவுலகத்தை மாற்றுவதிலும், முதலாளித்துவப் பயங்கரவாதப் பாசிசத்தை இல்லாதாக்குவதிலும் நேரடியாகக் களத்தில் நின்ற போராளியாக இருக்கும் அற்புதமான செயற்பாட்டாளர்கள் இருவரை, இப்போது ஐரோப்பிய இடதுசாரியவட்டமும் உலகமும் இழந்துபோனது எதிர்ப்பு அரசியலுக்கான நெருக்கடியைத் தோற்றுவித்திருக்கிறது.

பரந்துமட்ட மக்களது அரசியல் பொருளாதார வாழ்வுக்கான போராட்டத்தில் சலியாது போராடிககோண்டு, மாற்றுக்காகச் செயற்பாட்டில் இருந்த சிந்தனையாளர்கள்-போராளிகளில் இருவரை இழந்த இவ்வாண்டு கடினமான பணியை ஏகாதிபத்திய-பாசிச எதிப்புப் போராட்டக் களத்துக்குத் தந்திருக்கிறது.இறுதிவரை சளையாது போராடுவதும்,ஆய்வதும்-அறிவதும்,அதுசார்ந்து புதிய வியூகங்களை அமைப்பதையும் நாளாந்த வாழ்வாக்கிய இவர்களது வழியில் பயணிக்கும் ஒவ்வொரு பாட்டாளியவர்க்கச் சிந்தனையாளருக்கும் நாம் தலைசாய்கிறோமோ இல்லையோ, இவர்களது வழிகளையாவது புரிந்துகொண்டு உரையாடல்களையும்,போராட்டத்தையும் முன்னெடுத்தாகவேண்டும்.ஈடு செய்யமுடியாத சிந்தனையாளர்கள் இருவரது இழப்பும் நமக்குள் வெற்றிடத்தைத் தோற்றுவித்துள்ளது.


ப.வி.ஸ்ரீரங்கன்

வூப்பெற்றால்
ஜேர்மனி

18.01.2010